\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மழை இரவு !

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments

மழையே மழையே

மகிழ்ந்து மகிழ்ந்து

குழந்தைபோல் விளையாட  

விண்ணுக்கும் மண்ணுக்கும்

ஏணி அமைக்க வா !

 

மழையே மழையே

பகலவன் சூடு தணிய

விண்ணில் விளையாடும்

கருமேகமே மழைத்துளிகளை

மண்ணுக்கு மலர்போல்

இரவில் அள்ளி வீசு !

 

மழையே அந்தி மழையே

விண்ணில் சிந்து பாடி

மண்ணில் நொந்த உயிர்கள்

மகிழ்ந்து வாழ – நீ

மண்ணில் வந்து விளையாடு !

 

மழையே இரவு மழையே

மண்ணில் நீ வீழ்ந்தால்

மரம் செடிகொடிகள்

மகிழ்ந்து தலையாட்டும்

விண்ணில் தோன்றும்

முழுநிலவு மறைந்து

நின்று குடை பிடிக்கும் !

 

இரவில்

பெய்யும் மழைத்துளிகள்

ஏழையின் குடிசையில்

தலையாட்டும் மண்பானையில்

இனிய ஜலதரங்கம்

விடிய விடிய இசைக்கும் !

 

-கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Tags: , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad