admin
admin's Latest Posts
அடச்சே என்ன வாழ்க்கை இது

காலை மணி ஐந்து. பக்கத்தில் இருந்த அலாரம் அடித்தது. முதல் நாள் இரவு offshore call லேட்டா தான் படுத்திருந்தாள். உடல் எழுந்திருக்க மறுத்தது. திரும்பி படுக்கத் தோன்றிய மனதை அடக்கி எழுந்தாள் அகல்யா. காலை கடன்களை முடித்து விட்டு சமையல் அறைக்கு உயிர் கொடுத்தாள். குழந்தைகளின் மதிய உணவை வேகமாக தயார் செய்தாள். கடிகாரம் மீது ஒரு கண்ணை வைத்தபடி, மூத்தவன் அதர்வா பையிலும், சின்னவள் ஆதிரை பையிலும் மதிய டப்பாக்களை அடைத்தாள். மணி 6.15. […]
அன்புநிறைந்த மணவாழ்வு

குடும்பம் ஒரு பல்கலைகழகம் என்பர். அந்த குடும்பத்தில் தன்னலமற்ற அன்பு எனப்படுவது ஆழமான நட்பு மற்றும் பிரதிபலன் எதிர்பாராத அணுகு முறையை கொண்டது. மேலும் மற்றவர்களுடைய நலனில் அக்கறை செலுத்துவது. அன்பான ஒருவர் மற்றவரை மதிப்பவராகவும், மற்றவரோடு சுமூகமான நட்பு கொண்டவராகவும், காலத்தால் உற்ற, உதவும்கரமாகவும் இருப்பார். குறைகளை மறந்து நம் வாழ்க்கைத் துணையுடன் கிடைக்கும் ஒவ்வொரு நல்ல தருணத்தையும் நிறைந்த மனதோடு போற்றுவது வளமான வாழ்வின் நற்பண்பு ஆகும். தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு உறவுகளில் […]
முத்தம் தாராயோ

மாயக் கவிக்கு முத்தமொன்று தாராயோ என் மனதினுள் நுழைந்து என்னைக் கலைந்தவளே என் பொன் மானே மாயச் சாவி கொண்டு என் மனதினைக் கொள்ளை கொண்டவளே வண்ண மலர்களால் எனைக் கொய்தவளே என் பெண் மானே இலையுதிர் காலத்தின் சுகத்தை தன் இதழால் வருடிக் கொடுத்தவளே காந்தப் பார்வையால் எனை நெய்தவளே என் பெண்ணழகே பனிக்காலக் குளிரின் இதத்தை தன் அழகின் அணைப்பால் அணைத்தவளே கள்ளப் பார்வையால் எனைக் கட்டி இழுத்தவளே என் அழகே ! அழகின் […]
மெர்சல்

ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அட்லீயின் ஸ்டைல், ஏற்கனவே ஹிட்டான ஒரு படத்தைத் தற்போதைய ட்ரெண்டிற்கு மீள் – உருவாக்கம் செய்வது. மௌனராகம், சத்ரியன் என முதல் இரண்டு படங்களில் மணிரத்னத்தை ஃபாலோ செய்தவர், மூன்றாம் படமான மெர்சலில் அபூர்வ சகோதரர்கள் சாயல் கதையை, தனது குருநாதர் ஷங்கர் பட பாணியில் படமாக்கியிருக்கிறார். முதல் முறையாக, மூன்று வேடங்களில் விஜய். பத்து வேடங்களில் நடித்தாலும், விஜய் வித்தியாசம் காட்ட மாட்டார் என்று தெரியும். அவரென்ன வச்சுக்கிட்டா […]
அனுபவம் புதுமை

ஜூன் மாதத்தில் ஒரு நாள், என் மகள் அம்மு கேட்டாள், “அப்பா, என் பிறந்த நாளுக்கு எனக்குப் பரிசுபொருள் எதுவும் வேண்டாம். எனக்குப் பிடித்த இசைக்குழுக் கச்சேரிக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்”. நானும் இது அக்டோபரில் தானே என்று நினைத்துச் சரி என்று சொல்லிவிட்டேன். அன்று ஆரம்பித்தது என் அனுபவப் பயணம். தினமும் “டிக்கெட் வாங்கியாச்சா” என்று கேட்டவண்ணம் தான் பேச்சைத் துவங்குவாள். அவள் சொன்ன படியே ஆளுக்கு நூறு டாலர் செலவழித்து “இமேஜின் டிராகன்ஸ்” ( […]
ரஜினி Vs கமல் – யாருக்கு ஓட்டுப் போடலாம்?

கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த அதே சமயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும் தீவிர அரசியலில் இருந்து உடல் நிலை காரணமாக விலகினார். தமிழகத்தின் அசைக்க முடியாத ஆளுமைகளாக இருந்த இந்த இருவரும் விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பலரும் முயலுகிறார்கள். ஏற்கனவே களத்தில் இருப்பவர்கள், களத்திற்கு வர நினைத்தவர்கள், எங்கிருந்தோ வந்தவர்கள் எனப் பல வகையினரை இப்போது காண முடிகிறது. அதில் முக்கியமாக ரஜினி, கமல் இருவரையும் […]
அசௌகரிய வீடு

இலையுதிர் காலத்தில் ஏரிக்கரை மரங்களின் நிறம் மாறுகின்றது. இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறுகின்றன. சில்லென்ற குளிரில் சில புற்களும் உலருகின்றன. ஏரிக்கு அருகே பல குட்டைகளும், வாய்க்கால்களும் உள்ளன. இவற்றில் மிதக்கும் அல்லிப்பூக்களும், அயல் நீர்த் தாவரங்களும் பூத்து ஓய்கின்றன. அல்லிக் கொடிகள் குட்டை மேல் நீர் கடந்து தெரிகின்றன. வட்ட இலைகள் வாடுகின்றன. இது இலையுதிர் கால இறுதியில் குட்டைகளின் தன்மை. நீரில் வளரும் தாவரங்கள் கோடை வெய்யிலில் பெருகும். பின்னர் அடுத்த வருடத்திற்கு உதவும் உக்கல் மண்ணாக […]
குற்ற உணர்ச்சி

“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வர வேண்டாம்” அப்பா அவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட கண்ணனுக்கு கோபம் ஒரு பக்கம், சிரிப்பு ஒரு பக்கம் வந்தது. இந்தச் சாமிநாதனை இதோடு எத்தனை தரம்தான் இப்படி மிரட்டிக் கொண்டே இருப்பார். அவரும் பதிலுக்கு, ”சரிங்க முதலாளி, இனிமே நேரத்துல வந்துடறேன்” .இதே வார்த்தைகள்தான் இவரிடம் வரும். இவனும் பல முறை அப்பாவிடம் சொல்லி விட்டான், ”அப்பா அவருக்கு ஓய்வு கொடுத்துடலாம், […]