\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மரம்கொத்திப் பறவை

கொத்திக் கொத்தி நீ யெழுப்பு மோசைகூட

புத்திக்கு இதமாய் இசையாய் யமைந்ததுவோ

சங்கேத ஒலியிலுன் சகாக்களுடன் நீகுலவும்

சங்கீதக் காதல் மொழிக்கொரு சான்றாகுமாம்

 

கூரிய மூக்கால் முட்டி மரப்பட்டை யுரிக்கும்போது

வீறியெழும் வேகமுடன் குத்தியெழும் ஒலிதான்

இசைவடிவம் தருகின்ற எதிரொலியா யெங்கும்

விசையுடன் வெளியே வெகுவாய்க் கேட்குமாம்

 

இலைகளும் பூக்களுமுன் இன்னிசை கேட்டு

இசைந்தினிதே ஆடும் – மரமெல்லாம் தாளமிடும்

மரமீதில் அமர்ந்தாடித் தலையசைத் தாடுமழகேயது

மாபாரதத்தின் பெருமை சொல்லும் பரதமாகும்

 

மரங்களை மரணங்களிலிருந்து காக்கும் நீ

மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமப்பா

 

 

  • பெருவை பார்த்தசாரதி –

 

 

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad