\n"; } ?>
Top Ad
banner ad

கட்டுரை

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10) பண்பாட்டுச் சிக்கல் உலகில் வாழும் எல்லா இனங்களுக்கும் தனித்துவமான மொழி, பண்பாடு என்பன இன்றியமையாதனவாக அமையப் பெற்றிருக்கும். எதை விட்டுக் கொடுத்தாலும் தமது தனித்துவத்தின் அடையாளங்களான இவற்றை விட்டுக்கொடுக்க இலகுவில் யாரும் முன்வர மாட்டார்கள். ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு இவை சவால் நிறைந்ததாக மாறியிருக்கின்றன. புலம்பெயர்ந்து சென்ற பலர் தாம் வாழ்கின்ற நாடுகளில் தமது பண்பாட்டைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்றனர். கலாசார விழாக்களை வருடந்தோறும் […]

Continue Reading »

ஊட்டச்சத்தும் ஊகங்களும்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments
ஊட்டச்சத்தும் ஊகங்களும்

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது, நமக்கு மட்டுமல்லாது நமது பிள்ளைகளுக்குச் சரியான வழிகாட்டுதலுக்கும் உதவும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு விழிப்புணர்வு நோக்கில் எழுதப்பட்டதே தவிர பரிந்துரை அல்ல. மார்ச் மாதம் ஊட்டச்சத்தினை வலியுறுத்தும் மாதம் ( National Nutrition month). ஊட்டச்சத்து எனும் சொற்பிரயோகம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுடன் மட்டுமே தொடர்புடையது என்று பலரும் நினைக்கிறோம். நம் அனைவருக்கும் உடல் முக்கியமானதொரு சொத்து. சுவர் இருந்தால் தான் சித்திரம் […]

Continue Reading »

லெமுரியா

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments
லெமுரியா

லெமுரியா பற்றி ஏற்கனவே பல விடயங்களைப்  பனிப்பூக்கள் இதழ்களில் பார்த்திருக்கிறோம். இந்தக் கட்டுரையில் லெமுரியா என்ற கண்டம் பற்றிய மூல வரலாற்றைப் பார்க்கலாம். சுமார் 19ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிற்குத் தென்கிழக்கில் உள்ள மடகாஸ்கர் என்ற தீவில் லெமுர் என்ற விலங்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த விலங்கு மனிதனுக்கும் குரங்கிற்கும் பொதுவான ஒரு மூலமாக இருக்கலாம் என்று விலங்கியல் வல்லுனர்களால் நம்பப்பட்டது. இந்த வகை விலங்குகள் பார்ப்பதற்கு 50% குரங்கு, 25% மனிதன், 10% பூனை, 15% அணில் […]

Continue Reading »

இராமரின் இரு முகங்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 2 Comments
இராமரின் இரு முகங்கள்

இறைவன் பூமியில் தினம் தினம் பல அவதாரங்களாக தோன்றி வாழ்த்திக்கொண்டு இருக்கிறார். தந்தையும் தாயும் நமக்கு முன்னறி தெய்வமன்றோ? விஷ்ணு பகவானும் இப்பூவுலகில் பல அவதாரம் எடுத்திருக்கிறார். அதில் சிறந்ததாகப் பத்து அவதாரத்தைச் சொல்லுவர். அந்தப் பத்து அவதாரத்தில் மிகச் சிறப்பு வாய்ந்தது இராமர் மற்றும் கிருஷ்ணர் அவதாரங்கள். இவ்விரு அவதாரங்களைப் பூரண அவதாரம் என்று சொல்லுவர். மற்ற அவதாரங்களைப் போல் இல்லாமல், தாயின் வயிற்றில் தோன்றி, பிள்ளைப் பருவம் தொடங்கி இறப்பு வரை இருந்தபடியால் அவ்வாறு […]

Continue Reading »

அமெரிக்க இருதய மாதம்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 0 Comments
அமெரிக்க இருதய மாதம்

நான் விசேட விரைவோட்டப் போட்டிக்காரனும் இல்லை, விளையாட்டு வீரனும் இல்லை எனக்கேன் இருதய நாடிக்கணக்கு? என்று நாம் கேட்டுக் கொள்ளலாம். இதன் காரணம் காலாகாலத்தில் வயது ஏறுதல் மற்றும் இளமுதிர்வு காலத்தை (40 – 55 வயதுகள்) அடைதல் போன்றனவாகும். இந்தக் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய இருதயப் பிரச்சினைகளை முடிந்த அளவு முன்கூட்டியே தெரிந்து கொள்ளுவது என்பது தான் விவரம் தெரிந்த மருத்துவ நிபுணர்கள் தரும் பதில். எமது இருதய அடிப்பு அல்லது நாடித்துடிப்பு என்பது எத்தனை தரமுடன் […]

Continue Reading »

ஐ பட விமர்சனம்

ஐ பட விமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் உருவான, திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ஐ படத்தை திரையில் பார்த்த எனது அனுபவத்தை இங்கு பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். “யானை வரும் பின்னே ;மணியோசை கேட்கும் முன்னே” என்பதற்கிணங்க, சங்கரின் திரைப்படமாகிய ஐ வெளிவருவதற்கு முன்பே பரபரப்புகளும் பேட்டிகளும் படக்காட்சிகளும் இணையத்தளத்தில், வலம் வர தொடங்கி விட்டன. இது மேலும் எனது ஆவலைப் பெருமளவில் தூண்டிவிட்டது என்னமோ உண்மைதான். திரைப்படம் வெளிவரும் நாளும், தமிழர் தைப்பொங்கல் நாளும் ஒன்றாக அமைந்துவிட நாட்களை எண்ணத் […]

Continue Reading »

பிள்ளைகளும் மின்நுகர்கருவி உபயோகங்களும்

Filed in கட்டுரை by on January 22, 2015 0 Comments
பிள்ளைகளும் மின்நுகர்கருவி உபயோகங்களும்

முன்குறிப்பு – இந்தக்கட்டுரை  பயம், பூச்சாண்டி காட்டுவதற்காக எழுதப்படவில்லை. மாறாக பெற்றோர்களைச் சற்றுத் தட்டியெழுப்பி  சிந்திக்க வைக்கவே எழுதப்பட்டுள்ளது. கண் இமைக்கவே காட்டாறு மாதிரி ஓடும் மின்தகவல் நூற்றாண்டில் பிள்ளைகளின் கைத்தொடர்பு சாதனங்களைத் தவிர்ப்பதா? மட்டுப்படுத்துவதா? இது நடைமுறைக்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது என்றும் நினைப்போம் நாம். ஆயினும் வளரும் மூளைக்கும் அதி மின்தகவல் நுகர்தலுக்கும் இடையே பிரதி விளைவுள்ள தொடர்புகள் உள்ளன என்கின்றன பத்து வருடங்களிற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள். இதற்கான காரணங்களை மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் […]

Continue Reading »

உறைபனியில் மீன் பிடித்தல்

Filed in கட்டுரை by on January 21, 2015 0 Comments
உறைபனியில் மீன் பிடித்தல்

அமெரிக்காவிலுள்ள மினசோட்டா மாகாணம், மற்றும் கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணங்களில் வாழும் மக்கள் பனிக்காலத்தில் பல்லாயிரம் ஏரிகள், ஆறுகளில் இந்நாட்டு மக்கள் பலர் உல்லாசமாகப் பனிக் கொட்டில் (icehouse/tent) கட்டி மீன் பிடிப்பதைப் பார்த்திருப்போம். உஷ்ணப் பிரதேசத்தில் இருந்து வந்த மக்களாகிய எமக்கு உறைபனியில் குளத்திற்கு நடுவில் போவது பாதுகாப்பானதா என்றும் தோன்றும். ஆயினும் வடஅமெரிக்க மாநிலங்கள், மாகாணங்கள் உறைபனியை அதிகம் பெறுவதால் இவ்விடம் வாழும் மக்கள் நீர் உறையும் தட்ப வெப்பங்களை அறிந்து, உறைபனிப் பருமனையும், மற்றைய […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10

Filed in கட்டுரை by on January 21, 2015 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-10

விசாச் சிக்கல் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்களில் பலர் தாம் சென்று குடியேறிய நாடுகளில் தங்குவதற்கான சட்டரீதியிலான அனுமதிப் பத்திரம் (எளைய) இன்றியே பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் அந்தந்த நாட்டிற்குரிய சட்டங்களின்படி புலம்பெயர்ந்து சென்ற பலர் நாடு கடத்தப்பட்டனர். வேறு சிலர் சிறை வைக்கப்பட்டனர். பலர் அபராதத் தொகையுடன் அனுமதிக்கப் பட்டனர். இன்னும் பலர் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டனர். தாம் எண்ணி வந்த எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிப் போக, புலம்பெயர்ந்த நாடுகளிலும் இவர்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட தமது எதிர்காலக் […]

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 15

உலகச் செம்மொழி – அத்தியாயம் 15

அத்தியாயம் 14 செல்ல இங்கே சொடுக்கவும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதியது போன்று பல மொழிகள் தமிழில் இருந்து தோன்றின அவற்றில் கடைசியாக தோன்றிய மொழி மலையாளம். இதை ஒத்துக்கொள்ள சிலர் தயங்கினாலும்   பெரும்பான்மையானோர் ஒத்துக்கொள்கிறார்கள். திராவிட மொழி வரலாற்றை முதன் முதலில் ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல் அவர்கள் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்த  தமிழே சம்ஸ்கிருதத்தின் தாக்கத்தினால் மலையாள மொழியானது என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார். இன்றும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad