admin
admin's Latest Posts
மாலைப் பொழுதில் மயக்கும் சப்தஸ்வரங்கள்
உடல், பொருள், நாடி, நரம்பு, ஆன்மா அனைத்தும் சங்கீதம் பற்றிய நினைப்போடு துடிக்க வேண்டும் என்றால் நீங்கள் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். “Sapthswarangal a evening of musical enchantment ” என்ற தலைப்புக்கு ஏற்ற வாறு ஒரு “ இசையால் மந்திரித்த” மாலைப் பொழுது. கச்சேரியின் முதல் வர்ணமாக “Cool” ராகமாக ஆரம்பித்த பெஹாக் “வனஜாக்ஷி ” காதுகளில் தேன் போல் வந்தது. கம்பீரமாக வந்த “அடாணா” வில் “ஸ்ரீ மஹாகணபதி” களை கட்டியது. […]
ஹாலோவீன்
ஆதவன் சற்றே இளைப்பாற அந்திமம் சற்றே பவனி வர விருந்தா வித்தையா என அறிந்தும் அறியாமலே விந்தையாய் கேள்விதனைக் கேட்டபடி உலாவரும் குழந்தைகளை மகிழ்விக்க அக்டோபரில் வந்த ஹாலோவீனே இன்முகத்தை முகமூடிக்குள் மறைத்தே இடையினில் மந்திரக்கோலைக் கொண்டே விந்தைபல காட்டி வியக்கச் செய்தே இனிப்புகளை அள்ளிச் சென்ற ஹாரிபார்டரையும் அறிந்தும் அறியாமலே சாகசமாய் எண்ணி மகிழ்வித்த ஹாலோவீனே இல்லாத ஆவியையும் பிசாசையும் இன்பமாய் கொண்டாடி மகிழவே காண்பவருக்கு பயத்தினையும் அணிபவருக்கு இன்பத்தையும் […]
இரவல் சொர்க்கம்
‘ஓர் உயிரைக் காப்பாற்ற இன்னோர் உயிரைப் பறித்தது முறைதானா?’ ‘பிள்ளையைக் காக்க கணவருக்கு முடிவளித்தது சரியா?’ ‘வாழ்வில் இனி எனக்கு நிம்மதி கிட்டுமா?’ கத்தியின்றி இரத்தமின்றி கேள்விகளாலேயே ரணமாக்கும் வல்லமைகொண்ட வக்கீலான மனசாட்சியிடமிருந்து தப்ப முடியாது தவித்துக்கொண்டிருந்தாள் ஆதிரை. கேள்விகள்…. கேள்விகள்…. விடாது துரத்தும் கேள்விகள்… எங்கே ஓடுவாள் ஆதிரை? ஓடத்தான் முடியுமா? கடந்த ஆறுமாதத்திற்கு மேலாக ஓடி ஓடியே உருத்தெரியாது போய்விட்டாளே! இனியும் ஓடுவதில் அர்த்தமில்லை எனும் நிலையில் சுருண்டு விழுந்தவளுக்கு, அந்த ஆயாசம்கூட […]
நாமும் நமது மினசோட்டாச் சூழலும்
வாருங்கள் நாம் ஒரு சூற்றாடல் சாகச ஆய்விற்குச் செல்வோம். நாம் மினசோட்டா மாநிலத்தில் வசிப்பவர்கள் என்றால் எமக்கு இவ்விட ஏரிகள், பூங்காக்கள் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். இனி இதை சற்று விபரமாக அறிந்து கொள்வோம். நீங்கள் மினசோட்டா மாநிலத்தில் எங்கு வாழ்ந்தாலும் ஒரு இயற்கைப் பூங்கா உங்கள் அருகில் இருக்கும். நமது மாநிலத்தில் 67 பூங்காக்கள் உண்டு. அதேசமயம் உல்லாசமாக 62 கூடாரம் போட்டு சமைத்துச் சாப்பிட, ஏரிகள் ஆறுகளில் நீந்தி விளையாட எமக்கு வசதிகளும் உண்டு. […]
சாதல் வைபோகமே!
அமெரிக்கா வந்த புதிதில், வியப்புக்குண்டாக்கிய அமெரிக்கர்களின் நடவடிக்கைகளில், இந்த ஹாலோவீன் (Halloween) கொண்டாட்டமும் ஒன்றாக இருந்தது. அதுவரை விழா என்பதும், கொண்டாட்டம் என்பதும் மங்களகரமான அம்சமாகவே பார்த்த எனக்கு, இந்தப் பேய்த்தனமான கொண்டாட்டம் வியப்பு அளித்ததில் எந்த வியப்பும் இல்லை. ஆங்காங்கே பேய் வீடு செட் போடுவார்கள். பேய் கெட்டப்புடன் சுற்றுவார்கள். கடைகளில் எலும்புக்கூடு, ரத்தக் காட்டேரி பொம்மைகள் விற்பார்கள். இப்படி இவர்களது செய்கைகள், பேய்களை ரொம்பவும் காமெடி பீசுகளாகக் காட்டுவதாக இருக்கும். நம்மூரில் பேய்களை வைத்து […]
அடச்சே என்ன வாழ்க்கை இது
காலை மணி ஐந்து. பக்கத்தில் இருந்த அலாரம் அடித்தது. முதல் நாள் இரவு offshore call லேட்டா தான் படுத்திருந்தாள். உடல் எழுந்திருக்க மறுத்தது. திரும்பி படுக்கத் தோன்றிய மனதை அடக்கி எழுந்தாள் அகல்யா. காலை கடன்களை முடித்து விட்டு சமையல் அறைக்கு உயிர் கொடுத்தாள். குழந்தைகளின் மதிய உணவை வேகமாக தயார் செய்தாள். கடிகாரம் மீது ஒரு கண்ணை வைத்தபடி, மூத்தவன் அதர்வா பையிலும், சின்னவள் ஆதிரை பையிலும் மதிய டப்பாக்களை அடைத்தாள். மணி 6.15. […]
அன்புநிறைந்த மணவாழ்வு
குடும்பம் ஒரு பல்கலைகழகம் என்பர். அந்த குடும்பத்தில் தன்னலமற்ற அன்பு எனப்படுவது ஆழமான நட்பு மற்றும் பிரதிபலன் எதிர்பாராத அணுகு முறையை கொண்டது. மேலும் மற்றவர்களுடைய நலனில் அக்கறை செலுத்துவது. அன்பான ஒருவர் மற்றவரை மதிப்பவராகவும், மற்றவரோடு சுமூகமான நட்பு கொண்டவராகவும், காலத்தால் உற்ற, உதவும்கரமாகவும் இருப்பார். குறைகளை மறந்து நம் வாழ்க்கைத் துணையுடன் கிடைக்கும் ஒவ்வொரு நல்ல தருணத்தையும் நிறைந்த மனதோடு போற்றுவது வளமான வாழ்வின் நற்பண்பு ஆகும். தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு உறவுகளில் […]
முத்தம் தாராயோ
மாயக் கவிக்கு முத்தமொன்று தாராயோ என் மனதினுள் நுழைந்து என்னைக் கலைந்தவளே என் பொன் மானே மாயச் சாவி கொண்டு என் மனதினைக் கொள்ளை கொண்டவளே வண்ண மலர்களால் எனைக் கொய்தவளே என் பெண் மானே இலையுதிர் காலத்தின் சுகத்தை தன் இதழால் வருடிக் கொடுத்தவளே காந்தப் பார்வையால் எனை நெய்தவளே என் பெண்ணழகே பனிக்காலக் குளிரின் இதத்தை தன் அழகின் அணைப்பால் அணைத்தவளே கள்ளப் பார்வையால் எனைக் கட்டி இழுத்தவளே என் அழகே ! அழகின் […]
மெர்சல்
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அட்லீயின் ஸ்டைல், ஏற்கனவே ஹிட்டான ஒரு படத்தைத் தற்போதைய ட்ரெண்டிற்கு மீள் – உருவாக்கம் செய்வது. மௌனராகம், சத்ரியன் என முதல் இரண்டு படங்களில் மணிரத்னத்தை ஃபாலோ செய்தவர், மூன்றாம் படமான மெர்சலில் அபூர்வ சகோதரர்கள் சாயல் கதையை, தனது குருநாதர் ஷங்கர் பட பாணியில் படமாக்கியிருக்கிறார். முதல் முறையாக, மூன்று வேடங்களில் விஜய். பத்து வேடங்களில் நடித்தாலும், விஜய் வித்தியாசம் காட்ட மாட்டார் என்று தெரியும். அவரென்ன வச்சுக்கிட்டா […]







