
இலக்கியம்
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.! – நாலடியார் பாடல்
வித்தை விரும்பு– கல்வியாகிய நற்பொருளை விரும்பு. – ஆத்திசூடி சிறுவர் பகுதிக்குச் செல்ல இவ்விடம் சொடுக்கவும். வாசுகி வாத்தும் நண்பர்களும் இவ்விடம் சொடுக்கவும்.
பனிப்பூக்கள் சஞ்சிகை தனது பத்தாம் ஆண்டைக் கொண்டாடுகின்றது. இவ்விடம் புதிய அம்சங்கள் வரவுள்ளன. பூக்களின் Podcast, போட்டிகள், நேர்முகங்காணல்கள், அமெரிக்க சமூகவியல் கட்டுரைகள் என பல விதமான பகுதிகள் உங்களுக்காகத் தந்துள்ளோம். இத்துடன் மினசோட்டா மாணவர் பதிப்பாளர் திட்டமும் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும்.
புது ஆண்டு பிறந்துவிட்டது. தனிமனித அபிலாஷைகள், கனவுகள் நிறைவேறக் காத்திராமல் காலம் நகர்ந்து செல்கிறது. அடுத்து என்ன வரப்போகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒவ்வொரு புத்தாண்டு துவக்கத்திலும் அறியாத எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறோம். புதிய ஆண்டு எல்லா வளங்களையும், நலத்தையும் நல்கும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கிறோம். முந்தைய இரண்டாண்டுகளை விட 2022 மேலானதாகயிருந்தது என கருதினாலும், உலக அமைதி, பொருளாதாரம், சூழலியல் கோணங்களில், கடந்தாண்டு சிக்கலானதாகவேயிருந்தது. புத்தாண்டில், பெருந்தொற்றின் பதட்டம் சற்றே தனிந்துள்ள […]
துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge – Woodbury) 2023
வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் முதல் கடுமையாக இருந்தபோதிலும் துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 28-ஆம் தேதி முதல் ஆரம்பித்து மே 10ஆம் தேதி வரை, ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஏரிகளில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் ஏரியின் விபரத்தை இந்த முகநூல் https://www.plungemn.org/ பக்கத்தில் காணலாம். இந்தப் போட்டிகளில் முக்கிய அம்சம் நிதி திரட்டுவது. விசேஷ ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு […]
பொங்கல் திருநாளையொட்டி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் சங்கமம் கலை விழா, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று Osseo Senior High School அரங்கத்தில் நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், மதியம் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடந்தன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மினசோட்டா மாநில மேலவை உறுப்பினர் திரு. ஜான் ஹாப்மேன் (John Hoffman) அவர்கள் […]
எம்மில் பெரும்பாலனவர்கள், கடினமான மூன்று வருட கொரோணா தொற்றுநோய் காரணமான முடங்கலுக்குப் பின்னர், பொது வாழ்வுக்கு மீண்டவாறுள்ளோம். இதன் தாக்கமானது வெவ்வேறு மக்களின் உடலியல், மனோத்துவம், சமூக ஒன்றுகூடல் போன்றவற்றால் வெவ்வேறு விதமாக அமைகிறது. ‘Languishing’ எனப்படும் மனச்சோர்வு ஆனது 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவியலாளர் மார்ட்டின் செலிக்மேன் (Martin Seligman) முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஒரு கருத்தாகும். இது மனச்சோர்வு அல்லது முழுமையான நல்வாழ்வு அல்லாத, தொடர்ச்சியான உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் நிலையைக் குறிக்கிறது. […]
குடும்பம் என்பது மரமானால்- அதில் அடியும் வேரும் நீ தானே! பாசக் கிளைகள் விரிந்தோட-அதில் அன்பாய் இலைகள் நீ தானே! பிள்ளைகள் என்பது விழுதாகும்- அது பிரிந்து வேர் ஊன்ற பெரிதாகும்!! மழையோ, புயலோ வந்தாலும்- அது உந்தன் உறுதியில் கரைந்தோடும்! உன் உழைப்பில் பெரிதாகும்- மரம் உலகம் வியக்க செழித்தோங்கும்! குடும்பத் தலைவி பெண்ணே நீ உந்தன் – சிரிப்பில் பூ பூக்கும்!! உலகம் இயங்கும் உன்னாலே – வணங்கிப் போற்றுவோம் என் நாளும்!! இளங்கோ […]
விலங்கிட்டு எனைப் பூட்ட விலங்கா நான்? விளங்காத இந்நினைப்பை விலக்கவும் இயலவில்லை! விலங்கிடப் பட்டேன் நான்! விலங்காக நடத்தப்பட்டேன்! விலகவும் இயலவில்லை விளக்கவும் எவருமில்லை! விளக்காய் ஒளி வீச விழைந்தே அவதரித்தேன்! விலங்கான மனிதர்களால் விளங்காத துயரடைந்தேன்! விலகிப் போகையிலே விழவைத்துச் சிரித்தனர்! விளங்கா வயதினையும் விதைக்குள்ளே ஒழித்தனர்! விலக வேண்டும் இனவெறி! விலக்க வேண்டும் வன்முறை! விளக்க வேண்டும் மானுடர்க்கே விரிவாக அஹிம்சைதனை!! வெ. மதுசூதனன்.
பிறப்பில் தொடங்கி என்னை இறப்பு வரைக்கும் இங்கே சிறப்பாய்க் காத்தவள் பெண், மறுப்பு இதற்கேது சொல்? கருவில் தாங்கி, கற்பக தருவாய் ஈன்று, என்னை வருவாய் மலரேயென்று அற்புதத் திருவாய் மலர்ந்தவள் அன்னை! சிறுவனாய் நான் அலைகயிலே சிறியதாய்த் தோன்றும் செயலும் ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த திறமையைக் கற்றிடாக் காரணத்தால் அருகிலே வந்து அமர்ந்து பெருகிய நற் பாசத்தோடு மருகிய விழிநீர் துடைத்து உருகியே உதவியவள் அக்காள்! பள்ளி போகும் பருவத்திலே […]
ஒற்றை சிவப்பு ரோஜா! உலர்ந்த மலர், சீரற்ற அளவில் அழுத்தியது கையை. உலர்ந்த சிவப்பு! திறந்த பழைய புத்தகம்! என் காலத்தை நினைவுபடுத்தியது. அது உன்னை இன்னும் எனக்கு, நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பரிசு நீ. அதை நீ எனக்கு வழங்கிய நாள், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உன் கருவிழி உருட்டி என்னை ஏறிட்டுப் பார்க்கையில் நீ அங்கேயே என்னை மையம் கொள்ள வைத்து விட்டாய். அன்று நீ என் இதயத்தில் தூவிய […]
காதல் எப்படி பேசுகிறது கன்னக்குழி அழகில் மெல்லிய இதழ் விரிப்பின் சிவப்பில் மிரளும் கண் விழியின் தவிப்பில் பெருமூச்சுக்கு இடையில் வரும் மூச்சில் புன்னகையின் இதழவிழ்ப்பில் அன்பு தளும்பும் மென்மொழியில் சீரற்ற இதயத் துடிப்பில் தனிமையில், மௌனத்தில் மற்றும் கண்ணீரில் காதல் பேசுகிறது. மின்னும் கண் பயத்தில் இணை சேர்ந்த மகிழ்ச்சியில் பெருமிதத்தில், பெரும் இதயத்துள் காதல் பிரகாசத்துடன் நிரம்பி வழிகிறது. அன்பான முகத்தில் சிலிர்த்து நடுங்கும் உடலின் அசைவில் வெட்கத் தொடுதலில் மகிழ்ச்சி மற்றும் வலிகளின் […]
புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2022
கண் விழித்து நான் எழுந்தேன்…. கனவின் நங்கை கண் முன்னே! கிள்ளி எனை நான் உணர்ந்து காண்பது நனவென உறுதி செய்தேன்! கன்னியவள் அருகே கனிவுடனே வந்து கவனத்தை நெருடி காதலுடன் பருகி கள்ளமற்ற சிரிப்பை கரையின்றி வழங்கி குறும்புப் பார்வையில் குழப்பம் விலக்கினாள்! காலம் காட்டி நாட்களாய்க் கிழிக்கப்பட கருவிருந்து வெளி வந்தேன் என்றாள்! காலச் சக்கரம் ஓராண்டு சுழன்றிட கடமை மாறாது அடுத்ததாய் உதித்தேனென்றாள்! நானே ஆண்டு இரண்டாயிரத்து இருபத்தொன்று, நாசமிகு […]
இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)
இந்த எளிதான ஆப்பிள் பை விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழக தோழியின் தாய் அளித்த சமையற்குறிப்பு. ஆப்பிள் அறுவடை ஆரம்பிக்கும் செப்டெம்பர் மாதத்தில், இந்த இலகு முறை ஆப்பிள் பையை செய்ய விரும்புவதுண்டு. நான் பெரும்பாலும் நறுமணத்திற்கு ஜாதிக்காய் (nutmeg) சிறிதளவு சேர்க்கிறேன்; நீங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். தேவையானவை 9 அங்குல இரட்டை மேலோடு ஆப்பிள் பைக்கு, 1 தொகுப்பு (14.1 அவுன்ஸ்) பேஸ்ட்ரி தேவை. உள்ளூர் மளிகைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். […]
துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge – Woodbury) 2023
வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் குளிர்காலம் கடந்த டிசம்பர் முதல் கடுமையாக இருந்தபோதிலும் துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge) என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 28-ஆம் தேதி முதல் ஆரம்பித்து மே 10ஆம் தேதி வரை, ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஏரிகளில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் ஏரியின் விபரத்தை இந்த முகநூல் https://www.plungemn.org/ பக்கத்தில் காணலாம். இந்தப் போட்டிகளில் முக்கிய அம்சம் நிதி திரட்டுவது. விசேஷ ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் காவல்துறை, தீயணைப்பு […]
பொங்கல் திருநாளையொட்டி மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் சங்கமம் கலை விழா, இந்தாண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று Osseo Senior High School அரங்கத்தில் நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், மதியம் 1 மணி முதல் மாலை 8 மணி வரை நடந்தன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மினசோட்டா மாநில மேலவை உறுப்பினர் திரு. ஜான் ஹாப்மேன் (John Hoffman) அவர்கள் […]
ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2022 (IAM Thanksgiving 2022)
வட அமெரிக்காவின், மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா’ (Indian Association of Minnesota) அமைப்பின் சார்பில் 2022 ஆம் ஆண்டு ஆண்டில் உதவி அனைத்து தன்னார்வலர்கள், வர்த்தக ரீதியாக உதவியவர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக நன்றி நவில்தல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா மேப்பில் குரோவில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் சென்ற மாதம் நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. பின்பு புதிதாக பதவியேற்றுள்ள […]
மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள ப்ளூமிங்டன் நகரில் அமைந்துள்ள கென்னடி ஆக்டிவிட்டீஸ் சென்டர் என்ற பள்ளி மைதானத்தில் டிசம்பர் 10ஆம் தேதி இந்த கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் அணி இரு குழுவாக பிரித்து ஆடவர்க்கும், மகளிர்க்கும் தனித்தனி பிரிவுகளில், போட்டிச் சுற்றுகள் நடைபெற்றன. தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட பக்கத்திற்கு சென்று பார்க்கவும் https://www.facebook.com/mdvtvolleyball அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்களுக்காக!!! […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (நவம்பர் 2022)
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பை, கடந்த மே மாத பகுதியில் பார்த்தோம். அதன் பின், வந்த படங்களில் உள்ள ஹிட் பாடல்களின் தொகுப்பை இப்பகுதியில் காணப் போகிறோம். படங்களின் எண்ணிக்கை, கடந்த சில மாதங்களில், உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. அதனால், இப்பகுதியில் ஐந்து பாடல்களுக்குப் பதிலாகப் பத்துப் பாடல்களைப் பார்க்க போகிறோம். டான் – ப்ரைவேட் பார்ட்டி இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அனிருத்தின் பாடல்கள் மட்டுமல்ல, அவர் இசையமைத்த படங்களும் ஹிட் […]
தமிழனின் நீண்ட நாள் கனவு, பொன்னியின் செல்வனைத் திரையரங்கில் சென்று பார்ப்பது. 1950களில் தொடர்கதையாக வெளிவந்த பொன்னியின் செல்வனை, முதலில் எம்.ஜி.ஆர் 70களில் திரைப்படமாக உருவாக்க முனைந்தார். பிறகு, கமலஹாசனும் முயன்றார். அந்த வரிசையில் மணிரத்னமும் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார். அதற்கான காலம் தற்போது தான் வந்துள்ளது என்று கூற வேண்டும். பொன்னியின் செல்வன் நாவலின் சிறப்பு என்று சொல்ல பல விஷயங்கள் உள்ளன. அந்த நாவலுக்கான வரவேற்பு, கதை எழுதப்பட்ட காலத்தில் மட்டுமல்ல, தற்போதும் […]
சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி
கனடாவில் வசிக்கும் பன்முக இசை கலைஞர், ஆசிரியர், சங்கீத கலா வித்தகர் திரு. டி.என். பாலமுரளி அவர்கள் பனிப்பூக்களுக்கு வழங்கிய இப்பேட்டியில் அவர் தனது இசை பின்னணி குறித்தும், இசை அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். உரையாடியவர் – திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர். தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் […]
இறை வழிபாட்டில் ஒவ்வொரு மதத்திலும் பல வகைகள் இருப்பினும், பக்தியில் உருகி பாக்கள் பாடி, இறை வழிபாடு செய்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஒன்று. சங்க இலக்கியத்தில் பெருமளவு பக்தி இலக்கிய நூல்கள் உள்ளன. வேறு எம்மொழியிலும். தமிழ் மொழியில் தோன்றிய அளவு பக்தி இலக்கிய நூல்கள் தோன்றவில்லை. பக்தி இலக்கிய நூல்களில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் மிக முக்கியமானவை. பன்னிரு ஆழ்வார்களில் “ஒரு பெண்ணின் தமிழ்” என்று அழைக்கப்பட்ட திருப்பாவை எழுதிய ஆண்டாள் பல […]
எம்மில் பெரும்பாலனவர்கள், கடினமான மூன்று வருட கொரோணா தொற்றுநோய் காரணமான முடங்கலுக்குப் பின்னர், பொது வாழ்வுக்கு மீண்டவாறுள்ளோம். இதன் தாக்கமானது வெவ்வேறு மக்களின் உடலியல், மனோத்துவம், சமூக ஒன்றுகூடல் போன்றவற்றால் வெவ்வேறு விதமாக அமைகிறது. ‘Languishing’ எனப்படும் மனச்சோர்வு ஆனது 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க உளவியலாளர் மார்ட்டின் செலிக்மேன் (Martin Seligman) முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஒரு கருத்தாகும். இது மனச்சோர்வு அல்லது முழுமையான நல்வாழ்வு அல்லாத, தொடர்ச்சியான உடல் உபாதைகளில் சிக்கித் தவிக்கும் நிலையைக் குறிக்கிறது. […]
உலகை விட்டுப் பறந்த இசைக்குயில்
இந்தியத் திரையிசை உலகில், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்த இசைக்குயிலொன்று வாழ்வின் கிளைகளிலிருந்து பறந்து விண்ணுலகம் நோக்கிச் சென்றுவிட்டது. நாடு, பிராந்தியம், இனம், குலம், மொழி என எல்லைகளைக் கடந்த இசைக் கலைஞர்களில் தனியிடம் பிடித்த ‘கலைவாணி’ எனும் வாணி ஜெயராம் மறைந்து விட்டார். 19 மொழிகளில், ஆயிரக்கணக்கான திரைப்படங்களில், 10,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருந்தாலும், தானொரு மாபெரும் பாடகியென்ற தற்பெருமை ஒருபோதுமில்லாமல், அமைதி, எளிமை என பல அருங்குணங்கள் நிரம்பியவர். எப்பேர்ப்பட்ட மேடையானாலும், ஸ்டுடியோவானாலும், […]
அதானி குழுமத்தின் மீதான “ஹிண்டன்பர்க்” ஆய்வறிக்கை
சமீப நாட்களில் செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் அதிகமாக உச்சரிக்கப்படும், எழுதப்படும் பெயர் – ஹிண்டர்பர்க். பொதுவாக பங்குச் சந்தை வர்த்தகத்தின் பக்கம் தலை வைத்து படுக்காதவர்களின் கவனத்தைக் கூட ‘ஹிண்டர்பர்க்’ ஈர்த்துள்ளது. காரணம் – ஹிண்டர்பர்க் ஆய்வின் தாக்கம். நியுயார்க் நகரில் இயங்கும், ஐந்து நிரந்தர ஊழியர் மட்டுமே கொண்ட மிகச்சிறிய நிறுவனம், உலகின் பணக்காரர்கள் தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்துக்கு முட்டி மோதும் ஒருவரின் பிம்பத்தை, இந்தியாவின் மாபெரும் கூட்டு வர்த்தக […]
சாட்ஜிபிடி ChatGPT தொழிலாளர் வேலையை சீர்குலைக்குமா?
வராலாற்று ரீதியில் தொழிநுட்பத்தை எடுத்துப் பார்த்தால், எந்த தொழில்நுட்பமும் ஓரளவுக்குப் படித்த தொழிலாளர்களிடையே பெருமளவிலான வேலை இழப்பை ஏற்படுத்தவில்லை என்பது புரியும். ஆயினும் ‘உருவாக்க செயற்கை நுண்ணறிவு’ (Generative AI) இதற்கு விதிவிலக்காக இருக்குமா என்பதே எமது கேள்வி. சாட்ஜிபிடி(ChatGPT) என்றால் தமிழில் நாம் ‘பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மொழி செயலாக்கக் கருவி’ என்று கூறிக்கொள்ளலாம். இந்த செயற்கை நுண்ணறிவு கருவி இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு மிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகங்களில் […]
உழைத்து உரமேறிய உடம்பு. நாவல்பழ நிறம். கண்களில் வைராக்கியம். அலங்காரமோ, நகைகளோ கிடையாது. பின்கொசுவம் வைத்துக் கட்டிய நூல் சேலை. அள்ளிச் செருகிய கொண்டை. கால்களில் ரப்பர் செருப்பு. ஆரம்பத்தில் அணிந்த தண்டட்டியால் வளர்ந்த காதுகள். இதுதான் ராமாயி. மானாமதுரையை அடுத்த கொம்புக்காரநேந்தல், அவள் பிறந்த ஊர். ஒரு தடவை, 1970 வாக்கில் அக்கரையில் இருக்கும் அம்மாவின் தோழி மதுரம் மாமி வீட்டுக் கொலுவிற்குப் போன போது அறிமுகம். நேர்த்தியாக அடுக்கப்பட்ட பொம்மைகள். சுத்தமாகத் துடைக்கப் பட்ட […]
“ஸாரிம்மா தீபிகா” என்றேன் உண்மையான மன வருத்தத்துடன். “இன்னும் ரெண்டே நாளில் அவளுக்கு பரிட்சை. கோபிச்சுண்டு அவள் “மூடை” அவுட்டாகிக்கியாச்சு. ஸாரி என்ன வேண்டிக்கிடக்கு? ஸாரியாம் ஸாரி…” என்று மனைவி உஷா படபடவென்று வெடித்தாள். பிறகு சுமுகமான சூழல் வரவேண்டுமே என்று எண்ணினாளோ என்னவோ, “எனக்கு வேணுமானால் வீட்டில் கட்டிக்க ரெண்டு ஸாரி வாங்கிக் கொடுங்கள்! ஸல்வார் நிறைய இருக்கு” என்றாள். என் தவற்றை உணர்ந்தேன். மேலும் ஏதாவது பதிலுக்குப் பேசினால் அது வீண் விவாதத்தில்தான் முடியும் […]
காலையிலிருந்து மனது சற்று பாரமாய் இருப்பதாய் உணர்ந்தாள், கோமதி. என்ன காரணம் என்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தபோது கூட, திடமான காரணங்கள் ஏதும் பிடிபடவில்லை. எப்போதாவது இவ்வகையான உணர்வு அவளுக்குள் மேலோங்கும். அதை அனுபவிக்கும்போதெல்லாம், வாழ்க்கை என்ன வழவழவென்று இருக்கும் தேசிய நெடுஞ்சாலையா? ஒரே சீராய் மனம் பயணிக்க. மேடு பள்ளங்கள் நிறைந்த கிராமத்து மண் ரோடுதானே என்று சமாதானம் செய்து கொள்வாள். அவள் மேசை மீதிருந்த தொலைபேசி ஒலித்தது. எடுத்தாள். […]
நேரம், அதிகாலை மணி இரண்டு முப்பது. பண்ணை வீட்டின் வெளிப்புற வீடாக அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் கண்மூடிய நிலையிலேயே விழித்திருந்தார் புண்ணியமூர்த்தி. பனிரெண்டு முப்பது மணி வாக்கில் திரும்பிப் படுத்தபொழுது முதுகுக்கு கீழே ஏதோ உறுத்துவது போல் தோன்ற, கண்விழித்து துழாவியவரின் கையில் அகப்பட்டது, பேத்திக்காக வாங்கியிருந்த விரல் நீள அழகிய மார்பிள் சிற்பம். கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தவர் அப்படியே உறங்கிப் போயிருந்தார். அப்பொழுது வந்த விழிப்புதான் இன்னமும் அவரை உறங்கவிடாமல் தொடந்துகொண்டேயிருந்தது. எண்ண […]