\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கணவரை இழந்த பெண்ணே

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 2 Comments

widow_520x728வெள்ளைப் புடவையில் வீட்டுக்குள்

வதங்கிக் கிடக்கிறாயே!

வண்ணப் புடைவையில் வானத்தில் நீ

வட்டமிட வேண்டாமா?

அந்நியமாய் வந்தவன்

ஐயோ எனப் போய்விட்டான்

அதற்காக

ஏன் அழிக்கிறாய் உன் பொட்டை?

ஏன் துறக்கிறாய் உன் பூவை?

ஏன் இழக்கிறாய் உன் சுதந்திரத்தை?

நேற்று வந்தவனால்

உன் நெற்றிப் பொட்டையே

இழக்கிறாய் நீ

தப்பித்தவறியும் – உன்

தன்மானத்தை, ஆளுமையை – ஏன்

உன்னையே இழந்து விடாதே!

ந.சிந்து
I – B.A(English) ‘B’.
வள்ளுவர் கல்லூரி

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. சத்திய மூர்த்தி says:

    மிக அருமை சிந்து.நல்ல கருத்து.

  2. Kamalini says:

    மிக அருமையான கருத்து… வாழ்த்துக்கள்… சிந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad