admin
admin's Latest Posts
வாசகர்களுக்கு வணக்கம் !
அனைவருக்கும் பனிப்பூக்களின் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2017 ஆம் ஆண்டு இப்பொழுதுதான் தொடங்கியது போல் இருந்தது. தொடங்கிய சுவடு தெரியாமல், வருடம் முடிவுக்கு வந்து விட்டது. நாமும் இதேபோல் ஒவ்வொரு வருடப் பிறப்பிலும் சொல்லிக் கொண்டு, மறு நாளே அந்த நினைவுகளைக் கைவிட்டு நம் வேலைகளைத் தொடர்கிறோம். இதேபோல் ஒரு நாள், நாம் வேண்டினாலும் வேண்டா விட்டாலும், இந்நிலவுலகு நீத்துப் போகவும் போகிறோம். இதுவே நிதர்சனம். எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை மனித குலம் செய்திருந்தாலும், பிறப்பு இறப்பை […]
விடைபெறும் 2017
‘காய்ந்த நிலங்கள் கருகும்; காலத்தே வெள்ளம் பெருகும்; லண்டன், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பெருவாரிநோய் பரவும்; வல்லரசு நாடொன்று போர்த் தாக்குதலால் நிலைகுலையும்; சில காலம் உலகில் நோய்கள் ஒழியும், அமைதி பரவும்; மீண்டும் போர் துவங்கும்; அரசியொருத்தியின் ரகசியங்கள் வெளிவரும்; இரண்டு முறைகள் தவறி மூன்றாவது முறை மேற்கத்திய நாடொன்று கிழக்கத்திய நாடுகளால் வீழ்ச்சியுறும்’ இந்த வரிகள், நாஸ்டிராடாமஸ் ஐநூறு ஆண்டுகளுக்கு முன், தனது ‘தீர்க்கதரிசனங்கள்’ என்ற புத்தகத்தில், 2017ஆம் ஆண்டுக்கான கணிப்புகளாக எழுதியவை. உலகில் […]
வேலைக்காரன்
தனி ஒருவன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜாவும், ரெமோ படத்திற்குப் பிறகு சிவகார்த்தி்கேயனும் இந்த வேலைக்காரனில் கைகோர்த்திருக்கிறார்கள். தங்கள் முந்தையப் படங்களில் வெற்றிப் பெற்ற இயக்குனரும் நாயகனும் தரும் அடுத்தப் படம் என்பதால் இயல்பாகவே இப்படத்தின் மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திச் செய்ததா எனப் பார்ப்போம். கொலைகாரக் குப்பத்தில், குப்பத்து மக்களுக்கெனப் பிரத்யேக ஃஎப்.எம். சர்விஸ் தொடங்குகிறார், அம்மக்களுக்கான அக்கறையுடன் அங்கிருக்கும் படித்த வேலையில்லாத இளைஞரான சிவகார்த்திகேயன். அந்த வானொலிக்கான […]
எதிர்பாராதது…!? (பாகம் 6)
( * பாகம் 5 * ) இன்று பிரேம்குமாருக்குப் படப்பிடிப்பு எதுவுமில்லை. நாளை காலையில் ஊட்டியில் இருக்க வேண்டும். ஃப்ளைட் பிடித்து கோவை சென்று, அங்கிருந்து காரில் உதகமண்டலம் சென்று விடலாம். அதுதான் அவன் பிளான். ஆனால் நந்தினியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாயிருந்தது முதலில். இப்போது அது மாறிவிட்டது. அவளாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டாள். இப்போதுதான் சூடு பிடிக்கிறது விஷயம். மனசு ஏன் இப்படிப் பறக்கிறது? . திருமணத்தை முடித்துக் கொண்டு செட்டிலாகக் […]
பூனை
காலத்தை வெல்ல வேண்டுமே ! கால்களில் காகமும் குருவியும் — காலையில் கிழக்கு நோக்கி பணிக்குப் பறக்கும் தந்தை – வேகுமோ அரிசியும் பருப்பும் வேகத்தில் நடக்கிறது சமையல் – அவகாசம் கொடுக்காத அவசரம் – வேலைக்கு நேரமாகிறதே – மேற்கே பறக்கும் தாய் – ஓ ! குட்டிப்பூனையே ! அந்தக் குழந்தையிடம் அன்பு காட்ட , பாசம் பொழிய , உன்னைத்தவிர யாரிருக்கார் இந்த பொருள்சார் உலகில் ? – கவிஞர் டாக்டர் எஸ். […]
அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்
அமெரிக்காவில் டிசம்பர் மாதம் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை கொண்டாட்டங்கள், நத்தார் (Christmas) தினக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு விருந்துகள் ஆகியவையே ஆகும். இந்தக் கொண்டாட்டங்களின்போது வண்ண வண்ண அலங்கார விளக்குகள் பலவற்றை அலங்கரித்துச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு மையக் கருத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள். அதுபோன்ற அலங்காரங்களிலும், கொண்டாட்டங்களிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக:
தெய்வத் தமிழிசை
“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் பகவான் கிருஷ்ணரே கூறி இருப்பதை நாம் அறிவோம். மார்கழி என்றாலே , அதிகாலை நேரம், கோயில் மணிகள், வண்ண வண்ணக் கோலங்கள், சூடான பொங்கல், மெல்லிய பனி, கச்சேரிகளோடு காற்றில் கலந்த சங்கீதம்மற்றும் பக்தி இவைதான் நமக்கு நினைவில் வருவது. மினசோட்டாவின் இந்த ஆண்டு மார்கழியும் அது போலவே. முழுப் பனி, சூடான பொங்கல், காற்றில் கலந்த சங்கீதம் மற்றும் பக்தியே. லயசாரம் மற்றும் “க்ளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிட்டி […]
நியூ இயர் ரெஸொல்யூஷன்
”ஏன்னா… அடுத்த வாரம் வருஷப் பொறப்பு… என்ன ரெஸொல்யூஷன் எடுக்கறதா இருக்கேள்?..” ஏதோ பொடி வைத்துக் கேட்கிறாள் என்பதாக உணர்ந்த கணேஷ், உஷாரா இருக்கணும் என்ற உள் மனக் குரலுக்கு மதிப்பளித்து, “ஏன்.. ஏன் கேக்குற?” என்று பொதுப்படையாகக் கேட்டு வைத்தான். ”இல்லன்னா.. எல்லாரும் ஏதேதோ ரெஸொல்யூஷன் எடுத்துக்கறாளே.. அது போல நீங்களும் ஏதாவது கெட்ட பழக்கத்த விடப்போறேன்னு சொல்லுவேளோன்னு பாத்தேன்” என்றாள் லக்ஷ்மி. ”ஏண்டி, நோக்கு ஏன் இந்த வம்பு? நான் பாட்டுக்கு தேமேனு டி.வி. […]
எம்.ஜி.ஆர்.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் சிறந்த வெற்றிப்பட நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்த இவர், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டவர். அவருக்கு நடிப்பும், அரசியலும் இரு கண்களாக அமைந்திருந்தன. இளமைக் காலத்திலேயே, பல நாடகக் குழுக்களில் பிரபலமாகத் திகழ்ந்தார். காந்தியடிகள் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிதும் பற்றுக் கொண்டு, இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக ஈடுபட்டவர் எம்.ஜி.ஆர். அநேக சிரமங்களுக்கிடையில் திரைப்படவுலகில் காலடி எடுத்து வைத்த எம்.ஜி.ஆர், முதல் சில படங்களுக்குப் […]







