முகவுரை
புத்தாண்டு சங்கற்பங்கள்

புது ஆண்டு பிறந்துவிட்டது. தனிமனித அபிலாஷைகள், கனவுகள் நிறைவேறக் காத்திராமல் காலம் நகர்ந்து செல்கிறது. அடுத்து என்ன வரப்போகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒவ்வொரு புத்தாண்டு துவக்கத்திலும் அறியாத எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறோம். புதிய ஆண்டு எல்லா வளங்களையும், நலத்தையும் நல்கும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கிறோம். முந்தைய இரண்டாண்டுகளை விட 2022 மேலானதாகயிருந்தது என கருதினாலும், உலக அமைதி, பொருளாதாரம், சூழலியல் கோணங்களில், கடந்தாண்டு சிக்கலானதாகவேயிருந்தது. புத்தாண்டில், பெருந்தொற்றின் பதட்டம் சற்றே தனிந்துள்ள […]
விழிப்புறுவோம்

அமெரிக்கப் பிரதேசங்களில் இலையுதிர் காலத்துக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன. செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்து சாலைகளில் பள்ளிச் சிறுவர்கள், பள்ளிப் பேருந்துகளைப் பார்க்க முடிகிறது; கடைகளில் ஆரஞ்சு நிற சட்டைகள், அலங்காரப் பொருட்கள், பரங்கிக்காய், ஹாலோவீன் சமாச்சாரங்கள் அடுக்கப்பட்டு கட்டியம் கூறி வரவேற்கின்றன; நீண்ட பயணத்துக்குத் தயாராகும் பெருந்தாரா வாத்துகள் (Geese) கூட்டமாகப் பயிற்சியெடுத்து வருகின்றன; வீட்டின் பின்கட்டில் அணில்கள் சுறுசுறுப்புடன் குளிர்காலத்துக்குத் தேவையான உணவுகளைச் சேகரிப்பதில் மும்முரமாகவுள்ளன; பகல்நேரம் சுருங்கி, சில்லென்ற காற்றுடன் இருளின் ஆட்சி மேலோங்கி […]
உலகின் அவசர, அத்தியாவசிய தேவைகள்

புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். சமீப ஆண்டுகளைப் போல 2022 ஆம் ஆண்டும் கேள்விக்குறியாகவே தெரிகிறது. கோவிட்டின் திரிபுகள், ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராட்டம், நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கிடையுமான பயங்கரவாதம், மனிதாபிமான நெருக்கடிகள், உலகப் பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றங்கள் என எண்ணற்ற சவால்கள் எதிரே நிற்கின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை தானாக மறைந்துபோகும் சவால்கள் அல்ல. கொரோனா தொற்றால் பல இலட்சம் உயிர்களை இழந்துவிட்டோம்; மேலும் இழந்து வருகிறோம். . அதன் நீட்சியாக வறுமை, பஞ்சம், […]
பெருகும் பாலியல் கொடூரங்கள்

“என்றைய தினம் நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாகச் செல்ல முடிகின்றதோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும்”. பெண்கள், ஆண்கள் விரும்புவதைச் செய்யும் அடிமைத்தன எண்ணங்களை விடுத்து, ஆண்களுக்குச் சமமான கல்வி, சமூக அந்தஸ்துப் பெற வேண்டும் என விரும்பினார் காந்தி. தன்னைச் சந்திக்க வரும் தலைவர்களிடம் கூட அவரவர் மனைவியரை, அரசியலில் ஈடுபட அழைத்து வருமாறு வற்புறுத்தினார் அவர். பெண்கள் தங்களின் அடிமைச் சங்கிலிகளை அணிகலன்களாகத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது […]
லக்கிம்பூர் கெரி வன்முறை

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் அக்டோபர் 3ஆம் தேதி, நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அகிம்சை, அறவழிப் போராட்டம் போன்றவற்றை உலகுக்கு எடுத்துரைத்த மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை முன் தினம் கொண்டாடி விட்டு, மறுதினம் இத்தகைய வன்முறை அரங்கேறியது தேசத்துக்குப் பெருத்தத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பதில் சொல்ல நாடு கடமைப்பட்டுள்ளது. Infographic vector created by freepik – www.freepik.com இந்தியாவில், […]
அலட்சியம் கூடாது

அமெரிக்காவின் பல மாநிலங்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில், முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயத் தேவையைத் தளர்த்தின. அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு வாரியம் (சி.டி.சி. – CDC), முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்கள், பெரும்பாலான பொது இடங்களில், சமூக இடைவெளி, இதர பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க முடியுமானால், முகக் கவசம் அணியவேண்டிய அவசியமில்லை என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் இன்று இந்த நிலை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தாலும், கோவிட் […]
மீண்டும் சுவாசிக்க முடிகிறதா?

“இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம். நிறம், இனம் எனும் பாகுபாடுகளைக் கடந்து, கீழே வீழ்த்தப்பட்டு, கால்களுக்கடியில் நசுக்கப்பட்டு, மிதிக்கப்படும் ஓவ்வொருவருக்கும் இந்தத் தீர்ப்பு நம்பிக்கையளித்துள்ளது. ஜார்ஜ், டி-ஷர்ட்களில் பதிக்கப்பட்ட படமாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என்று ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொண்டதற்கு விடை கிடைத்துள்ளது. ஜார்ஜின் மரணம் எங்களுக்குப் பெரும் இழப்புதான்; ஆனால் அவர் மாற்றத்திற்கான வரலாற்றில் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது” – ஃப்ளாயிட் சகோதரர்களின் இந்த வார்த்தைகள், மினியாபொலிஸ் நீதிமன்றத்தின் முன் குழுமியிருந்த கூட்டத்தினரின் ஆரவாரத்தோடு நாடெங்கும் பரவியது, […]
அமெரிக்காவின் புதிய தலைமை

பல மாதங்களுக்குப் பிறகு, பல வழக்குகள், கலவரங்களுக்குப் பிறகு 2020 அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிக வாக்கு எண்ணிக்கை (81,283,485) பெற்றவர் ஜோ பைடன்; அதிபர் பதவியேற்கும் மிக அதிக வயதுடைய நபர் ஜோ பைடன் – பதவியேற்ற தினத்தன்று அவரின் வயது 78 […]
விடைபெறும் 2020 ஆம் ஆண்டு

2020 ஆம் ஆண்டு முடிவடையப் போகிறது. முட்டி மோதி, தட்டுத் தடுமாறிக் கிட்டத்தட்ட அதனைக் கடந்து விட்டோம் நாம். ஆனால் நிறைய வடுக்கள், வலி, விரக்தி மற்றும் மனச்சோர்வு நம்மை ஆட்கொண்டுவிட்டன. இடையிடையே சின்னச் சின்னச் சந்தோஷங்கள். முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு குடும்பத்தினருடன் கூடுதல் நேரத்தைப் பகிர்ந்துகொண்டு, அவர்களை அதிகமாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு ஆண்டு முடியும் தறுவாயில் நடப்பாண்டின் நன்மைகள் – தீமைகள், ஆச்சரியங்கள் – ஏமாற்றங்கள் , ஆக்கங்கள் – […]
விடுமுறைக் காலம் – 2020

“நன்றி நவிலல் நாளில் கடும் துக்கத்தினூடே பலருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம். இந்தப் போரில் எண்ணற்ற இராணுவ, விமான, கப்பற்படை வீரர்களை இழந்துள்ளோம். அவர்களுக்கு நாம் தெரிவிக்கும் தாழ்மையான நன்றி ஆழ்ந்த துக்கத்தைக் கொண்டது. இந்த நவம்பர் 22, 1945 வியாழக் கிழமையை, தேசிய நன்றி தெரிவிக்கும் தினமாக அறிவிக்கிறேன். அந்த நாளில், நம் வீடுகளிலும், நம் வழிபாட்டுத் தலங்களிலும், தனித்தனியாகவும், குழுக்களாகவும், நம்மை ஆசிர்வதிக்கும் சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு நம் தாழ்மையான நன்றியைத் தெரிவித்துக் […]