\n"; } ?>
Top Ad
banner ad

கட்டுரை

நன்றி தெரிவிக்கும் திருநாள்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 6, 2013 1 Comment
நன்றி தெரிவிக்கும் திருநாள்

பொதுவாக மேற்கத்தியவர்களைப் பற்றிய கிழக்கத்திய மக்களின் கருத்து அவ்வளவாக உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் என்பதே. தொலைவிலிருந்து பார்த்து இவர்களின் விவாகரத்து விகிதங்களையும், ஹாலிவுட்டில் காட்டப்படும் முகத்தில் சற்றும் சலனமில்லாமல் பஞ்ச மா பாதகங்கள் புரியும் சாதாரண மனிதர்களையும் மட்டுமே பார்க்கும் கீழை நாட்டினருக்கு அது போன்ற ஒரு அபிப்ராயம் தோன்றுவதில் வியப்பெதுவும் இல்லை. அருகிலிருந்து பார்த்து, இவர்கள் குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளுக்கும், உறவுகளுக்கும் கொடுக்கும் மரியாதையையும், பல உயர்வான எண்ணங்களுக்கு (values) கொடுக்கும் முக்கியத்துவத்தையும் நேரில் பார்க்கையில், […]

Continue Reading »

சச்சின் டெண்டுல்கர்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 6, 2013 0 Comments
சச்சின் டெண்டுல்கர்

நூற்றி இருபது கோடி மக்களைக் கொண்டு மதம், மொழி, இனம், பொருளாதாரம், தொழில் எனப் பல வகைகளில் பிளவுபட்டு, வலுவான மாற்று கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு நாடு – எதிரிகள் தங்கள் நாட்டைத் தாக்கினாலும், சொந்த நாட்டினர் விண்வெளிச் சாகசங்கள் நிகழ்த்தினாலும், தானுண்டு, தன் வேலையுண்டு என்ற மனப்பாங்குடன் நடந்து கொள்ளும் மக்களைக் கொண்ட நாடு – பல மணி நேரங்கள் ஒத்த கருத்தைக் கொண்டு, அதிக கவனத்துடன் ஒரே குறிக்கோளுடன் இருப்பது, சச்சின் டெண்டுல்கர் என்ற […]

Continue Reading »

கண்ணதாசனின் காதல் மற்றும் தத்துவம்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 5, 2013 0 Comments
கண்ணதாசனின் காதல் மற்றும் தத்துவம்

சென்ற கட்டுரையில் பருவத்தில் தோன்றி மரணத்தையும் தாண்டி நிலைக்கும் காதலைக் கவியரசர் எப்படி இயற்கையுடன் இறண்டறக் கலந்தது என உவமித்தார் என்று பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மனித உயிரனங்களை ஆட்டிப் படைக்கும் பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விடக் காதல் மேன்மையான உணர்வு என்பதை எப்படித் தனது பாடல்களில் வடித்துள்ளார் என்று காணலாம். உலக மக்கள் அனைவரும் போற்றும் மிக உயர்ந்த உன்னத உறவு தாயுறவு. காதல் அந்தத் தாயுணர்வையும் கடந்தது என்பதை இப்படிச் சொல்கிறார் கவிஞர். […]

Continue Reading »

கிறிஸ்துமஸ் – அன்னை பூமியிலும், அந்நிய பூமியிலும்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 5, 2013 4 Comments
கிறிஸ்துமஸ் – அன்னை பூமியிலும், அந்நிய பூமியிலும்

வருடந்தோறும் திசம்பர் திங்கள், 25ம் தேதி உலகமெங்கும் கொண்டாடப் படும் பண்டிகை கிறிஸ்துமஸ். ஏசுக் கிறிஸ்துவின் பிறந்த நாள்தான் கிருஸ்துமஸாகக் கொண்டாடப் படுகிறது. கிறிஸ்து ஜெயந்தி என்று கூடச் சொல்லலாம். விவிலியத்தில் (Bible ) சொல்லப்பட்டுள்ள காலத்தை வைத்து, அன்றுதான் இயேசு கிறிஸ்து பிறந்திருக்கக் கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. அதேபோல் இன்றும், இந்த நாளில் ,ஒவ்வொரு இல்லத்திலும், உள்ளத்திலும் இறை இயேசு வந்து பாலனாகப் பிறக்கிறார் என்ற நம்பிக்கை அனைத்து கிறிஸ்தவரிடமும் புரையோடிக் கிடக்கிறது. உள்ளம் […]

Continue Reading »

சமுதாயத்தில் பெண்களின் நிலை

சமுதாயத்தில்  பெண்களின்  நிலை

ஒரு நாட்டினுடைய வளர்ச்சியை, அந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் கல்வி அறிவு இவைகளே நிர்ணயிக்கின்றன. இவற்றில் பெரும்பங்கு பெண்களையே சாரும்.  ஏனெனில் பெண்களின் கல்வியறிவு அவர்தம் குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். பெண்களுக்கு என்று பாதுகாப்பின்மை, மற்றும் கல்வியறிவு இல்லாத நிலை மட்டுமே அவர்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் காரணிகள்.  இந்தியாவில் மட்டும் பெண்களின் கல்வியறிவு என்பது கைக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது.  ஏனென்றால் நம் இந்திய தேசம் பெரும்பாலும் கிராமப்புறங்களால் […]

Continue Reading »

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி 2

Filed in இலக்கியம், கட்டுரை by on December 5, 2013 0 Comments
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி 2

புலம்பெயர்ந்தோர் கவிதைகளின் வடிவம் (பகுதி 1) கற்பனையாலும் உணர்ச்சியாலும் உந்தப்பட்டுக் கவிதைகள் பிறக்கின்றன. உலக மொழிகள் எல்லாவற்றிலும் கவிதைகள் உண்டு. கவிதைக்கு மூல காரணமாகக் கற்பனை அமைகின்றது. கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதுகின்ற போது அதனை வடிவமாக வெளிக்காட்டி கவிதை என்ற பெயர் சூட்டி அழகு பார்க்க மொழி துணை செய்கின்றது. மனிதர்கள் எல்லோருமே கற்பனையில் சிறந்தவர்கள். ஆனால் எல்லோரும் கவிதை எழுதுவோரல்லர். அதேபோல் கற்பனையுடன் எழுதப்படுபவை எல்லாமே கவிதை ஆகிவிடுவதுமில்லை. கவிதைக்கு உடல், உள்ளம், […]

Continue Reading »

தீபாவளி

Filed in இலக்கியம், கட்டுரை by on November 4, 2013 0 Comments
தீபாவளி

இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப பலவிதமான பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் அமைகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. எல்லாவி்தமான நம்பிக்கைகளையும் ஒதுக்கி விட்டு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்களின் நிகழ்வுகளை வைத்து, அதனைக் கொண்டாடும் மக்களின் எண்ணிக்கைகளை வைத்து இந்தியாவின் ஒரு பொதுவான பண்டிகை என்று சொல்ல வேண்டுமானால் தீபாவளி என்று கூறிவிடலாம் என நினைக்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் குறித்தது என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டாலும், இதன் பின்னணி என்பது […]

Continue Reading »

முற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம்

Filed in இலக்கியம், கட்டுரை by on November 4, 2013 2 Comments
முற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம்

கோடைகால வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வெளியில் போன நான் மிகவும் களைப்புடன் வீட்டுக்குத் திரும்பியிருந்தேன். “ஐயோ சரியான களைப்பாய்இருக்குது ஒரு காபி கிடைக்குமா அம்மா?” தான் செய்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கையில் காபியுடன் வந்தாள். கையில் வாங்கி மடக் மடக் என்று குடிக்கும் ஆசையில் உறிஞ்சினேன். “ஆ”  என்று அலறியப்படி காபீயை அப்படியே மேசையில் வைத்து விட்டு “என்னம்மா காபி கேட்டால் இப்படியா தருவாய்” என்று ஒரு செல்லக் […]

Continue Reading »

கண்ணதாசன்

Filed in இலக்கியம், கட்டுரை by on November 3, 2013 2 Comments
கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் – தீஞ்சுவை தரும் தத்துவ நன்முத்தா? தேனமுதூறும் தெவிட்டாத காதலா? இந்தியத் தேசத்தில் திரைப்படங்கள் தொடங்கி நூறு ஆண்டுகள் முடிவடைய இருக்கின்றது. இந்த நூறு ஆண்டுகளில், திரைப்படங்கள் பல பரிமாணங்களைக் கடந்து பயணித்துள்ளது என்பது நாமறிந்ததே. இந்தப் பயணத்தில் பல வெற்றி தோல்விகளைச் சந்தித்த திரைப்பட உலகம், ஒரு சராசரி இந்தியனின் முழுநேர வாழ்க்கையையும் கிட்டத்தட்ட முழுமையாக ஆட்கொண்டு விட்டது என்றே கூறலாம். நல்லதோ, கெட்டதோ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை, பாடலை, […]

Continue Reading »

எமது இலத்திரனியல் உலகமும் அதன் பரிவிளைவும்

Filed in இலக்கியம், கட்டுரை by on November 3, 2013 0 Comments
எமது இலத்திரனியல் உலகமும் அதன் பரிவிளைவும்

இன்று நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் நமது அவதானமானது பல்வேறு இலத்திரனியல் சாதனங்களினை நாடியே உள்ளது. நமது தற்போதய காலத்தை இலத்திரனியல், அறிவியல், தொடர்பியல் முன்னேற்ற நூற்றாண்டாக எடுத்துக்கொள்ளலாம். இதை இந்தத் தசாப்தத்தில் பிரதானமாகத் தரும் சாதனங்கள் இலத்திரனியல் கைத்தொலைபேசி, கைப்பலகை ஆகியன. இச்சாதனங்கள் சென்ற நூற்றாண்டில் வர்த்தகமானிகளால் வகுக்கப்பட்ட அபிவிரித்தியடைந்த, அபிவிரித்தியடைந்து கொண்டிருக்கும், மற்றும் இருண்ட கண்ட நாடுகள் சகலத்தையும் ஊடுருவித் தொடுக்கிறது. தகவல் பரிமாற்றம், தொலைத் தொடர்புத் தொழிநுட்ப மேம்படல், சாதாரண மக்கள் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad