admin
admin's Latest Posts
பத்மாவத் – திரை விமர்சனம்
மதம் – அரசியல் – சினிமா, இம்மூன்றும் எக்காலத்திலும் இல்லாத வகையில் தற்காலத்தில் ஒரு பெரும் தொடர்போடு செயல்பட்டு வருகிறது. அது இந்த ‘பத்மாவத்’ திரைப்படத்தின் மூலம் மேலும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. பிரமாண்ட இதிகாசப் படங்களுக்குப் புகழ் பெற்ற ஹிந்திப் பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, இந்த முறை கையில் எடுத்துக் கொண்டது, ராஜபுத்திர ராணியான பத்மாவதி பற்றி பதினாறாம் நூற்றாண்டில் மாலிக் முகமது ஜயாஸி என்னும் கவிஞர் எழுதிய ‘பத்மாவத்’ இதிகாசப் படைப்பை. ராணி […]
செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா
1885 ஆம் ஆண்டு ஒரு நியூயார்க் பத்திரிக்கையில் செயிண்ட் பாலை (Saint Paul) குளிர்காலத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற இடம் என்று ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிட்டு எழுதியிருந்தாராம். உடனே ரோஷம் கொண்ட செயிண்ட் பால் மக்கள் வாழ்வதற்கான தகுதி மட்டும் அல்ல, கொண்டாட்டத்திற்கும் இது ஏற்ற இடம் எனச் சூளுரைத்துத்தொடங்கியது தான் இந்தச் செயிண்ட் பால் குளிர்காலத் திருவிழா (Saint Paul Winter Carnival). 1886 இல் இருந்து ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் திருவிழா, இரண்டாம் உலகம் […]
சூப்பர் போல் லைவ்
மின்னியாபொலிஸில் ஃபிப்ரவரி 4ஆம் தேதியன்று சூப்பர் போல் ஃபுட்பால் இறுதிப் போட்டி டௌன்டவுனில் இருக்கும் யூ.எஸ். பேங்க் ஸ்டேடியத்தில் நடைபெறுவதையொட்டி, சூப்பர் போல் ரசிகர்களுக்காக டௌன்டவுன் நிக்கலட் மால் சாலையில் ஜனவரி 26 ஆம் தேதியிலிருந்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கு “சூப்பர் போல் லைவ்“ என்னும் கண் கவர் கொண்டாட்ட நிகழ்வை மினசோட்டா சூப்பர் போல் பொறுப்பு அமைப்பின் நடத்துகின்றனர். தினமும் இசை நிகழ்ச்சிகள், பனிச் சறுக்கு விளையாட்டுகள், ஜஸ் கட்டிச் சிலைகள், பல வகை உணவுகள் […]
எதிர்பாராதது…!? (பாகம் 10)
( * பாகம் 9 * ) பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது. சனங்களை ஒதுக்குவதே பிரயத்தனமாய் இருந்தது. எந்தக் காலத்திலும் சினிமா என்றால் இடம் மாறினாலும், தனிப் பிரேமைதான் மக்களுக்கு. பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின் பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான். உள்ளுக்குள் மெலிசாக உதறல். ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் […]
அந்த வாரம்
ஞாயிறு காலை பத்து மணியில் இருந்தே சங்கீதா பரபரவென அலைந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் ஆயிரம் ‘To-Do-’ லிஸ்ட். எல்லா நினைவுகளும் வரும் சனியன்று நடக்கப் போகும் தனது நண்பி கவுசி வீட்டு கிரகப்பிரவேசம் ஃபங்ஷன் போவது பற்றிதான். சங்கீதாவும், கவுசியும் நான்கு வருடங்களாக நெருங்கி பழகி வரும் ஃப்ரண்ட்ஸ். இருவர் குடும்பமும் ப்ளைமவுத் மற்று மேப்பில் க்ரோவ்வில் இருப்பதால் அடிக்கடி குடும்பத்தோடு சந்தித்து வாரயிறுதியில் நாட்களைக் கழிப்பார்கள். இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள். ஒத்த வயது […]
நீரைத் தழுவும் காற்றின் சுகம்
நீரைத் தழுவும் காற்றின் சுகம் நெடுங்கோண இதழ்களால் சுட்டி நிற்கும் பிஞ்சுக் குழந்தையின் சிற்றொலி… இலவம் பாதம் நெகிழும் காற்றின் புல்வெளி … காலசைத்த புது உயிரின் விட்டம் பார்க்கும் சுட்டுவிழி…. எல்லாமாய் இயங்கும் புதிய சூரியனை கரங்களில் ஏந்துதல் உலகின் அப்பாக்களுக்கு நீரைத் தழுவும் காற்றின் சுகம். – முனைவர் சு.விமல்ராஜ்
தெய்வத் தமிழிசை – பாகம் 3
( * பாகம் 2 * ) “மனஸ்சேன லக்ணம் குரோரங்ரி பத்மே ததஹ் கிம் ததஹ் கிம் ததஹ் கிம் ததஹ் கிம்” என்ற ஆதி சங்கரரின் குரு அஷ்டகத்தின் வரிகளைத் துணைக் கொண்டு, குருவின் பாதங்களை சரணம் கொண்டபடி இந்த கட்டுரையைத் தொடங்குவது உசிதம் என நினைக்கிறேன். எவ்வளவு பெயர், புகழ், திடகாத்திரமான சரீரம், பணம் இருப்பினும் மனமானது குருவின் திருவடிகளை அடையாவிடில் என்ன பயன் என்ன பயன் என்ன பயன்.( ததஹ் […]
சூப்பர் பவுல் ஜோரில் மினசோட்டா
“ட்வின் சிட்டீஸில்” கண்கூடாகத் தெரிகிறது. மைனஸ் டிகிரி குளிரால், ஒரு பக்கம் வைரஸ் ஜூரம் இன்னொரு புறம் சூப்பர் பவுல் எனப்படும் ஃபுட்பால் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஜுரம். ஃபிப்ரவரி நான்காம் தேதியன்று நடக்கவிருக்கும் ஃபைனல் போட்டிக்காக இப்பொழுதே திருவிழாக் கோலமாகி விட்டது மின்னியாபொலிஸ் நகரம். பேருதான் அமெரிக்கக் கால்பந்து. ஆனால், அந்தப் பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடுவது கைகளால். என்ன தான் ஓடுவதற்குக் கால்கள் பயன்படுகிறது என்றாலும் இதைக் கால்பந்து என்று அழைப்பது வாழையடி வாழையாக அமெரிக்காவில் […]
எதிர்பாராதது…!? (பாகம் 9)
( * பாகம் 8 * ) ‘கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்…’ -அந்த நள்ளிரவில் சவமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நந்தினி பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது. வாட்ச்மேனை அழைக்க நினைத்தாள். மனைவிக்கு உடம்பு சரியில்லையென்று அவன் போயிருந்தது நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இப்போது கதவைத் திறப்பதா வேண்டாமா? வாழ்க்கையே தனிமைதான். அதுவாகவே அப்படி அமைந்து போனதும் இப்போது பழகிப் போய்த்தான் கிடக்கிறது. […]







