\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிதை

சூதாட்டம்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 30, 2018 0 Comments
சூதாட்டம்

காசாசைச்  சூதாட்டம் காலத்தை வீணாக்கும் நாசமாக்கும் வாழ்வை நாளும்    சிதைக்கும் பேராசை என்றுமே பேரழிவைத்  தரும் ஏசப்படாமல் வாழ்வதே ஏற்றத்தைத்  தரும்   நாசம் விளைவிக்கும் நஞ்சுச்  செயல்களை வீசி எறிந்துவிடு விவேகத்தோடு வாழ்ந்திடு அசலாகி  வாழ்தலே ஆக்கம்  அளிக்கும் நிசமான  உழைப்பே நன்மை  செய்யும்   அறிவாய் இருத்தல் அனைவருக்கு மழகே   – சரஸ்வதி ராசேந்திரன்

Continue Reading »

வானத்தின் நாணம்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 30, 2018 0 Comments
வானத்தின் நாணம்

கன்னியவள் வழுவழுத்த கன்னங்களில் காதலன் தன் முத்தங்களின் இதழ் பதிக்க நாளங்களில் குருதி பொங்கி பாய்ந்தோடி நாணத்தினால் மதிவதனம் சிவந்தது போல், அந்தி மயங்கும் நேரத்திலே ஆதவனின் பொற்கரங்கள் அன்பு கொண்டு தழுவியதால் அந்தி வானம் சிவந்ததுவோ!.   சித்தினியின் சித்தமது சிறகடிக்க வஞ்சியவள் நெஞ்சமது துடிதுடிக்க காரிகையின் கண்ணிரண்டும் படபடக்க கைகளினால் முகம் மறைத்த காதலி போல், கடல் அன்னை அலை எழுப்பிப் பரிகசிக்க வான் பறவை கானம் பாடி வாழ்த்துக் கூற வான் மகளும் நாணத்தினால் முகம் சிவக்க […]

Continue Reading »

பூப்பனை என்றாகி..

Filed in கவிதை, வார வெளியீடு by on September 16, 2018 0 Comments
பூப்பனை என்றாகி..

நான் பூப்பனையானேன் பூத்துக்கொண்டே வளர்கிறேன் எனது பூவில் அழகில்லை எனது பூவில் இனிமை இல்லை எனது பூவில் ஒரு கனவும் இல்லை கடல் ஓரத்து மணல் வெளியில் உயர்ந்து நிற்கிறேன் கடற் காற்றின் தடவுதலில் நான் வளர்ந்து போகிறேன். எனது முகத்தில் உதயசூரியன் உப்பு நீரைத் தெளித்துவிடுவான் உப்புக் காற்றைச் சாமரத்தோடு கலப்பான் கானலை விசிறுவான் போதையோடு சரிந்துகிடக்கும் மனிதக் கட்டைகள் என்னைத் தூரமாய்ப் பார்த்து உரையாடுவர். நான் பூப்பனையானேன் எள்ளிநகைக்கும்  தூக்கணாங்குருவிகள் என்னில் கூடுகளுக்குச் சொருகும் […]

Continue Reading »

கனவுகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 16, 2018 0 Comments
கனவுகள்

ஆழ்மனதில் அமிழ்ந்திருக்கும், நிகழ்வுகளும் நினைவுகளும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களின் வண்ணங்களும் கற்பனையின் சிற்பங்களும் அசைந்தெழுந்து மலர்ந்திடுமே ஆழ்ந்துறங்கும் நித்திரையில், கனவுகளாய்!   மனங்களுக்கு மகிழ்வு தரும் கனவுகள் உண்டு மனங்களையே கலங்க வைக்கும் கனவுகளும் உண்டு கடமைகளை உணர வைக்கும் கனவுகள் உண்டு – மன குழப்பத்திற்குத் தீர்வு தரும் கனவுகளும் உண்டு வீரதீரச் செயல் புரியும் கனவுகள் உண்டு வீறிட்டுக் கதற வைக்கும் கனவுகளும் உண்டு   கனவுகளில்…..   இன்பங்களில் திளைக்கலாம் நினைத்ததெல்லாம் அடையலாம் […]

Continue Reading »

பரதேசிகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 16, 2018 0 Comments
பரதேசிகள்

நாற்றங்காலில் புற்களுக்கிடையில் முளைத்திருக்கும் நாற்றுகளைத் தப்பாமல் எடுத்து முடிபோடுவார் தாத்தா நடவுநட்டு மீந்த நாற்றுகளை யாருக்காவது தானமளிப்பர்  விவசாயிகள் நெற்கட்டுகளைத் தூக்க இன்னும்நாங்கள் வளராததால் தப்புகதிர்களைப் பொறுக்கும் வேலை எங்களுக்கு களத்துமேட்டில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை ஒன்றுவிடாமல் பொறுக்கிடுவாள் பாட்டி கமிட்டியில் அநியாய விலைக்கு எடுத்தாலும் எடைபோட்டப்பிறகும் இனி நமக்கென்ன லாபம் என்றெண்ணாமல் கொட்டிக்கிடக்கும் நெற்களை அள்ளி மூட்டையில் போட்டுவிட்டு வெளியேறுவார் அப்பா குழந்தை சிந்திய சோற்றுப் பருக்கைகளைத் தம் உணவோடு சேர்த்துத்திண்பாள் தாய் பட்டினிச்சாவறியா பரதேசிகள் கை […]

Continue Reading »

அலை பாயும் மனதினிலே !

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
அலை பாயும் மனதினிலே !

சிற்பி கையிலே சிற்றுளி செதுக்க முடியாமல் சிலையாக நின்றான் அலைபாயும் மனதோடு !   அவன் வசிப்பது வசந்த மாளிகை புசிப்பது அறுசுவை உணவு துயில்வது பஞ்சு மெத்தை துக்கம் மனதோடு தழுவி தூக்கம் கண்களைத் தழுவாமல் தூங்காமல் அலை பாய்கிறதே!   அவன் பொய் முகத்தை மெய் முகமெனக் காட்டி பணம் பதவி புகழ் நாட்டி பசித்தவன் போல் மன நிம்மதி தேடி கடல் அலைகள்போல் கவலையில் அலைகின்றானே !   உலகில் காதலே அலைபோலே […]

Continue Reading »

உயிர்ச்சொற்களுக்கான சவப்பெட்டி

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
உயிர்ச்சொற்களுக்கான சவப்பெட்டி

எப்போதுமான முகாந்திரமற்ற இலையுதிர்தல் தொடர்கிறது வீதியின் விளிம்புகளில்….. வசந்தத்தை ஒரு வாளியில் மொள்ளுகிறது ஆளும் அரசுகள். ஆங்காங்கே உடைந்துக்கிடக்கின்றன செத்துப்போன இந்திய நாணயங்கள் காலாற நடந்த வீதியின் வீச்சை கணத்த இதயத்தோடு பார்க்கும் நடுத்தரவர்க்க நாய்கள் அவ்வப்போது முளைக்கும் இலவச எலும்புத்துண்டுகள் கூப்பாடு போடலாமென்று கூடிமுடிவெடுத்தது வாலாட்டிக்கூட்டங்கள். நிமிர்த்தவா முடியும்? எப்போதும்போல் வந்தது ஐந்தாண்டுக்கொருமுறை நாடகம். கிடைத்தன எலும்புத்துண்டுகள் ஜனநாயகத்தின் வாய்மூடிவிட்டது. ஜனங்களின் வயிறுகள் காலிக்குடுவைகள். மக்களுக்கான சவப்பெட்டியை மக்களே சுமந்தனர் மடிநிறைய. பெட்டிநிறைய வழிந்தது மக்களாட்சி… […]

Continue Reading »

அழகே..

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
அழகே..

குளுகுளு காற்று அழுவது கேட்டேன் உன் பார்வையின் குளுமை அதற்கில்லையாம்   சலசலத்தோடும் நதியின் கண்ணீர் பார்த்தேன் உன் நகைத்தல் இனிமை தன்னிடம் இல்லையாம்   பளபளத்து ஜொலித்தபூ வாடிடக் கண்டேன் உன்னுதட்டு பொலிவைப் பெறுவது கடினமாம்   பரபரக்கும் பட்டாம்பூச்சி பறவாமைக் கண்டேன் உன் முகவண்ணம் கண்டு பொறாமை கூடியதாம்   வரிவரியாக எழுதும் கவிஞரின் வெற்றுத்தாள் கண்டேன் உன் நளினத்திற்கு உவமை காணாமல் தவித்தாராம்   தரதரவெனக் காளையர்கள் கண்ணிமைக்காதது கண்டேன் உன் சிலைவடிவைக் […]

Continue Reading »

காளிங்க மர்த்தனம்!!

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
காளிங்க மர்த்தனம்!!

கண்களுக்கு இனியவனாம் கண்ணன் காட்சிக்கு இனியதுவாம் கடவுள் கண்களால் ரசிப்பதுவோ கண்ணன் – அகக் காட்சியாய்த் தொழுதிடவோ கடவுள் ஆயர்பாடி மாளிகையில்  அயர்ந்திருந்த கண்ணனவன் வாயதனில் மண்ணுண்டு தேயத்தைக் காட்டியவன் மாயங்கள் பலசெய்து  நியாயத்தை நாட்டியவன் தாயங்கள் ஒழித்தழித்த தர்மங்கள் மீட்டவனவன்!! காளிங்கன் என்றொரு கடும்விஷப் பாம்பு கலக்கிய விஷமது யமுனை வியாபித்து காகம் குருவிமுதல் கருடன் போன்றவையும் கடல்வாழ் உயிரினமும் கருக்கிச் சரித்தது!! இன்னுயிர் அனைத்தும் இன்னலைத் தழுவ மன்னுயிர் பலவும்  மாண்டொழிதல் மாற தன்னுயிர் […]

Continue Reading »

மழை இரவு !

Filed in கவிதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments
மழை இரவு !

மழையே மழையே மகிழ்ந்து மகிழ்ந்து குழந்தைபோல் விளையாட   விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏணி அமைக்க வா !   மழையே மழையே பகலவன் சூடு தணிய விண்ணில் விளையாடும் கருமேகமே மழைத்துளிகளை மண்ணுக்கு மலர்போல் இரவில் அள்ளி வீசு !   மழையே அந்தி மழையே விண்ணில் சிந்து பாடி மண்ணில் நொந்த உயிர்கள் மகிழ்ந்து வாழ – நீ மண்ணில் வந்து விளையாடு !   மழையே இரவு மழையே மண்ணில் நீ வீழ்ந்தால் மரம் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad