\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வீடற்ற மனிதர்கள் யாம்

வீடற்ற மனிதர்கள் யாம்

வீணாகிப் போனோமே

வீடேறும் காலம் வரை

வீதியிலே வாழ்வோமே

 

விதியாலே நொருங்கி நின்றோம்

வித்தையெல்லாம் மறந்து நொந்தோம்

வீராப்பு, விறல் எல்லாம்

விரைவாக களைந்து நின்றோம்

 

விலங்கு போலே நடத்திடுவார்

விரைந்து எம்மை  கடந்திடுவார்

விரல் பட யோசிப்பார்  

விலக்கி வைக்க முயன்றிடுவார்

 

வீடற்ற மனிதர்கள் யாம்

வீணாகி போனோமே

வீடேறும் காலம் வரை

வீதியிலே வாழ்வோமே

 

வினா ஒன்று கேட்கின்றேன்

விளக்கிடுவீர் விடை தெரிந்தால்

விளவு உம்மை விட்ட நேரம்

விளம்புதல் செய்வீரோ

 

வீடற்ற மனிதர்கள் யாம்

வீணாகி போனோமே

வீடேறும் காலம் வரை

வீதியிலே வாழ்வோமே

 

-லக்ஷ்மி

Tags: , , ,

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. Vidya says:

    Wow.. very touching

  2. Vidya says:

    Very touching!!

  3. எம்.சக்திவேல் says:

    மிக ஆழமான வரிகள் வாழ்த்துக்கள்

  4. Anand says:

    Super .. very true statements … makes
    One thing – in particular the statement like
    விலங்கு போலே நடத்திடுவார்

    விரைந்து எம்மை கடந்திடுவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad