\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கனவுகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 16, 2018 0 Comments

ஆழ்மனதில் அமிழ்ந்திருக்கும்,

நிகழ்வுகளும் நினைவுகளும்

உணர்வுகளும் உணர்ச்சிகளும்

எண்ணங்களின் வண்ணங்களும்

கற்பனையின் சிற்பங்களும்

அசைந்தெழுந்து மலர்ந்திடுமே

ஆழ்ந்துறங்கும் நித்திரையில்,

கனவுகளாய்!

 

மனங்களுக்கு மகிழ்வு தரும் கனவுகள் உண்டு

மனங்களையே கலங்க வைக்கும் கனவுகளும் உண்டு

கடமைகளை உணர வைக்கும் கனவுகள் உண்டு – மன

குழப்பத்திற்குத் தீர்வு தரும் கனவுகளும் உண்டு

வீரதீரச் செயல் புரியும் கனவுகள் உண்டு

வீறிட்டுக் கதற வைக்கும் கனவுகளும் உண்டு

 

கனவுகளில்…..

 

இன்பங்களில் திளைக்கலாம்

நினைத்ததெல்லாம் அடையலாம்

எட்டாத கோட்டைகளை ஏணி வைத்துப் பிடிக்கலாம்

 

வானுலகு செல்லலாம்

மேகத் தேரில் பறக்கலாம்

வளர் பிறையில் ஊஞ்சல் கட்டி வாஞ்சைத் தீர ஆடலாம்

 

நனவுகளில் நடவாத நினைவுகளையெல்லாம்

கனவுகளில் கண்டு ரசித்துக் காலமெல்லாம் மகிழலாம்!

 

இதயத்திற்கு இன்பம் தரும்

கனவுகளை எல்லாம்

யார் தடுக்க முடியும்

இப் பாருலகில்!

 

           – ஜெயக்குமார் சுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad