\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

கதை

நானே சிந்திச்சேன் – கிரகப்பிரவேசங்கள்

Filed in கதை, வார வெளியீடு by on March 13, 2024 0 Comments
நானே சிந்திச்சேன் – கிரகப்பிரவேசங்கள்

  சென்ற ஞாயிறன்று ஃபோன் போட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த ஜனா, திடிரென்று, “வரதுக்கு ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேன்றான்.. ஒரு நிமிஷம் இரு.. கான்ஃப்ரன்ஸ் போட்டுப் பாக்கலாம் “ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராமல் வரதுவை அழைத்துவிட்டான். சில நிமிடங்களில் “சொல்லுங்கடா..எப்டி இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே வரது இணைந்துகொண்டான். “என்ன மாப்ளே … ஆளப் பிடிக்கவே முடில .. பயங்கர பிசி போல” என்றான் ஜனா. “ஆமாடா மச்சி .. வரிசையா கிரகப்பிரவேசமா […]

Continue Reading »

சுறை வேறு!

Filed in கதை, வார வெளியீடு by on February 13, 2024 0 Comments
சுறை வேறு!

“ஏன்னா, நோட் பண்ணேளா நம்ம பாரதிய? நேத்து அந்த சினிமாவுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே டல்லா இருக்காளே?” ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷைக் கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் லக்‌ஷ்மி. டி.வி.யில் ரங்கராஜ் பாண்டே வழக்கம்போல் அந்த தேவேந்திரனைப் பிரித்து மேய்வதை ரசித்துக் கொண்டே, கவனத்தை டி.வி.யை விட்டு விலக்காமல், சற்றும் ஈடுபாடில்லாமல் “என்னடி சொல்ற?” என்று கேட்டான் கணேஷ்.  “அதானே, நான் சொல்றதுல என்னக்கு கவனமிருந்துது உங்களுக்கு; எப்பப்பாத்தாலும் ஏதோ […]

Continue Reading »

இப்படியோர் தாலாட்டுப் பாடவா?

Filed in கதை, வார வெளியீடு by on January 16, 2024 0 Comments
இப்படியோர் தாலாட்டுப் பாடவா?

டாக்ஸி வீட்டின் முன் வந்து நின்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள் காஞ்சனா. உள்ளேயிருந்து வேகமாக வந்த குமுதவல்லி கைக்குழந்தையை வாங்கிக் கொண்டு  மகளின் தலையைக் கோதியவாறு உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். காஞ்சனாவின் அப்பா டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு பையை உள்ளே தூக்கிக் கொண்டு வந்த போது ‘‘இப்போதும் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?’’ கொஞ்சம் கோபம் கலந்த தொனியோடு கேட்டார். ‘‘அவள் சோகம் அவளோடு. அவளை ஏன் வீணாகக் கடிந்து கொள்கிறீர்கள்?’’ என்றாள் குமுதவல்லி […]

Continue Reading »

செம்புலம்

செம்புலம்

முன் குறிப்பு: நிஜங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நினைவான நிழற்கதை! 1919 ஆம் வருடம், ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் திகதி, அறுவடை முடிந்து பஞ்சாப் மக்கள் சூரியனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடும் பைசாகித் திருநாள். மாலை சுமார் நான்கு மணி முப்பது நிமிடம்!!! அமிர்தசரஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அக்ரஹாரம். பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து குடி பெயர்ந்த பல குடும்பங்கள் தங்கியிருந்த அந்த வீதியை அவர்கள் அக்ரஹாரம் என்று அழைத்தனர். அங்கிருந்து ஒரு ஃபர்லாங்க் தூரம் […]

Continue Reading »

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2023 0 Comments
நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா?

நானே சிந்திச்சேன் – கல்வியா? கைத்தொழிலா? “என்னதான் சொல்லு.. ‘டன்கின்ஸ்’ காஃபியை அடிச்சுக்க முடியாது மச்சி” – காபி கப்பை மேஜையில் வைத்துவிட்டு, ‘கிளேஸ்ட் டோனட்’ ஒன்றைப் பக்குவமாகப் பிடித்தபடி, பேச்சைத் தொடங்கினான் ஜனா. “ஆமாமா.. அதுக்குத்தானே ‘அமெரிக்கா ரன்ஸ் ஆன் ‘டன்கின்ஸ்’ன்னு சொல்றாங்க..” “எவன் அப்டி சொன்னது.. ‘டன்கின்ஸ்’ ரன்ஸ் ஆன் யூ.. நம்ப குஜ்ஜு ஆளுங்கதான் இந்த காஃபி சாம்ராஜ்யத்தையே கட்டி ஆளறாங்க.. குஜராத்துன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பாத்தியா? செம […]

Continue Reading »

யாரவள்?

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2023 0 Comments
யாரவள்?

தீ ஜுவாலை போல் அதிகாலை சூரிய வெளிச்சம் தொலைவிலிருந்த நீர்த்தேக்கத்தில் பட்டு அந்தப் பகுதியையே ஜொலிக்கச் செய்துகொண்டிருந்தது. மஞ்சளையும், குங்குமச் சிவப்பையும் கலந்து, குழைத்தெடுத்துத் திட்டுத் திட்டாய்ப் பூசியது போன்ற வர்ண ஜாலம். குளப் பகுதியின் அருகில், சிறிய நாரைக் குடும்பம் ஒன்று, சுறுசுறுப்புடன் இரை தேடி இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தது. அதிலும் அந்த குட்டி நாரைக்கு அதிகப் பசி போல. பெரிய நாரைகளுக்கு முன்னால் நடந்தவாறு, அலகினால் நிலத்தில் குத்திக் குத்தி பசியாற்றிக் கொண்டது. பின்புல சூரிய […]

Continue Reading »

நானே சிந்திச்சேன்..

Filed in கதை, வார வெளியீடு by on October 3, 2023 0 Comments
நானே சிந்திச்சேன்..

போன வாரத்துல ஒரு நாள் சாயங்காலம்.. வேலையெல்லாம் முடிச்சுட்டு, கொஞ்ச நேரம் விஸ்ராந்தியா உட்காரலாம்னு நெனச்ச நேரத்துல கரெக்டா, ஜனா ஃபோன் பண்ணினான்.. “ஏ மச்சி .. இந்த வீக் எண்ட் என்ன பண்ணப் போற?” ன்னு கேட்டான்.. இவன் எதுக்கோ தூண்டில் போடப்போறான்னு நெனச்சி “இந்த வாரமா? என் வொய்ஃப் ரொம்ப நாளா சொல்லிகிட்டே இருந்தா.. இந்தத் தோட்டத்துக்குச் செடியெல்லாம் வாங்கணும்.. ‘டாம்பா’ல ஒரு பெரிய ஆர்பரிட்டம் இருக்காம்.. போயிட்டு வந்துடலாம்னு.. அதான் ‘டாம்பா’ போலாம்னு […]

Continue Reading »

இளமையில் கொல்..

Filed in கதை, வார வெளியீடு by on October 3, 2023 0 Comments
இளமையில் கொல்..

  ‘வாரன் லைப்ரரி’யைக் கடந்து இரண்டு மூன்று நிமிடங்களிலேயே ‘எலிசபெத் எஸ்டேட்ஸ்’க்கான என்ட்ரன்ஸ் வந்துவிட்டது. ‘பாம் பீச்’ பகுதி, ஃப்ளாரிடாவிலேயே மிக மிக வசதி படைத்தவர்கள் வசிக்கக் கூடிய பகுதி என்று தெரிந்திருந்தாலும், ‘எலிசபெத் எஸ்டேட்ஸின்’ கூடுதலான ஆடம்பரப் பகட்டு, மேசனுக்குப் பிரமிப்பு தந்தது.  குறைந்தது மூன்று ஏக்கரில் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பங்களாவும், மற்றதை விட பிரம்மாண்டமாக இருப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றும் எப்படியும் குறைந்தபட்சம் 20 மில்லியன் போகுமென மேசனின் மூளை கணக்கிட்டது. இரு புறங்களிலும் […]

Continue Reading »

கவரிமான் ராமாயி

Filed in கதை, வார வெளியீடு by on November 26, 2022 0 Comments
கவரிமான் ராமாயி

உழைத்து உரமேறிய உடம்பு. நாவல்பழ நிறம். கண்களில் வைராக்கியம். அலங்காரமோ, நகைகளோ கிடையாது. பின்கொசுவம் வைத்துக் கட்டிய நூல் சேலை. அள்ளிச் செருகிய கொண்டை. கால்களில் ரப்பர் செருப்பு. ஆரம்பத்தில் அணிந்த தண்டட்டியால் வளர்ந்த காதுகள். இதுதான் ராமாயி. மானாமதுரையை அடுத்த கொம்புக்காரநேந்தல், அவள் பிறந்த ஊர்.  ஒரு தடவை, 1970 வாக்கில் அக்கரையில் இருக்கும் அம்மாவின் தோழி மதுரம் மாமி வீட்டுக் கொலுவிற்குப் போன போது அறிமுகம். நேர்த்தியாக அடுக்கப்பட்ட பொம்மைகள். சுத்தமாகத் துடைக்கப் பட்ட […]

Continue Reading »

கங்கா

கங்கா

“ஸாரிம்மா தீபிகா” என்றேன் உண்மையான மன வருத்தத்துடன். “இன்னும் ரெண்டே நாளில் அவளுக்கு பரிட்சை. கோபிச்சுண்டு அவள் “மூடை” அவுட்டாகிக்கியாச்சு. ஸாரி என்ன வேண்டிக்கிடக்கு? ஸாரியாம் ஸாரி…” என்று மனைவி உஷா படபடவென்று வெடித்தாள். பிறகு சுமுகமான சூழல் வரவேண்டுமே என்று எண்ணினாளோ என்னவோ, “எனக்கு வேணுமானால் வீட்டில் கட்டிக்க ரெண்டு ஸாரி வாங்கிக் கொடுங்கள்! ஸல்வார் நிறைய இருக்கு” என்றாள். என் தவற்றை உணர்ந்தேன். மேலும் ஏதாவது பதிலுக்குப் பேசினால் அது வீண் விவாதத்தில்தான் முடியும் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad