admin
admin's Latest Posts
ஏ. ஆர். ரஹ்மான் – 25
ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திரையுலகில், இது இருபத்தைந்தாவது ஆண்டு. 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ரோஜா வெளியான சமயம், அவருடைய வயது 25. இந்த இளைஞன் தான் இந்திய இசையைப் புரட்டிப் போடப் போகிறான் என்றும், இவன் உள்ளூர் இசையை உலகிற்கும், பலவகை உலக இசையை நம்மூருக்கும் பரப்பவிருக்கும் ஆஸ்கர் நாயகனாக இருப்பான் என்று யாரும் எண்ணியிருக்கவில்லை. சாதனைகளுக்கு எந்த நிறுத்தமும் இல்லாமல், ஓடிக் கொண்டிருக்கும் ரஹ்மானின் இசைப்பயணத்தை, அவருடைய சிறந்த 25 பாடல்களைக் கேட்டுக்கொண்டே […]
விக்ரம் வேதா
மணிரத்னம் பாணியைக் கையில் எடுத்திருக்கிறார்கள் இயக்குனர்கள் இணை காயத்ரி புஷ்கர். மணிரத்னம் தான் மஹாபாரதம், சத்தியவான் சாவித்திரி, ராமாயணம் என நாம் கேட்டு அறிந்த புராணக் கதைகளை, நாட்டு நடப்புகளுடன் இணைத்து, படங்களைக் கொடுத்து வந்தார். ரௌடியான கர்ணன், காஷ்மீர் போன சத்தியவான், சந்தன மரக் கடத்தல் செய்த ராவணன் என்று புராண மிக்ஸ் கதாபாத்திரங்களை வடிவமைத்து வந்தார். அந்த வகையில், இதில் நாம் சிறு வயதில் கேட்ட, வாசித்த, ரசித்த விக்ரமாதித்தன் வேதாளம் கதையை என்கவுண்டர் […]
விநாயக சதுர்த்தி! – வண்ணம் தீட்டுக
கன்னல் அரும்புகள்தம் எண்ணம் பிரதிபலிக்க வண்ணம் தீட்டிப்பின் மின்னஞ்சலில் அனுப்பிடுக !!
தவத்தில் எழுந்த தேவாலயம் – Grotto of the redemption
ஜெர்மனியில் 1872 ஆம் ஆண்டு பிறந்த பால் டோபர்ஸ்டேன் (Paul Dobberstein) தனது இருபதாவது வயதில் கல்லூரி கல்விக்காக அமெரிக்கா வந்தார். மில்வாக்கியில் ‘செயிண்ட் பிரான்சிஸ் தே செல்ஸ்’ (Saint Francis de Sales) கல்லூரியில் மதகுருக்களுக்கான படிப்பைப் படித்தார். படித்து முடித்து, தனது பொறுப்பை ஏற்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு ஜன்னி காய்ச்சலில் படுத்தார். அச்சமயம் கன்னிமாதாவிடம், தான் உயிர் பிழைத்து வந்தால், அவருக்குத் தேவாலயம் கட்டுவதாக வேண்டினார். அவரது வேண்டுதல் பலித்தது. மீட்சிக்கான மண்டபத்தை […]
ஓட்டு வீடு
காசி வீட்டிற்குள் இருக்க முடியாமல் தவித்தார். அந்தச் செங்கல் சுவர், பெயிண்ட் எல்லாம் இறுக்குவது போல இருந்தது. வீட்டின் வாசல் நோக்கி நடந்தார். மனைவி சுபா புரிந்தது போல ஒரு குவளை தண்ணீரைக் கையில் ஏந்தியபடி அவரைத் தொடர்ந்தார். அந்த வீட்டின் வாசலில் உள்ள சிறிய வராந்தாவில் அமர்ந்தார். வெளிக் காற்று, ஏதோ இறுக்கத்தைக் குறைத்தது போல இருந்தது. ஆனாலும் முழு அமைதி இல்லை. “சுபா .. மனசுக்கு கஷ்டம் குறையல.. அம்மா திடீர்னு இப்படி போவான்னு […]
நாட்டின் நெறிமுறைகள் (Ethics) கேள்விக்குறியிலா?
நாட்டின் நெறிமுறைகள் கேள்விக்குறிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அன்றாடம் தொலைக்காட்சியைப் பார்த்தால், வானொலி கேட்டால், பத்திரிகை இணையதள எழுத்துக்களை வாசித்தால் அமெரிக்க அரசியல் ஏதோ சர்க்கஸ் கும்மாளம் என்பது போல நமக்குத் தோன்றலாம். ஆயினும் சனநாயக கோட்பாட்டையே கேள்விக்குறியாக்க கூடிய நிலைமைகளை நாம் புறக்கணிக்கலாகாது. நாட்டின் 230 ஆண்டுச் சரித்திரத்தில் அரசு நெறிமுறைகள் (Government Ethics) பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன என்கிறார் அண்மையில் பதவி விலகிய, அமெரிக்க அரசு நெறிமுறை (U.S. Office of Government Ethics) அலுவலக அதிகாரி […]
ப்ரோக்கலி பைட்ஸ்
ப்ரோக்கலி (Broccoli) என்றாலே அது ஒரு நல்ல காய்கறி என்ற மனப் பிம்பம் வந்துவிடும். வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல், பச்சை நிறக் காய்கறிகள் எல்லாம் நல்லதே என்று ஒரு நம்பிக்கை. அது பெரும்பாலும் உண்மையும் கூட. ப்ரோக்கலி விஷயத்தில் முற்றிலும் உண்மை. ப்ரோக்கலி, முதன் முதலில் இத்தாலியின் மத்திய தரைக்கடல் கரைப் பகுதிகளில் விளைவிக்கப்பட்டது. அமெரிக்காவில் 1920களின் வாக்கில் தான் நுழைந்தது. தற்சமயம் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. […]
தாய்நாடு திரும்புவாய்..!.செல்லமகனே..!
எந்தன் தாயுன்னைத் தேடுகிறாள்
—-எங்கே சென்றாய் செல்லமகனே..!
தாய் நாட்டில் கல்வியறிவுபெற்று..
—-அயல் மண்ணில் பணியாற்றவா..!
இயந்திரமாய் எளிதில் பொருளீட்ட..
—-இயல் புக்கெதிராய் மாறினாயோ..!
நீவளர்ந்த ஊரிங்கே நித்தம்..
5 மற்றும் 10 கிலோமீட்டர் ஓட்டப் பந்தயம் (Are you hungry MN)
ஜூலை 22ம் தேதி ஆர் யு ஹங்ரி (Are you hungry MN) சார்பில் ஐந்து மற்றும் பத்து கிலோமீட்டர் ஓட்டப் பந்தயம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஈடன் ப்ரைரே (Eden Prairie) நகரத்திலுள்ள ஸ்டாரிங் ஏரிப் பூங்காவில் (Staring Lake Park) நடைபெற்றது. இப்போட்டியை ‘ஆர் யு ஹங்ரி?’ நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். போட்டி 9 மணிக்கு ஆரம்பித்தது சுமார் 10:30 மணியளவில் போட்டி நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 214 பேர் ஓடி […]
மீண்டு(ம்) வரும் சுதந்திரம்
விண்ணோர் போற்றிடும் வகைவாழ்ந்து
வியத்தகு சாத்திரம் பல படைத்து
மண்ணோர் வாழ்நெறி வரையறுத்த
மதிநிறை மக்கள் வாழ்ந்திட்ட தேசமிது!!
பல்லாயிரம் ஆண்டுகள் முன்னமேயே
சொல்லால் செயலால் நிலையுணர்ந்து
பொல்லாதது செய்யாது வாழ்ந்திருந்து
வெல்லாத துறையில்லாதிருந்த தேசமிது !







