\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கடவுள்

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 1 Comment

kadavul_520x355கடவுள் என்றுண்டோ கற்பனை அதுதானோ
கருத்துத் தெளிவதோ கலங்கிய குளமதோ
கனவினில் உறைபவனோ கருத்தினை உரைத்தவனோ
கதிரவனாய் ஒளிர்பவனோ கருஇரவில் கரைந்தவனோ

கருணைக் கண்களோ கரம்மீது வாட்களோ
கன்னியின் வடிவமோ கட்டிளங் காளையோ
கருப்பு வண்ணமோ களைமிகு நல்லுருவமோ
கங்கைத் தலையனோ கயலவள் மறுபாதியோ

கன்னிகள் கேள்வனோ கற்பினுக் கரசனோ
கனகத்தின் அதிபனோ கந்தலுடை யாசகனோ
கள்வனின் காதலனோ களம்கண்ட காவலனோ
கதைபல கொண்டவனோ கதைக்கவொண்ணா நிஜமவனோ

கடவுள் ஒன்றுண்டோ கண்டவர் எவருளரோ
கண்டிலாப் பொருளன்றோ கருத்தினில் ஏற்பதுவோ
கருமம் பெரிதன்றோ கணக்காய்த் தெளிவோமோ
கடமை செய்வதுவே கடவுளாம் அறிவோமோ!!!

– மதுசூதனன். வெ.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. லெட்சுமணன் says:

    ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்
    அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்
    இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்
    நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad