\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இது கவியல்ல நிஜம்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments

ithu_kavithaiyalla_620x620வித்தகக் கவி நானென்று

விண்டுரைக்க வரவில்லை

முத்திரைக் கவி நானெழுதி

மூண்டெள முயலவில்லை

கொத்துக் கொத்தாய் எம்மவர்கள்

செத்து விழுந்தபோதும்

தத்துவங்கள் பேசியிங்கே

தரித்திரராய் வாழ்ந்திடுவோம்

 

மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து

மடிந்திடும் நிலைதான் கண்டும்

என்னுயிர் பிழைத்தல் வேண்டி

ஒதுங்கிநான் நிற்கக் கண்டு

முன்வாயிற் சொற்கள் சேர்ந்து

முரண்டு பிடித்தெனைக்  கொல்ல

என்னுடல் நிமிர்ந்து நானும்

ஏற்றந்தான் காண்பதெப்போ

 

சாப்பாடு இன்றியங்கே

தமிழ்ச்சாதி சாகக்கண்டும்

காப்பீடு ஏதுமில்லாக்

காரியங்கள் நாங்கள் செய்து

ஏற்பாடு ஏதும் இன்றி

ஆர்ப்பரித்தே எழுந்திடாமல்

கூப்பாடு போட்டு இங்கே

கும்மாளம் போட்டிருந்தோம்

 

வில்லில் இருந்து வெளிப்பட்ட

அம்புபோலத் தமிழ்ச்

சொல்லில் வார்த்தெடுத்தென்

ஆத்திரத்தைக் கொட்டி நல்லாய்

கல்லில் வடித்த சித்திரம் போல்

கவியெழுதி வைத்திருக்க

நல்லில் சொற்கள் இவையென்று

நவின்றதனைத் தூற்றிடுவர்

 

வெட்டிப் போட்டு எங்கள்

தமிழ்ச்சாதி மரித்த போது

தட்டிக் கேட்டு அங்கே

தடுத்தவர் யாருமில்லை

கொட்டித் தீர்த்து எந்தன்

கவிவரியை நான்வடித்தால்

தட்டிக் கழித்த பின்னதனில்

அரசியல் வாடை என்பர்.

 

மனக்கோலம் போட்டு நல்லாய்

மாண்புடனே வாழ்ந்த போதும்

வனக்கோலம் பூண்ட பின்னர்

வாழ்ந்ததெல்லாம் இழந்தபோதும்

தினக்கூலி வேலை செய்து

உயிர் பிழைத்து வாழ்ந்த போதும்

மனப்பிரமை பிடித்து நாங்கள்

மண்டியிட்டுப் போகவில்லை

 

அநியாயம் கண்டு எந்தன்

பேணாமை கண்ணுதிர்த்தால்

இதுஞாயம் இல்லையென்றென்

கவிவரியைக் கொய்யநிற்பர்

எதுஞாயம் என்றெனக்கு

எதுவுமே தெரியாதா

புதுஞாயம் வேண்டாம் புவிமேலே

நானும் மானிடந்தான்

 

  • தியா   –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad