\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

பரதேசிகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on September 16, 2018 0 Comments

நாற்றங்காலில்
புற்களுக்கிடையில் முளைத்திருக்கும்
நாற்றுகளைத் தப்பாமல் எடுத்து
முடிபோடுவார் தாத்தா

நடவுநட்டு மீந்த நாற்றுகளை
யாருக்காவது தானமளிப்பர்  விவசாயிகள்

நெற்கட்டுகளைத் தூக்க
இன்னும்நாங்கள் வளராததால்
தப்புகதிர்களைப் பொறுக்கும்
வேலை எங்களுக்கு

களத்துமேட்டில் சிதறிக்கிடக்கும்
நெல்மணிகளை
ஒன்றுவிடாமல் பொறுக்கிடுவாள் பாட்டி

கமிட்டியில் அநியாய விலைக்கு
எடுத்தாலும் எடைபோட்டப்பிறகும் இனி நமக்கென்ன லாபம் என்றெண்ணாமல்
கொட்டிக்கிடக்கும் நெற்களை அள்ளி மூட்டையில் போட்டுவிட்டு வெளியேறுவார் அப்பா

குழந்தை சிந்திய சோற்றுப் பருக்கைகளைத் தம் உணவோடு சேர்த்துத்திண்பாள் தாய்

பட்டினிச்சாவறியா
பரதேசிகள்
கை கழுவிடுகிறார்கள்
தட்டுச்சோற்றில். 

ஸ்ரீரங்கராஜபுரம் துளசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad