\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கதை

வேர்களை வெறுக்காதீர்!

Filed in கதை, வார வெளியீடு by on September 8, 2022 1 Comment
வேர்களை வெறுக்காதீர்!

  காலையிலிருந்து மனது சற்று பாரமாய் இருப்பதாய்  உணர்ந்தாள், கோமதி. என்ன காரணம் என்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தபோது கூட, திடமான காரணங்கள் ஏதும் பிடிபடவில்லை. எப்போதாவது இவ்வகையான  உணர்வு அவளுக்குள் மேலோங்கும். அதை அனுபவிக்கும்போதெல்லாம், வாழ்க்கை என்ன வழவழவென்று இருக்கும் தேசிய நெடுஞ்சாலையா? ஒரே சீராய் மனம் பயணிக்க. மேடு பள்ளங்கள் நிறைந்த கிராமத்து மண் ரோடுதானே என்று சமாதானம் செய்து கொள்வாள்.   அவள் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலித்தது.   எடுத்தாள்.   […]

Continue Reading »

பண்ணை வீடு

பண்ணை வீடு

நேரம், அதிகாலை மணி இரண்டு முப்பது. பண்ணை வீட்டின் வெளிப்புற வீடாக அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் கண்மூடிய நிலையிலேயே விழித்திருந்தார் புண்ணியமூர்த்தி. பனிரெண்டு முப்பது மணி வாக்கில் திரும்பிப் படுத்தபொழுது முதுகுக்கு கீழே ஏதோ உறுத்துவது போல் தோன்ற, கண்விழித்து துழாவியவரின் கையில் அகப்பட்டது, பேத்திக்காக வாங்கியிருந்த விரல் நீள அழகிய மார்பிள் சிற்பம். கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் அப்படியே உறங்கிப் போயிருந்தார். அப்பொழுது வந்த விழிப்புதான் இன்னமும் அவரை உறங்கவிடாமல் தொடந்துகொண்டேயிருந்தது. எண்ண […]

Continue Reading »

வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்

வெங்காய மூட்டையும் ஞாயிற்றுக்கிழமையும்

மிக்சியில் ஏதோ அரைக்கப்போனவள் வலது புறம் திரும்பி முன்னறையை ஏன் பார்க்க வேண்டும்? அப்படியே பார்த்தாலும் அந்தக் காட்சி ஏன் என் கண்களில் பட வேண்டும்? ஒரு கையில் காப்பி கோப்பை. மறுகையில் படிக்க வசதியாக நான்காக மடக்கியபடி செய்திகளைச் சுடச்சுடத் தரும் The Straits Times செய்தித்தாள். கால்கள் இரண்டும் கீழே இருந்திருந்தால்கூட என்னோட கிறுக்கு புத்திய அடக்கி வச்சிருப்பேன். காப்பி டேபிள் கால்கள் டேபிளாகி இருந்தது. தொலைக்காட்சியில் உலக நடப்புகளை உடனுக்குடன் ஒளிபரப்பும் CNN […]

Continue Reading »

பதியம் போட்ட உறவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on June 19, 2022 0 Comments
பதியம் போட்ட உறவுகள்

(பனிப்பூக்கள் 2022 ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை) “கிராமத்தில் தனியா இருக்கிற அம்மாவை, இங்கே வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போகச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்…..” தயங்கியபடி யோசனையைச் சொல்லிவிட்டு, மனைவி சுகுனாவின் பதிலுக்காக காத்திருந்தேன். அம்மா உள்பட, கிராமத்து உறவினர்கள் எவரையும், குடும்பத்துக்குள் சேர்த்தால், ஒத்து வராது என்ற கருத்தில், கல்யாணம் ஆனதிலிருந்தே பிடிவாதமாக நின்றாள் அவள். சிறு வயதில் அம்மாவை இழந்து, அப்பாவின் ஒரே செல்லப் பெண்ணாக வளர்ந்து, நவீன […]

Continue Reading »

பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

Filed in கதை, வார வெளியீடு by on May 20, 2022 1 Comment
பலி-சிறுகதை போட்டியில் முதல் பரிசு வென்ற கதை

“என்ன குழந்தை?” என்று ‘துவாசை’ நோக்கிப் போய்க்கொண்டிருந்த பெருவிரைவு ரயிலிலில் ஒரு குரல் தெறித்தது. மொழிப் பாகுபாடின்றி பல தலைகள் குரல் வந்த திக்கில் திரும்பின. தன்யாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என அதுவரை மனத்தில் ஆக்கிரமித்திருந்த தவிப்பு அகிலனைவிட்டுத் தற்காலிகமாக விலக, குரலுக்கு உரியவனின் மேல் பார்வையை அனுப்பினான். அகிலனுக்கும் அவனுக்குமிடையில் நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தனர். அவனுக்கும் இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்திருந்த சீனர் ஒருவர் முணுமுணுத்தார். உறக்கம் கலைக்கப்பட்ட கோபம் அவரது வெளுத்த […]

Continue Reading »

ஃப்ளாஷ் பேக்

Filed in கதை, வார வெளியீடு by on February 15, 2022 0 Comments
ஃப்ளாஷ் பேக்

கல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான் கணேஷ். வெள்ளை நிறத் துணியில், உடலைச் சுற்றி கோடு போட்டது போல் ஊதா நிறத்தில் குதிரைப் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த சட்டை. குதிரைகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பல வரிசைகளாக மேலிருந்து கீழாக வருமாறு தைக்கப்பட்டிருந்தது. ஒரு வரிசை மார்பைச் சுற்றிவர, மத்தியில் அமைந்திருந்தது சட்டைக்கான பட்டன். மேலிருந்து இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டு, அப்பொழுதுதான் அரும்பத் தொடங்கியிருந்த பதின்பருவ ரோமங்களைக் காட்டிக் கொண்டிருந்தான் அவன். அதற்கு மேட்ச்சிங்க்காக […]

Continue Reading »

வெள்ளை நிறத்தொரு பூனை

Filed in கதை, வார வெளியீடு by on November 9, 2021 0 Comments
வெள்ளை நிறத்தொரு பூனை

எப்பொழுதும் கடும் வெயிலில் வாடும் சென்னை மாநகரம் அன்று  மார்கழி மாதக்  குளிரில் சற்றே நடுங்கி  கொண்டிருந்தது . விடியற்காலை மணி 6:30. பல்லாவரம் பெருமாள் கோவில் வாசலில் ஆண்டாளின் திருப்பாவையை, சில பக்தர்கள் பாடிக் கொண்டிருந்தனர்.  மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! பெருமாள் கோவில் பொங்கலுக்காக ஒரு கும்பல் காத்திருந்தது.  பாடுபவர்கள் இப்போதைக்கு முடிப்பதாக தெரியவில்லை!!  பொங்கலுக்காக நிற்கும் கும்பல் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை!! மாரிமுத்து இதைக் கவனித்தவாறே, தனது […]

Continue Reading »

வீரபத்திரர் மடை

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments
வீரபத்திரர் மடை

அறுபத்தைந்து வயதுக் கட்டைப் பிரமச்சாரி அவர். அழுக்குப் படிந்த வெற்றுத் தேகம், இறுக்கக் கட்டிய சாரம் கழுத்தில் ஒரு அழுக்குப் படிந்த துவாய், ஏறிய நெற்றி, நரைத்துப் போன பரட்டைத் தலை, சற்றுக் குழி விழுந்த கன்னங்கள், விசுக்கு விசுக்கென்று கைகளை வீசியபடி நடக்கும் வேக நடை, இதுவே இவரின் இன்றைய அடையாளங்கள்.  மூன்றாவது தடவையாகவும் அவர் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொன்னதும் தங்கத்தின் கண்களில் இருந்து நீர் முட்டிமோதி வெளியே வந்தது. இந்த அறுபது ஆண்டுகளில் […]

Continue Reading »

சந்தியாகாலம்

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments
சந்தியாகாலம்

🌿  அதிகாலைத் தூக்கத்தை அனுபவித்தபடி படுத்திருந்த அகரனைத் தொலைபேசி அடித்து விழிக்கச்செய்தது.  “கொழும்பிலிருந்து ஃபோன்கோல்” என்றதும்   மருண்டு கலவரப்பட்டான்.  அநேகமாக  அதிகாலைகளில் நல்லசெய்திகள் வருவதில்லை. யாராவது பணம் தேவையென்று குடைவார்கள்,  அல்லது குண்டுவீச்சில் எவருடையதாவது வீடு உடைந்துபோனதாயிருக்கும், அல்லது எவருடையதும் இழப்பாகவிருக்கும். அவன் பதட்டத்துடன் ரிசீவரைப் பிடித்திருக்கவும் மறுமுனையில் இருந்த சித்தார்த்தன்  ” அடேய்………. நம்ம சுப்பையா அப்பா இறந்துவிட்டாராம் ” என்றான். “அப்படியா சந்தோஷம் . . . . ! ”  “என்னடா  […]

Continue Reading »

நூறுரூபாய் தாள்

Filed in கதை, வார வெளியீடு by on October 13, 2021 0 Comments
நூறுரூபாய் தாள்

“இன்னைக்கு சண்டே. இருந்த ஆயிரம் ரூபாயும் காலியாகிடுச்சு. கையில ஒரு பைசா கூட இல்லை. திடீர்ன்னு சொந்தக்காரனுங்க எவனாவது வந்துட்டாங்கன்னா, அவ்வளவு தான் என்னோட நிலைமை. உடனே என்னோட பொண்டாட்டி போய் கறி எடுத்துட்டு வாங்கன்னு சொல்லிப்புடுவா… காசு இல்லன்னு சொன்னேன்; என்னை தூக்கிப் போட்டு மிதிச்சுடுவா… அப்புறம் இந்த பொழப்பு பொழைக்கிறதுக்குச் சாகலாம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம்  திட்டுவா.  அடேய்… சொந்தக்காரனுங்களா… தயவு செய்து எவனும் வீட்டுப்பக்கம் வந்துறாதீங்கடா… யாரும் வரதுக்கு வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad