\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கவிதை

இனி ஒரு விதி செய்வோம்

இனி ஒரு விதி செய்வோம்

இங்கே விதிகள் பலவகை உண்டே இவைகளை உடைத்திட  இங்கேயே யாருண்டு?   தேவதூதனைத் தேடுகிறோம் அவதாரங்களுக்காக  அங்கலாய்கிறோம்   மனிதம் இங்கே  தலை தூக்கிட   மானிட சமுதாயம் மாறிடவே வழிவகுப்போம்   சமுதாய நீதியைச் சமைத்திட சாதித்திடுவோம்   ஆண் பெண்  இரண்டே சாதி   எல்லாமும் எல்லோருக்குமே கிடைப்பதே சமூகநீதி   அன்பின் உலகம்  ஆர்வமாய் படைத்திட்டே   அகிலம் சிறக்க பாடு படுவோம்   உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம்   சமைத்திடவே […]

Continue Reading »

இறைத்தூதர்

இறைத்தூதர்

அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க,   அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற   அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]

Continue Reading »

இயேசு பிறப்பு நற்செய்தி

இயேசு பிறப்பு நற்செய்தி

ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட   ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட   ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட  ஆன்ம இசை விருந்துகள்  ஆசையாய் அரங்கேற   ஆகம வார்த்தையானவரை  ஆனந்த பாசுரம் பாடி  ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட   ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]

Continue Reading »

இடி, மின்னல், மழை மங்கை!

இடி, மின்னல், மழை மங்கை!

நெற்றிப் பரப்பினில் சுற்றிப் பறந்திடும் கற்றைக் கூந்தலைச் சற்றே விலக்கிச் சிரித்தாள்!!   விலக்கலில் வழிந்த வியர்வையும் மெதுவாய் விழிகளைத் தாண்டி விழுவதில் விழுந்தேன்!!   நாசிகளைக் கடக்கையில் சுவாசித்துத் தணிந்ததால் வீசிய கனலது தூசியாய் மேகமாகியது!   மங்கையின் வியர்வையும் பொங்கிய கனலினால் தங்கியே வான்புக கங்கையாய்ப் பொழியுதோ?   கண்ணதன் ஒளியுமே மண்ணிதின் மீதிலே எண்ணத்தின் வேகமாய் மின்னலாய்ப் பாய்ந்ததோ?   கன்னியவள் குலுங்கிடக் கடலலையும் குதித்திடுமோ? என்னவளும் சிணுங்கிட இடியதுவும் சினந்திடுமோ?   […]

Continue Reading »

குடும்பத்தலைவி

குடும்பத்தலைவி

குடும்பம் என்பது மரமானால்- அதில் அடியும் வேரும் நீ தானே! பாசக் கிளைகள்  விரிந்தோட-அதில் அன்பாய் இலைகள் நீ தானே! பிள்ளைகள் என்பது விழுதாகும்- அது பிரிந்து வேர் ஊன்ற பெரிதாகும்!! மழையோ, புயலோ வந்தாலும்- அது உந்தன் உறுதியில்  கரைந்தோடும்! உன் உழைப்பில் பெரிதாகும்- மரம் உலகம் வியக்க செழித்தோங்கும்! குடும்பத் தலைவி பெண்ணே நீ உந்தன் – சிரிப்பில் பூ பூக்கும்!! உலகம் இயங்கும் உன்னாலே – வணங்கிப் போற்றுவோம் என் நாளும்!! இளங்கோ […]

Continue Reading »

விலங்கு

விலங்கு

விலங்கிட்டு எனைப் பூட்ட விலங்கா நான்? விளங்காத இந்நினைப்பை விலக்கவும் இயலவில்லை! விலங்கிடப் பட்டேன் நான்! விலங்காக நடத்தப்பட்டேன்! விலகவும் இயலவில்லை விளக்கவும் எவருமில்லை! விளக்காய் ஒளி வீச விழைந்தே அவதரித்தேன்! விலங்கான மனிதர்களால் விளங்காத துயரடைந்தேன்! விலகிப் போகையிலே விழவைத்துச் சிரித்தனர்! விளங்கா வயதினையும் விதைக்குள்ளே ஒழித்தனர்! விலக வேண்டும் இனவெறி! விலக்க வேண்டும் வன்முறை! விளக்க வேண்டும் மானுடர்க்கே விரிவாக அஹிம்சைதனை!! வெ. மதுசூதனன்.

Continue Reading »

பெண்மை

பெண்மை

பிறப்பில் தொடங்கி என்னை இறப்பு வரைக்கும் இங்கே சிறப்பாய்க் காத்தவள் பெண், மறுப்பு இதற்கேது சொல்?   கருவில் தாங்கி, கற்பக தருவாய் ஈன்று, என்னை வருவாய் மலரேயென்று அற்புதத் திருவாய் மலர்ந்தவள் அன்னை!   சிறுவனாய் நான் அலைகயிலே சிறியதாய்த் தோன்றும் செயலும் ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த திறமையைக் கற்றிடாக் காரணத்தால்   அருகிலே வந்து அமர்ந்து பெருகிய நற் பாசத்தோடு மருகிய விழிநீர் துடைத்து உருகியே உதவியவள் அக்காள்!   பள்ளி போகும் பருவத்திலே […]

Continue Reading »

காதல் கிளை பரப்பிய மரம்

காதல் கிளை பரப்பிய மரம்

ஒற்றை சிவப்பு ரோஜா! உலர்ந்த மலர், சீரற்ற அளவில் அழுத்தியது கையை. உலர்ந்த சிவப்பு! திறந்த பழைய புத்தகம்! என் காலத்தை நினைவுபடுத்தியது. அது உன்னை இன்னும் எனக்கு, நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பரிசு நீ. அதை நீ எனக்கு வழங்கிய நாள், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உன் கருவிழி உருட்டி என்னை ஏறிட்டுப் பார்க்கையில் நீ அங்கேயே என்னை மையம் கொள்ள வைத்து விட்டாய். அன்று நீ என் இதயத்தில் தூவிய […]

Continue Reading »

காதல் எப்படி பேசுகிறது

காதல் எப்படி பேசுகிறது

காதல் எப்படி பேசுகிறது கன்னக்குழி அழகில் மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில் மிரளும் கண் விழியின் தவிப்பில் பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில் புன்னகையின் இதழவிழ்ப்பில் அன்பு தளும்பும் மென்மொழியில் சீரற்ற இதயத் துடிப்பில் தனிமையில், மௌனத்தில் மற்றும் கண்ணீரில் காதல் பேசுகிறது. மின்னும் கண் பயத்தில் இணை சேர்ந்த மகிழ்ச்சியில் பெருமிதத்தில், பெரும் இதயத்துள் காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது. அன்பான முகத்தில் சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில் வெட்கத் தொடுதலில் மகிழ்ச்சி மற்றும் வலிகளின் […]

Continue Reading »

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2022

Filed in கவிதை, வார வெளியீடு by on December 29, 2021 0 Comments
புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2022

கண் விழித்து நான் எழுந்தேன்…. கனவின் நங்கை கண் முன்னே! கிள்ளி எனை நான் உணர்ந்து காண்பது நனவென உறுதி செய்தேன்! கன்னியவள் அருகே கனிவுடனே வந்து கவனத்தை நெருடி காதலுடன் பருகி கள்ளமற்ற சிரிப்பை கரையின்றி வழங்கி குறும்புப் பார்வையில் குழப்பம் விலக்கினாள்!   காலம் காட்டி நாட்களாய்க் கிழிக்கப்பட கருவிருந்து வெளி வந்தேன் என்றாள்! காலச் சக்கரம் ஓராண்டு சுழன்றிட கடமை மாறாது அடுத்ததாய் உதித்தேனென்றாள்!   நானே ஆண்டு இரண்டாயிரத்து இருபத்தொன்று, நாசமிகு […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad