admin
admin's Latest Posts
மாறி வரும் மரபுகள் – தேவவிரதன்

காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் என்றான் ஓர் கவிஞன் கவிதைக்குப் பொய் அழகு என்றான் இன்னொரு புலவன் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒருவர் இன்று அந்த உறவு கடல் கடந்து போய் விட்டது கணினித் தொடர்புடன் இந்தியாவின் இதயம் கிராமங்களில் என்றார் ஒரு கிழவர் அந்த இதயத்தை விட்டு நகர்ந்து வருபவர்தான் இன்று நான் காணும் தலைமுறை மனதை ஒருமிக்க மதம் என்றனர் ஆன்றோர் ஆனால், மதத்தின் பெயரால் மதம் பிடித்து […]
ஒரே ஒரு சந்திரன் – பாகம் 3

(பாகம் 2) ராஜகுமாரி திரைப்படத்திற்கு முன்னரே, ராமச்சந்திரனுக்கு , நந்தலால் என்பவர் இயக்கிய ‘சாயா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது . படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே அவரது மனைவி பார்வதி உடல்நலம் குன்றி இறந்துவிட, ஊருக்குச் சென்றதால் ஹீரோ வாய்ப்பை அவர் இழக்க நேர்ந்தது. மனைவி இறந்தது ஒரு பக்கம், கதாநாயகன் வாய்ப்பு பறிபோனது ஒரு பக்கமென துயரங்கள் தாக்கிய போது ராமச்சந்திரன் ராணுவத்தில் சேர்ந்து விட விரும்பினார். அவரது மனதை மாற்றி திரைப்படங்களில் […]
மன்னிப்பாயா ..

நிரஞ்சனுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூங்க முடியவில்லை. படுக்கையை ஒட்டிய மேஜை மீதிருந்த செல்ஃபோனை எடுத்தான். பளீரென ஒளிர்ந்து கண்ணைக் கூசியது. கண்களை இடுக்கிப் பார்த்ததில் மணி 3.17 am என்று காட்டியது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தான். கால்களில் துணி விலகியதைக் கூட உணராமல், குழந்தை போல் குப்புறப் படுத்து, நித்சலனமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஷர்மி. தூக்கத்திலும் முகத்தில் மெலிய புன்னகை. விலகிக் கிடந்த நைட்டியை இழுத்துவிட்டு, பக்கத்திலிருந்த போர்வையைக் கழுத்து வரையில் போர்த்தி […]
மஹாகணபதிம் ஆவாஹயாமி……

”ஏன்னா….. நாளைக்குச் சத்த ஆஃபீஸுக்கு லீவு போட்றேளா?…. “ கேட்ட லக்ஷ்மியைச் சற்றுக் எரிச்சலுடன் பார்த்தான் கணேஷ். “ஏன், என்னத்துக்காக லீவு போடணும்?” என்று கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு சாதாரண தொனியில் கேட்க, “நாளைக்கு கணேஷச் சதுர்த்தின்னா…. ஆத்துல பூஜை பண்ணணும், இது ஆம்பளேள் பண்ற பூஜை”…. என்று இழுக்க, “நோக்குத் தெரியாதாடி, நேக்கு இந்த பூஜை புனஸ்காரத்துலெல்லாம் பெருசா இண்ட்ரஸ்ட் இல்லடி.. என்ன விட்டுடேன்….” என்று கெஞ்சத் தொடங்கினான். “நான் உங்கள எப்பப்பாத்தாலுமா தொந்திரவு […]
பகுத்தறிவு – பகுதி 7

(பகுதி 6) சென்ற இதழில் ரமணர் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரின் வாழ்வில் நடந்த பல சிறிய, ஆனால் அரிய நிகழ்வுகளையும், அவை காட்டும் பகுத்தறிவையும் தொடர்ந்து பார்ப்போம். ரமணர் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்று ஏற்கனவே பார்த்தோம். அவரின் அதீத ஞானத்தைச் சிறிது சிறிதாக உணரத் தொடங்கிய கிராம மக்கள் அவரைத் தினமும் வந்து பார்க்கத் தொடங்கினர். தினமும் வந்து பார்க்கத் தொடங்கியவர்கள், அவருக்கு உணவு, உடை எனக் கொடுத்துப் பாதுகாக்கத் தொடங்கினர். அவரின் பாதுகாப்பிற்காக […]
பெஞ்சமின் ஃபிராங்கிளின்

பிரித்தானியப் பேரரசு காலனிகளிலிருந்து (colonies) அமெரிக்கா சுதந்திர நாடாக வந்தமைக்கு, பலதாபகத் தந்தைகள் காரணமாக இருந்தனர். இவர்களில் முதன்மையானவர்களில் பெஞ்சமின் ஃபிராங்கிளினும் ஒருவர். இவர் நாட்டின் தாபகர் மாத்திரம் அல்ல, எழுத்தாளர், பதிப்பாளர், பெரும் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், இராஜதந்திரி , அரசியல்வாதி, ஆசிரியர், நூலகவியலாளர் என்று சகலகலா வல்லவர். அறிவாளர் ஃபிராங்கிளினின் ஆர்வமோ வரையறையற்றது இவர் மருத்துவத்தில் இருந்து, சங்கீதம், சிலேடை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், மெஞ்ஞானம் என பலவற்றையும் ஆவலுடன் தம் கருத்தில், சிந்தனையில் கொண்டவர். […]
வட அமெரிக்கத் தமிழ்த் தெருவிழா (Tamil Fest-Scarborough’s largest street festival)

நடுத்தெருவில் குத்தாட்டம் வேண்டுமா, கொம்பனாட்டம் வேண்டுமா, இல்லை சிலம்பாட்டம் வேண்டுமா? அல்லது பாட்டுக் கேட்டு ஆடணுமா, மெட்டுப்பாட்டு முணுமுணுக்கணுமா எல்லாமே உண்டு இந்தத் தமிழர் தெருத் திருவிழாவில். கனேடியத் தமிழ் மக்களின் தரமே வட அமெரிக்காவில் ஒரு தனி விசேடம். ஏறத்தாழ 300,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வாழும் ரொன்ரோ மாநகரில் ஸ்கார்பரோ பகுதியில் மூன்றாவது வருடமாக நடைபெறும் கனேடியப் பண்டிகை இது. இந்தப் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஊர்க் கோயில் […]
கவித்துளி

கவித்துளி 1 இரவின் மடியில் இளைப்பாறுகையிலே இன்னிசை மழை இனிதெனப் பொழிந்திடவே இளந்தென்றல் இதயத்தை இதமாய் வருடிடவே இசையில் இணைந்திட பாவிமனம் தவித்திடவே இன்பத்தின் உச்சந்தனை அள்ளி நுகர்ந்திடவே இன்னிசையோடு இயைந்தே இன்பத்தை எய்திடவே இதயத்தில் நாணத்தோடு காதல்தீபம் ஏற்றிடவே இன்முகத்தோடு இதய சிம்மாசனத்தில் ஏறிடவே இதழில் பழரசம் பருகிடக் காத்திருக்கவே இடுப்பு மடிப்பினில் இதயம் பறிபோயிடவே இரவின் நீளத்தில் கோலமகளும் நாணிடவே இரவின் ஒளியினில் இதழ் பதித்திடவே இன்னுயிரும் மெய்யதுவும் ஒன்றாகி இணைந்துவே !!! கவித்துளி 2 […]
மினசோட்டா தலைமையக மறுதிறப்பு (Minnesota Capitol Reopening)

முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மினசோட்டாவின் தலைமையகத்தில் 2013இல் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இருக்கைகளை அதிகரிப்பது, பொதுமக்களுக்கான புதிய கலந்துரையாடல் அறைகள் அமைப்பது, கழிப்பறைக் கட்டுமானங்கள், புதிய விருந்தினர் மையம் எனப் பல விஸ்தரிப்பு வேலைகள் நடைபெற்றன. இதற்காகச் சுமார் 310 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. இச்சமயத்தில், கட்டிடத்தின் சில பகுதிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. இம்மாதம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி, பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, தலைமையகம் மக்களின் முழுமையான பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. […]
பார்க்கர் ஏரி நீர் சறுக்கு (Water Ski Show)

மினசோட்டா எங்கும் ஏரிகளாக இருப்பதால், விதவிதமான நீர் சார்ந்த விளையாட்டுகளை இங்குள்ளோர் விளையாடுவதுண்டு. அதில் வாட்டர் ஸ்கீ (Water Ski) எனப்படும் நீர்ச் சறுக்கு விளையாட்டும் ஒன்று. பனியில் சறுக்கிச் செல்வது போல், தண்ணீரின் மேல் சறுக்கிச் செல்லும் விளையாட்டு இது. வேகமாகச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கும் கயிறை ஒரு குழுவாகப் பிடித்துக்கொண்டு, ஒருவர் பின் ஒருவராக, ஒருவர் மேல் ஒருவராகப் பல நிலைகளில், பார்வையாளர்களைக் கவருமாறு சாகசம் புரியும் விளையாட்டு இது. மினசோட்டாவில் நீர்ச் சறுக்கு […]