இலக்கியம்
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
\n"; } ?>
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.! – நாலடியார் பாடல்
வித்தை விரும்பு– கல்வியாகிய நற்பொருளை விரும்பு. – ஆத்திசூடி சிறுவர் பகுதிக்குச் செல்ல இவ்விடம் சொடுக்கவும். வாசுகி வாத்தும் நண்பர்களும் இவ்விடம் சொடுக்கவும்.
பனிப்பூக்கள் சஞ்சிகை தனது பன்னிரண்டாம் ஆண்டைக் கொண்டாடுகின்றது. இவ்விடம் புதிய அம்சங்கள் வரவுள்ளன. பூக்களின் Podcast, போட்டிகள், நேர்முகங்காணல்கள், அமெரிக்க சமூகவியல் கட்டுரைகள் என பல விதமான பகுதிகள் உங்களுக்காகத் தந்துள்ளோம். மேலும் படங்கள், சுருக்கங்கள், தற்காலிக உள்ளடக்கம் (கதைகள்), குறுகிய வடிவ வீடியோக்கள், நீண்ட வடிவ வீடியோக்கள், ஸ்ட்ரீமிங் மற்றும் பட்டியல்கள் தரப்படும்.
மீண்டுமொரு ஆண்டு உருண்டோடிவிட்டது. வேகமாகப் பறந்து, கடந்து போகும் காலத்தின் நிழல் நம் மீது படர்ந்து, மனதில் பல நினைவுகளை விட்டுச் செல்கிறது. பெரும்பாலானவை மெதுவே கலைந்துவிட சில அழுத்தமாகப் பதிந்து வாழ்வின் சுவடுகளாக, அனுபவங்களாக மாறிவிடுகின்றன. கடந்த ஆண்டில் நாம் எல்லோரும் இனிப்பும், கசப்பும் கலந்த பல அனுபவங்களைப் பெற்றிருப்போம். இந்தாண்டும் பலவித சந்தோஷங்களையும், சவால்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருப்பது இயற்கையின் நியதி. 2023 ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் கணிசமாகக் குறைந்தது. இப்பெருந்தொற்றுத் […]
“உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” காதல் ரசம் சொட்டும் கவிதை நூல்.
2022 இல் YMCA மைதானத்தில் நடைபெற்ற 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிதாயினி சங்கரி சிவகணேசன் அவர்களின் “உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழிலினி பதிப்பகம் மூலம் வெளியான இந்தப் புத்தகத்தை, கடந்த மாதம் அமேசான் கிண்டலில் (Amazon Kindle) வாங்கிப் படித்தேன் அத்தனையும் காதல் ரசம் கொட்டும் கவிதைகள். நான் தமிழ் படித்த கலாநிதி, பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூலுக்கு, முனைவர் பேராசிரியர் […]
உங்கள் தேன்குருவி உணவூட்டிகளை வெளிக் கொண்டு வரச் சிறந்த நேரம் இலைதுளிர்க் காலமாகும். இலைதுளிர் காலத்தில் புலம் பெயரும்போது தேன்குருவிகளுக்குச் சிறிய ஆற்றல் ஊக்கத்தை அளிப்பது ஆர்வலராகிய எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்கிழக்கில் தேன்குருவிகள்: வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் ஒரே ஒரு வகை தேன்குருவி உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். செம்மாணிக்க-தொண்டை தேன்குருவி – மற்றவை சில சமயங்களில் இலையுதிர் காலத்தில் இப்பகுதி வழியாக இடம் பெயர்கின்றன. ஃபிப்ரவரி மாதத்தின் கடைசிப் […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ என்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். […]
என்னது எண்பதில் ஆசையா? அது என்ன ஆசை? இந்தியாவில் ஐம்பத்தெட்டு அல்லது அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு இந்தப் புதிய உலகம் வியப்பாக உள்ளது. நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று புரிந்திருக்கும் என நம்புகிறேன். வாருங்கள், இந்த வியப்பைப் பார்க்க உலகைச் சுற்றி வருவோம். அமெரிக்கா அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு எண்பத்தோரு வயதை எட்டுகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது என […]
நானே சிந்திச்சேன் – கிரகப்பிரவேசங்கள்
சென்ற ஞாயிறன்று ஃபோன் போட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த ஜனா, திடிரென்று, “வரதுக்கு ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேன்றான்.. ஒரு நிமிஷம் இரு.. கான்ஃப்ரன்ஸ் போட்டுப் பாக்கலாம் “ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராமல் வரதுவை அழைத்துவிட்டான். சில நிமிடங்களில் “சொல்லுங்கடா..எப்டி இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே வரது இணைந்துகொண்டான். “என்ன மாப்ளே … ஆளப் பிடிக்கவே முடில .. பயங்கர பிசி போல” என்றான் ஜனா. “ஆமாடா மச்சி .. வரிசையா கிரகப்பிரவேசமா […]
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.
இங்கே விதிகள் பலவகை உண்டே இவைகளை உடைத்திட இங்கேயே யாருண்டு? தேவதூதனைத் தேடுகிறோம் அவதாரங்களுக்காக அங்கலாய்கிறோம் மனிதம் இங்கே தலை தூக்கிட மானிட சமுதாயம் மாறிடவே வழிவகுப்போம் சமுதாய நீதியைச் சமைத்திட சாதித்திடுவோம் ஆண் பெண் இரண்டே சாதி எல்லாமும் எல்லோருக்குமே கிடைப்பதே சமூகநீதி அன்பின் உலகம் ஆர்வமாய் படைத்திட்டே அகிலம் சிறக்க பாடு படுவோம் உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம் சமைத்திடவே […]
அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க, அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]
ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட ஆன்ம இசை விருந்துகள் ஆசையாய் அரங்கேற ஆகம வார்த்தையானவரை ஆனந்த பாசுரம் பாடி ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]
நெற்றிப் பரப்பினில் சுற்றிப் பறந்திடும் கற்றைக் கூந்தலைச் சற்றே விலக்கிச் சிரித்தாள்!! விலக்கலில் வழிந்த வியர்வையும் மெதுவாய் விழிகளைத் தாண்டி விழுவதில் விழுந்தேன்!! நாசிகளைக் கடக்கையில் சுவாசித்துத் தணிந்ததால் வீசிய கனலது தூசியாய் மேகமாகியது! மங்கையின் வியர்வையும் பொங்கிய கனலினால் தங்கியே வான்புக கங்கையாய்ப் பொழியுதோ? கண்ணதன் ஒளியுமே மண்ணிதின் மீதிலே எண்ணத்தின் வேகமாய் மின்னலாய்ப் பாய்ந்ததோ? கன்னியவள் குலுங்கிடக் கடலலையும் குதித்திடுமோ? என்னவளும் சிணுங்கிட இடியதுவும் சினந்திடுமோ? […]
குடும்பம் என்பது மரமானால்- அதில் அடியும் வேரும் நீ தானே! பாசக் கிளைகள் விரிந்தோட-அதில் அன்பாய் இலைகள் நீ தானே! பிள்ளைகள் என்பது விழுதாகும்- அது பிரிந்து வேர் ஊன்ற பெரிதாகும்!! மழையோ, புயலோ வந்தாலும்- அது உந்தன் உறுதியில் கரைந்தோடும்! உன் உழைப்பில் பெரிதாகும்- மரம் உலகம் வியக்க செழித்தோங்கும்! குடும்பத் தலைவி பெண்ணே நீ உந்தன் – சிரிப்பில் பூ பூக்கும்!! உலகம் இயங்கும் உன்னாலே – வணங்கிப் போற்றுவோம் என் நாளும்!! இளங்கோ […]
விலங்கிட்டு எனைப் பூட்ட விலங்கா நான்? விளங்காத இந்நினைப்பை விலக்கவும் இயலவில்லை! விலங்கிடப் பட்டேன் நான்! விலங்காக நடத்தப்பட்டேன்! விலகவும் இயலவில்லை விளக்கவும் எவருமில்லை! விளக்காய் ஒளி வீச விழைந்தே அவதரித்தேன்! விலங்கான மனிதர்களால் விளங்காத துயரடைந்தேன்! விலகிப் போகையிலே விழவைத்துச் சிரித்தனர்! விளங்கா வயதினையும் விதைக்குள்ளே ஒழித்தனர்! விலக வேண்டும் இனவெறி! விலக்க வேண்டும் வன்முறை! விளக்க வேண்டும் மானுடர்க்கே விரிவாக அஹிம்சைதனை!! வெ. மதுசூதனன்.
இலகுவான ஆப்பிள் பை (Apple Pie)
இந்த எளிதான ஆப்பிள் பை விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழக தோழியின் தாய் அளித்த சமையற்குறிப்பு. ஆப்பிள் அறுவடை ஆரம்பிக்கும் செப்டெம்பர் மாதத்தில், இந்த இலகு முறை ஆப்பிள் பையை செய்ய விரும்புவதுண்டு. நான் பெரும்பாலும் நறுமணத்திற்கு ஜாதிக்காய் (nutmeg) சிறிதளவு சேர்க்கிறேன்; நீங்கள் விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம். தேவையானவை 9 அங்குல இரட்டை மேலோடு ஆப்பிள் பைக்கு, 1 தொகுப்பு (14.1 அவுன்ஸ்) பேஸ்ட்ரி தேவை. உள்ளூர் மளிகைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். […]
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவான ‘சங்கமம்’, இந்தாண்டு ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று நடைபெற்றது. மதியம் 12:30 மணியளவில் தொடங்கிய இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை நடைபெற்றது. தமிழ் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், திரைப்பாடல்களுக்கான நடன நிகழ்ச்சிகள், குழந்தைகள் பங்கேற்ற மலரும் மொட்டும், தன்னார்வலர்களுக்கான விருது, போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு என இடைவிடாமல் ஆட்டம், பாட்டம், பாராட்டு, அங்கீகாரம் என நிறைவாக இவ்விழா நடைபெற்றது. […]
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில், மினியாபோலிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான மேப்பிள் க்ரோவில் அமைந்துள்ள இந்துக் கோவிலில் தீபாவளித் திருநாள் 2023 அக்டோபர் 15ஆம் திகதி கொண்டாடப்பட்டது. பல தலைவர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த விழாவை மிகவும் சிறப்பித்தனர். கோவிலின் மூத்த அர்ச்சகரான திரு. முரளி பட்டரின் பூஜையுடன், தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைக்க, இந்த விழா தொடங்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் வரவேற்புரை வழங்க, உள்ளூர்ப் பிரமுகரான டாக்டர் […]
மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2023
மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றது. டிசம்பர் 9ஆம் தேதி அன்று மினசோட்டாவில் அமைந்துள்ள ஹாப்கின்ஸ் சமுதாயக் கூடத்தில் (Hopkins Community Center) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், அனைத்து விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று மணி நேரம் நாடகங்கள் மற்றும் பல்வேறு நடன […]
மினசோட்டா மாநில கட்டிடத்தில் தீபாவளி கொண்டாட்டம்
மினசோட்டா மாநிலம் முழுவதுமுள்ள இந்திய அமெரிக்கர்களுக்கு அக்டோபர் 18 ஆம் தேதி ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது. மினசோட்டா மாநிலத்தின் மாநில ஆளுநரான கவர்னர் டிம் வால்ஸ் (Governor Tim Walz) மற்றும் துணை ஆளுநர் லெப்டினன்ட் கவர்னர் பெக்கி ஃபிளனகன் (Lt. Governor Peggy Flannigan) ஆகியோர் சேர்ந்து குத்து விளக்கு ஏற்றி இந்தத் தீபாவளி திருவிழாவைத் தொடங்கி வைத்தனர். விஷால் அகர்வால் பாடிய வேதங்களிலிருந்து சாந்தி மந்திரம் ஓதப்பட்டதுடன் கொண்டாட்டம் தொடங்கியது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ என்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். […]
இவ்வருடம் படங்கள் நிறைய வந்திருந்தாலும் கவனத்தை ஈர்த்த பாடல்கள் என்றால் ஒப்பீட்டளவில் குறைவே. தமிழில் இவ்வருடத்தின் பெரிய வசூல் புரிந்த படங்களான ஜெயிலர் மற்றும் லியோ இரண்டிற்கும் அனிருத் இசையமைத்திருந்தார். அது போல, இந்திய அளவில் பெரிய வசூல் படைத்த படமான ஜவானுக்கும் அனிருத்தே இசை. அது அவருக்குத் தனி இசையமைப்பாளராக முதல் ஹிந்தி படமும் கூட. தமிழ்த் திரையுலகின் தற்போதைய டாப் இசையமைப்பாளர் யார் என்று இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில் […]
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி
பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் குறித்தும், பண்டிகை குறித்தும் திரு. மதுசூதனன், திரு. சரவணகுமரன் அவர்கள் உரையாடிய பாகம்.
இந்தியாவில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், நமது கலாச்சாரம் நம்முடன் இன்றும் நெருக்கமாகத் தான் இருக்கிறது. கொரோனா என்ற காலகட்டத்தைத் தாண்டி இப்பொழுது வழக்கமான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கையில், நவராத்திரி கொலு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொலு வைக்கும் வழக்கம் உள்ள குடும்பத்தினர், அந்த வழக்கத்தைக் கைவிடாமல் மினசோட்டாவிலும் மற்ற வட அமெரிக்க மாநிலங்களிலும் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினர். தங்கள் வீட்டு கொலு பொம்மைகளின் […]
“உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” காதல் ரசம் சொட்டும் கவிதை நூல்.
2022 இல் YMCA மைதானத்தில் நடைபெற்ற 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிதாயினி சங்கரி சிவகணேசன் அவர்களின் “உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழிலினி பதிப்பகம் மூலம் வெளியான இந்தப் புத்தகத்தை, கடந்த மாதம் அமேசான் கிண்டலில் (Amazon Kindle) வாங்கிப் படித்தேன் அத்தனையும் காதல் ரசம் கொட்டும் கவிதைகள். நான் தமிழ் படித்த கலாநிதி, பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூலுக்கு, முனைவர் பேராசிரியர் […]
உங்கள் தேன்குருவி உணவூட்டிகளை வெளிக் கொண்டு வரச் சிறந்த நேரம் இலைதுளிர்க் காலமாகும். இலைதுளிர் காலத்தில் புலம் பெயரும்போது தேன்குருவிகளுக்குச் சிறிய ஆற்றல் ஊக்கத்தை அளிப்பது ஆர்வலராகிய எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்கிழக்கில் தேன்குருவிகள்: வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் ஒரே ஒரு வகை தேன்குருவி உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். செம்மாணிக்க-தொண்டை தேன்குருவி – மற்றவை சில சமயங்களில் இலையுதிர் காலத்தில் இப்பகுதி வழியாக இடம் பெயர்கின்றன. ஃபிப்ரவரி மாதத்தின் கடைசிப் […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ என்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். […]
என்னது எண்பதில் ஆசையா? அது என்ன ஆசை? இந்தியாவில் ஐம்பத்தெட்டு அல்லது அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு இந்தப் புதிய உலகம் வியப்பாக உள்ளது. நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று புரிந்திருக்கும் என நம்புகிறேன். வாருங்கள், இந்த வியப்பைப் பார்க்க உலகைச் சுற்றி வருவோம். அமெரிக்கா அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு எண்பத்தோரு வயதை எட்டுகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது என […]
நானே சிந்திச்சேன் – கிரகப்பிரவேசங்கள்
சென்ற ஞாயிறன்று ஃபோன் போட்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த ஜனா, திடிரென்று, “வரதுக்கு ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேன்றான்.. ஒரு நிமிஷம் இரு.. கான்ஃப்ரன்ஸ் போட்டுப் பாக்கலாம் “ என்று சொல்லிவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராமல் வரதுவை அழைத்துவிட்டான். சில நிமிடங்களில் “சொல்லுங்கடா..எப்டி இருக்கீங்க” என்று கேட்டுக் கொண்டே வரது இணைந்துகொண்டான். “என்ன மாப்ளே … ஆளப் பிடிக்கவே முடில .. பயங்கர பிசி போல” என்றான் ஜனா. “ஆமாடா மச்சி .. வரிசையா கிரகப்பிரவேசமா […]
“ஏன்னா, நோட் பண்ணேளா நம்ம பாரதிய? நேத்து அந்த சினிமாவுக்குப் போய்ட்டு வந்ததுல இருந்து ஒரே டல்லா இருக்காளே?” ஹாலில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷைக் கேட்டுக் கொண்டே அடுக்களைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. டி.வி.யில் ரங்கராஜ் பாண்டே வழக்கம்போல் அந்த தேவேந்திரனைப் பிரித்து மேய்வதை ரசித்துக் கொண்டே, கவனத்தை டி.வி.யை விட்டு விலக்காமல், சற்றும் ஈடுபாடில்லாமல் “என்னடி சொல்ற?” என்று கேட்டான் கணேஷ். “அதானே, நான் சொல்றதுல என்னக்கு கவனமிருந்துது உங்களுக்கு; எப்பப்பாத்தாலும் ஏதோ […]
டாக்ஸி வீட்டின் முன் வந்து நின்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள் காஞ்சனா. உள்ளேயிருந்து வேகமாக வந்த குமுதவல்லி கைக்குழந்தையை வாங்கிக் கொண்டு மகளின் தலையைக் கோதியவாறு உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். காஞ்சனாவின் அப்பா டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு பையை உள்ளே தூக்கிக் கொண்டு வந்த போது ‘‘இப்போதும் ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?’’ கொஞ்சம் கோபம் கலந்த தொனியோடு கேட்டார். ‘‘அவள் சோகம் அவளோடு. அவளை ஏன் வீணாகக் கடிந்து கொள்கிறீர்கள்?’’ என்றாள் குமுதவல்லி […]
முன் குறிப்பு: நிஜங்களின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் நினைவான நிழற்கதை! 1919 ஆம் வருடம், ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் திகதி, அறுவடை முடிந்து பஞ்சாப் மக்கள் சூரியனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடும் பைசாகித் திருநாள். மாலை சுமார் நான்கு மணி முப்பது நிமிடம்!!! அமிர்தசரஸ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அக்ரஹாரம். பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்து குடி பெயர்ந்த பல குடும்பங்கள் தங்கியிருந்த அந்த வீதியை அவர்கள் அக்ரஹாரம் என்று அழைத்தனர். அங்கிருந்து ஒரு ஃபர்லாங்க் தூரம் […]