\n"; } ?>
Top Ad
banner ad

அரசியல்

சின்னாபின்னமாகும் ஜனநாயகம்

சின்னாபின்னமாகும் ஜனநாயகம்

  ‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், […]

Continue Reading »

அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அமெரிக்காவின் நடப்பு அதிபராக, அதாவது 47வது அதிபராக, திரு. டிரம்ப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர், பல உத்தரவாதங்களை முன் வைத்து பேசினாலும், சுருக்கமாக ‘உலக அரங்கில் அமெரிக்கா இழந்திருக்கும் நன்மதிப்பையும், மரியாதையையும் மீட்பேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்புறச் செய்வேன்’ எனும் தாரக மந்திரத்தை வாக்காளர்கள் மனதில் அழுந்த பதியச் செய்து, வெற்றியும் கண்டார். வரிச் சுமையைக் குறைத்தல், விலைவாசியைக் குறைத்தல், முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்தல், உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொணர்தல், அமெரிக்கத் […]

Continue Reading »

பலமிழக்குமா அமெரிக்க டாலர்?

பலமிழக்குமா அமெரிக்க டாலர்?

ஜனவரி 20இல் பதவியேற்றதும், அதிபர் டானல்ட் டிரம்ப்  “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை அழிக்க முயன்றன. அவர்கள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்க விரும்புகிறார்கள். டாலரை அழிப்பதாகக் குறிப்பிடும் எந்த பிரிக்ஸ் நாட்டிற்கும் 150 சதவீத வரி விதிக்கப்படும். உங்கள் பொருட்களும், நாடுகளும் உடைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த வாரம், ”அமெரிக்க டாலருடன் யாரும் விளையாட வேண்டாம். ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், குறைந்தபட்சம் 100 சதவீத சுங்க வரியை எதிர்கொள்வார்கள் […]

Continue Reading »

வெறுப்பு சூழ் உலகு

வெறுப்பு சூழ் உலகு

‘சங்கி’, ‘திராவிடியா’, ‘கோட்டா ஜாதி’, ‘கிராஸ்பெல்ட்’, ‘பாவாடை’, ‘அரிசி மூட்டை’, ‘மூத்திர குடிக்கி’, ‘கூலிபான்’, ‘நூலாண்டி’, ‘முக்கா’, ‘அந்நிய கைக்கூலி’, ‘கிரிப்டோ கைக்கூலி’, ‘ஆண்ட பரம்பரை’, ‘வந்தேறி’, ‘சொம்பு தூக்கி’, ‘கொத்தடிமை’, ‘சொறியன்’ – நீங்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பாவிப்பவராக இருப்பீர்களென்றால், ஊடக அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சொற்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும். மேலும், ‘கதறுடா’, ‘கக்கூஸ் கழுவு’, ‘பர்னால் தடவிக்கோ’, ‘உண்டகட்டி வாங்கித் தின்னு’, ‘தொங்கிடு’ போன்ற சில அறிவுரைகள் வழங்கப்படுவதையும் காதுகள், […]

Continue Reading »

கலாட்டா 25

கலாட்டா 25

Continue Reading »

மடமையைக் கொளுத்துவோம்

மடமையைக் கொளுத்துவோம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதைப் போல இந்தாண்டும், மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  அன்றைய தினம் ஊடகங்களில், தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள் என தத்தம் வாழ்வில் சந்தித்த அனைத்துப் பெண்களுக்கும் விதவிதமான வடிவில் வாழ்த்துகளைச் சொல்லித் தீர்த்தனர். மறுதினமே, தன் மனைவியை சிலாகித்துப் பேசும் கணவனிடம் ‘யோவ், நேத்தே வுமன்ஸ் டே முடிஞ்சி போச்சு..’ என்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்வதான ‘மீம்ஸ்’ வெளிவந்து ‘லைக்ஸ்களை’ அள்ளியது. வேடிக்கையாகயிருந்தாலும் இது தான் […]

Continue Reading »

கருக்கலைப்புத் தடைச் சட்டம்

கருக்கலைப்புத் தடைச் சட்டம்

சில வாரங்களுக்கு முன்னர், கருக்கலைப்பு உரிமைகளுக்கான சட்டப் பாதுகாப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ‘ரோ – வேட்’ வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், 1973ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுவியிருந்த கருக்கலைப்பு பாதுகாப்புச் சட்டம், தொடக்க நாள் முதலே பல சர்ச்சைகளைக் கிளப்பி வந்தாலும், கருத்தடைத் தொடர்பான பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தது. மத்திய அரசமைப்பின் இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதால், கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் […]

Continue Reading »

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார்.   கேளுங்க.. பகிருங்க..

Continue Reading »

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய திமுக அரசு குறித்தும் இந்த வலையொலி பகுதியில் திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடியுள்ளனர். கேளுங்கள்.. பகிருங்கள்..

Continue Reading »

போடுங்கம்மா ஓட்டு!!

போடுங்கம்மா ஓட்டு!!

தமிழகத்தின் தேர்தல் நாளன்று தேர்தல் வரலாறு, தேர்தல் நடைமுறைகள் குறித்து பனிப்பூக்கள் அரட்டையின் இந்த பகுதியில் உரையாடுகிறார்கள் திரு. மதுசூதனன் மற்றும் திரு. சரவணகுமரன். காணுங்கள்.. பகிருங்கள்.. முக்கியமா, இன்று மறவாமல் ஓட்டு போடுங்கள்..

Continue Reading »

ad banner
Bottom Sml Ad