\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஆதரவாளர்கள் பக்கம்

குழந்தை பெறாத தாய்

குழந்தை பெறாத தாய்

“ஏன்டீ…நாசமாப்போனவளே…இங்க என்னோட ரூம்ல தண்ணி வைக்க கூடாது…தண்ணி இல்லாம நான் சாவனும்….அதானே உன் நெனப்பு…சீக்கிரமா தண்ணி கொண்டா டீ” என்று கத்திக் கொண்டிருந்தாள்….ரேவதியின் மாமியார். ரேவதிக்கும்…ராகேஷ்க்கும் கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. திருமணமான புதிதிலே…இப்படி எல்லாம் இல்லை…மாமனார் மாமியார் இருவரும் பாசமாகத் தான் இருந்தனர். ஆண்டுகள் உருண்டு ஓட…ரேவதிக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல்…தவித்துக் கொண்டிருக்கும் வேளையில்…மாமனாரின் இறப்பும்…மகனுக்கு குழந்தை இல்லாமல் போனதற்கு காரணம் இவள் தான் என்ற கோபமும்… சேர்ந்து கொண்டதால் ….தன் வெறுப்புகளையும்…வருத்தங்களையும்..ரேவதியின் […]

Continue Reading »

செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது

செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது

கடந்த சில நாட்களாகவே செல்லத்தாயிப் பள்ளிக்கு வரவில்லை என்பது ஒரு வாரம் கழித்து அவளுடைய கணக்கு டீச்சர் மரியபுஷ்பம் சொல்லித்தான் செல்வராணிக்கே தெரிந்தது. அவளுடன் படிக்கும் யாருக்கும் அவள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பதற்கான காரணம் தெரிந்திருக்க வில்லை. “ஒருவேளை வயசுக்கு வந்தாலும் வந்துருப்பா டீச்சர். அதான் அவங்க வீட்டுல பள்ளீயூடத்துக்குப் போக வேணாமின்னு நிறுத்தியிருப்பாங்க….” என்றாள் செல்லத்தாயினுடனேயே எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் மரிக்கொழுந்து இலேசான குறுநகையுடன். அவள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம் என்று செல்வராணிக்கும் […]

Continue Reading »

அவலங்கள்

அவலங்கள்

உள்ளேயிருந்து குழந்தை வீறிட்டழுவது, வெளியே ஒரு பாறையில் அமர்ந்திருந்த சின்னசாமிக்குக் கேட்டது. மகள் வள்ளிக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதமாகிறது. இன்னும் அவள் வேலைக்குப் போகத் தொடங்கவில்லை. பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு உடல் தெம்பாக சிறிது காலமெடுக்கும்தான். ஆனால் அவளும் கொழுந்து பறிக்கப் போனால்தான் அந்த வீட்டில் புகை போலப் படிந்திருக்கும் பட்டினி கொஞ்சம் விலகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மழைக்காலத்தில் ஒரு நாள் திடீரென அம் மலையில் மண்சரிவு ஏற்பட்டு, தட்டுத்தட்டான மண் போர்வைகளுக்குக் […]

Continue Reading »

தாதுண் பறவை

தாதுண் பறவை

அச்செய்தி அவளது காதினில் விழுகையில், நெஞ்சுரைக்கூட்டுக்குள் இடி இறங்குவதைப் போலிருந்தது. அவள் ஓடிச்சென்று அவளது அப்பனை எழுப்பினாள். அவரோ நிறைமது மயக்கத்தில், எழுப்பியக் கையைத் தட்டிவிட்டபடி, போர்வையை இன்னும் தலை வரைக்குமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குபவராக இருந்தார். பூங்குழலிக்குத் தெருவை எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை. நடுநிசி நேரம். மச்ச இருட்டு. கூகை, சாத்தான் சொல்லும் செய்திக்கு ‘இம்’ போடுவதைப் போல முணங்கிக்கொண்டிருந்தது. அதைக் கேட்கயில், நிணநீர் உறைவதைப் போலிருந்தது. இந்தக் கூகையைப் பிடித்து […]

Continue Reading »

துறவு

துறவு

“என்ன டீச்சர், சாப்பாட்டுப்பைய மறந்துட்டுப் போறீங்க, வேணாமா?” நடத்துனர் பேருந்துக்குள்ளிருந்து நீட்டிய பையை வாங்கிக் கொண்ட தங்கம், அவனுக்கு நன்றி கூறுவது போலத் தலையசைக்க, பேருந்து நெடுஞ்சாலையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. பஸ் சென்று வளைவில் திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த தங்கம், வலது கையில் இருந்த டிஃபன் பாக்ஸ் பையைப் பார்த்துக் கொண்டாள், ‘இனி இது தேவையில்லைதான்.. இந்தப் பேருந்துக்கும் எனக்கும் இருந்த தினசரி தொடர்பு கூட இனி இருக்கப் போவதில்லை’ மனதுக்குள் ஏதோ பாரமாய் […]

Continue Reading »

எரிந்த பனைகள்

எரிந்த பனைகள்

‘அண்ணே உங்களுக்கு ஃபோன்! நம்ம வேலா அண்ணன்…’ ‘என்னது?  வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா? உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்…?’ என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு  ‘இல்ல… வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான்.. சொல்ல வந்த நான்’ என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது. ‘இந்தாங்க பிடிங்கண்ணே!’ என்று செல்ஃபோனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான நிலவறைப் பதுங்குகுழியை விட்டு சட்டென […]

Continue Reading »

தெய்வமும் மனிதனாகலாம்

தெய்வமும் மனிதனாகலாம்

சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையைத் தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும், எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது. மக்களோடு மக்களாய் நடந்து இராணுவத்தின் கண்ணிலிருந்து […]

Continue Reading »

கல்லூரிச் செலவிற்குத் தயாரா?

கல்லூரிச் செலவிற்குத் தயாரா?

அமெரிக்காவில் அரசு மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிப்பணம் மூலம் பள்ளிக்கல்வி இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசு வரிப்பணத்தில் 8% கல்விக்காகச் செலவிட, மீதி செலவை மாநில அரசின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் இருந்தாலும், அதில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவே. பள்ளிக்கல்வி இலவசமாக அளிக்கப்படும் அமெரிக்காவில் கல்லூரி கல்விக்கான கட்டணம் மிக அதிகம். அதையும் இலவசமாக அளிக்கலாமே என்று கேட்டால், அதற்கேற்ப மக்களால் வரி அதிகமாகக் கட்ட முடியுமா […]

Continue Reading »

அவள் குழந்தை

அவள் குழந்தை

விமானம் கிளம்பியதில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த பெண் ஏதோ பதட்டத்திலேயே இருக்கிறாள். உள்ளே வந்து இருக்கையில் அமரும் போதே பார்த்தேன். கண்களில், உடலில் ஒரு பதட்டம். மேலே பெட்டியை வைக்கும் போது கைகளில் ஒரு சின்ன நடுக்கம். நேராக உட்காராமல் சற்று சரிந்தே உட்கார்ந்தாள். சிறிது நேரம் வலப்புறம் திரும்பி மடிந்து அமர்ந்தாள். பொறுக்காமல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே மீண்டும் இடப் பக்கம் மடிந்து அமர்ந்து கண்களை மூடினாள். ஒரு ஐந்து நிமிடங்கள் […]

Continue Reading »

அம்மாவின் அழுகை

அம்மாவின் அழுகை

அம்மாவின் அழுகுரல் எந்த மகனின், மகளின் காதுக்கும் எட்டவில்லை ; எட்டினாலும் எந்த மகனுக்கும் , மகளுக்கம் மெய்யறிவு இல்லாததனால் அம்மாவின் அழுகுரலுக்கு செவிமடுக்கும் திறன் இல்லாதவர்களாக பிள்ளைகள் இருந்தார்கள். பிள்ளைகளின் காது செவிடாக இருந்து , காது கேட்காமல் இருந்திருந்தாலாவது தாயின் மனம் அமைதி பெற்றிருக்கும் ; செவிட்டுப் பிள்ளைகளுக்குக் காது கேட்கவில்லை …….. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற இரக்க உணர்வாவது தாயிற்கு மேலிட்டிருக்கும். சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்                      வகைதெரிவான் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad