admin
admin's Latest Posts
சிங்கறால் பொரித்த சோறு

வட அமெரிக்கப் பண்டிகைக் காலங்கள் அண்மிக்கின்றன, இதன் போது கடலுணவு வேண்டும் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழேயுள்ள சமையலைத் தருகிறோம். சிங்கறால் பொரியல் சோறு இறால், மற்றும் நண்டு, கணவாய், சிப்பி போன்ற கடல் உணவுகளுடனும் தயாரித்துக் கொள்ளலாம். கடலுணவு வகைகளின் சுவை, அவை எவ்வளவு பக்குவமாகச் சமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். தேவையானவை: 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி பப்பிரிக்கா (paprika) 1 – 2 கரண்டி கறித் தூள் 2 கோப்பை […]
போர்வை

மினியாபொலிஸில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. லேசாகக் குளிரும் இந்த அறையில் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து ஜன்னலின் வழியே மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதாவது எழுதலாம். என்ன எழுதுவது..? இந்த மழை பற்றியா? வேண்டாம் நிறைய எழுத வேண்டும். இந்த மழையின் குளிரிலிருந்து காக்கும் இந்தப் போர்வை பற்றி எழுதலாமா ..? அட, புதுசா இருக்கே..!! எழுதுவோம்.. நல்லா இருந்தா பாராட்டிச் சொல்லுங்க.. நல்லா இல்லைனா..? வேற என்ன பண்றது ? அதையும் சொல்லுங்க .. கேட்டுத் […]
காசேதான் கடவுளடா நாடகம்

அக்டோபர் ௮, 2017 , மினியாபொலிஸ் நகரைச் சிரிப்பு புயல் தாக்கியது. 1970 ல் வெளிவந்த காசேதான் கடவுளடா தமிழ்ப் படத்தை நாடகமாக்கியுள்ளார் Y Gee மகேந்திரன். அவர் நடத்தும் யுனைடெட் அமெசூர் ஆர்ட்டிஸ்ட் (United Amateur Artists) நிறுவனத்தினர் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஷங்கர் கிருஷ்ணன் நடத்தும் மினசோட்டா பிரெண்ட்ஸ் கேரியோக்கி (Minnesota Friends Karaoke) என்னும் மினியாபொலிஸ் அமைப்பு இவர்களை அழைத்து வந்தது. திரு Y Gee மகேந்திரன் இந்த நாடகத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (நவம்பர் 2017)

வருட இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். வருட இறுதியில் இந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த பாடல்களைக் காணப் போகும் முன்பு, சென்ற இரு மாதங்களில் வந்த பாடல்களில் மனதைக் கவர்ந்த சிலவற்றைப் பார்த்து விடலாம். மகளிர் மட்டும் – அடி வாடி திமிரா பெண்களை மையமாகக் கொண்டு இயக்குனர் பிரம்மா இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்த இப்படத்தின் இப்பாடல் வெகுக்காலத்திற்கு முன்பே வெளியாகி ஹிட்டாகி இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் அவ்வப்போது எங்கோ போய்விடுகிறார். வரும்போது, கவனிக்கத்தக்க பாடல்களைத் தந்துவிடுகிறார். ஜோதிகா […]
“லக்ஷ்மி” குறும்படம்

அண்மையில் வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பல விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியுள்ள குறும்படம் – லக்ஷ்மி. முழுநீளத் திரைப்படங்கள் பலவும் கவனிக்கப்படாமல் போய்விடும் காலக்கட்டத்தில் குறும்படம் ஒன்று மக்களைச் சென்றடைந்துள்ளது மகிழ்வளிக்கிறது. இதற்கு படத்தில் கையாளப்பட்டுள்ள கருத்தும் காரணமாயிருக்கலாம். மிகச் சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷ்மி எனும் பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவம் பற்றியது தான் கதை. கணவன், ஒரு பிள்ளை என்ற சிறிய வட்டத்துக்குள் இயந்திரமாக வாழும் லக்ஷ்மி, ஒரு சந்தர்ப்பத்தில் அந்நியன் ஒருவனின் அன்பில் […]
மறு பிறவி

சிவந்த மண்ணில் புதைந்தேன். தளிர் விட்டு முளைத்தேன். தண்ணீர் குடித்து வளர்ந்தேன். உரம் உண்டு செழித்தேன். கிளைகள் பல விட்டேன். நிழலைப் பலருக்குக் கொடுத்தேன். பூக்கள் பலர் கவரப் பூத்தேன். தேனீக்களைத் தேடி வரச் செய்தேன். சுவையான கனியானேன். சிறார்களிடம் கல்லெறி பட்டேன். அணில்கள் சுவைக்கும் பழமானேன் ரசித்து உண்ண பழம் கொடுத்தேன் இறைவனுக்கு என்னை அற்பணித்தேன் புயலில் நான் சரிந்தேன் கேட்பார் அற்று கிடந்தேன் என் முடிவை நெருங்கினேன் அடுப்புக்கு காய்ந்த விறகானேன் சுவைத்து […]
குடிமகனின் மகன்

1966 ஆண்டில் நான் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றபின், சிறீ லங்கா தொலை தொடர்பு திணைக் களத்தில் சிரேஷ்ட பொறியியலாராக உத்தியோகம் கிடைத்து வேலை செய்த காலகட்டத்தில், எனக்கு அறிமுகமான பல இன நண்பர்கள் அதிகம். அதற்குக் காரணம் நான் தமிழ் ஆங்கிலம், சிங்கள மொழிகளைச் சரளமாகப் பேசுவேன். அதோடு எல்லோருடனும் அன்பாகப் பழகும் குணம் உள்ளவன். அப்போது திருமணமாகாத நான் தங்கியிருந்தது கொழும்புக்கு அருகேயுள்ள வெள்ளவத்தையில், சம்மரி என்று அழைக்கப்படும மூன்று அறைகளைக் கொண்ட வாடகைவீட்டில். […]
சொற்சதுக்கம் 6 – விடைகள்

விடைகள் பரி பசி வரி ரசி வசி தரி சிரி தவம் சிரம் படம் வடம் பதம் வதம் ரதம் தடம் வரம் தனம் வனம் பம்பரம் வதனம் பரதம் தரிசி டம்பம் ரம்பம் சிதம்பரம் – ரவிக்குமார்
சொற்சதுக்கம் 6

கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்துக்கள் கொண்டவையாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் கொண்டவையாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே உங்களுக்குத் தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். விடைகள்