\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

உரிமைகள் மசோதா-2

உரிமைகள் மசோதா-2

முதல் சட்டத் திருத்தம் முதல் திருத்த வரைவிலக்கணத்தின்  தமிழாக்கம் (உரிமைகள் மசோதா – 1) அமெரிக்க அரசு, எந்தவொரு மத அமைப்பையும், அவற்றைக் கடைபிடிப்பதையும் ஏற்கவோ, மறுக்கவோ எந்தச் சட்டமும் இயற்றாது. இது பேச்சுச் சுதந்திரம், பதிப்பகச் சுதந்திரம், அமைதியாக இயங்கக் கூடும் இனக்குழுக்களின் சுதந்திரம் மற்றும் தங்களது குறைகளை அரசிடம் முறையிடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கும் பொருந்தும். மேலேயுள்ளவற்றில் பேச்சுச் சுதந்திரம் (freedom of speech) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கருத்துச் சுதந்திரம் என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. […]

Continue Reading »

ஃபேஸ்புக் புர்ச்சியாளர்கள்

ஃபேஸ்புக் புர்ச்சியாளர்கள்

அதென்ன புர்ச்சி? எந்நேரமும் களத்தில் நின்று போராடினால், அது புரட்சி. டைம்பாஸுக்காக, இணையத்தில் உட்கார்ந்து அன்றைய தினத்தின் ஹாட் டாபிக்கிற்குச் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தால், அது புர்ச்சி. 🙂 சமீப ஆண்டுகளில், இத்தகைய புர்ச்சியாளர்களின் புகலிடமாக, ஃபேஸ்புக் இருந்து வருகிறது. சமயங்களில், நம்ம சுற்று வட்டாரத்திலேயே இவ்வளவு புர்ச்சியாளர்களா என்று மலைக்க வேண்டியிருக்கிறது. இவர்களை அடையாளம் காண்பது எப்படி? கண்டிப்பாக, டெய்லி போஸ்ட் போடுவார்கள். போடாட்டி? ஆபீஸ்ல புழிஞ்சு எடுத்துட்டு இருக்காங்க’ன்னு புரிஞ்சுக்கோங்க!! சொந்தக் கதை, வீட்டு […]

Continue Reading »

வசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox)

வசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox)

இந்த ஆண்டு 2017 இல் மார்ச் 20ஆம் தேதியன்று வசந்த காலத்தின் தொடக்கமான சமப் பகலிரவு தினம் (Equinox) நிகழவிருக்கிறது. Equinox என்பது சமமான இரவு என்ற பொருளளிக்கும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்த சொல். ஒரு வருடத்தின் இரு நாட்களில் மட்டுமே இரவும் பகலும் சமமான நேரம் கொண்டவையாக இருக்கும். ஒன்று, வசந்தச் சமப் பகலிரவு நாள் (Spring Equinox). மற்றொன்று, இலையுதிர் சமப் பகலிரவு நாள் (Autumn Equinox). ஏன் அனைத்து நாட்களிலும் இரவும், […]

Continue Reading »

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம்

மிகச் சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட்டோம். கண்ணைக் கவரும் வாழ்த்தட்டைகளைப் பகிர்ந்து கொண்டாயிற்று; நமக்குத் தெரிந்த பெண்களுக்கும், ஊடகப் பொதுவெளிகளிலும் மனதை வருடும் வாசகங்களுடன் ‘மகளிர் தின வாழ்த்துகளை’ப் பதிவு செய்தாகிவிட்டது. நான் பெண்களை மதிப்பவன் என்று சட்டையில் அடையாள வில்லை குத்திக் கொண்டு அடுத்த வருட மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை மற்ற உலக வழக்குகளில் கவனம் செலுத்தலாம். ‘நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் […]

Continue Reading »

வினா வினா ஒரே வினா

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
வினா வினா ஒரே வினா

இட்லி குக்கர் வேகமாகச் சத்தம் கொடுத்தது. அடுப்பைச் சின்னதாக்கி விட்டு, பொங்கி வரும் பாலை அமர்த்தினாள் பானு. வீட்டின் முன் அறையில் ஒரு ஓரமாக சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டு இருந்தது. வேகமாக புது டிகாக்ஷனை ஊற்றி நாலு காபிகளைத் தயார் செய்தாள். பால்கனியில் அமர்ந்து காலைச் செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டு இருந்த மாமனாருக்கும், மாமியாருக்கும் இரண்டு குவளைகளைக் கொடுத்து விட்டு, மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்தாள். தயார் செய்து, ஆற வைத்திருந்த புதினா சாதம் , வடகம், […]

Continue Reading »

நிலவும் வசப்படும்

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
நிலவும் வசப்படும்

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் ! ……. ……… அடி கோயில் எதற்கு ..? தெய்வங்கள் எதற்கு…? உனது புன்னகை போதுமடி ! ரகு என்கிற ரகுவரன் சாதாரண மிடில்கிளாஸ் குடும்பத்தைச் சேரந்தவன் . இவனது மனைவி அகிலா . இவர்களுக்கு அனன்யா என்ற ஒரு தேவதை உண்டு . இவன் உயர் ரகக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் உயர் பதவியில் வேலை பார்க்கிறான் . நாள்தோறும் அவனுக்கு வேலைப் பளு […]

Continue Reading »

ஒரு ராக்கெட்டும் 104 சேட்டிலைட்களும்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 26, 2017 0 Comments
ஒரு ராக்கெட்டும் 104 சேட்டிலைட்களும்

அரசியல்வாதிகள் நமது மானத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போது, நம் காலரைத் தூக்கி விட வைப்பது இஸ்ரோ (ISRO) வின் வழக்கம். ஃபிப்ரவரி 15ஆம் தேதி அன்றும் இந்தியர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இஸ்ரோவின் இந்திய விஞ்ஞானிகள். அன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 9.28 க்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய பிஎஸ்எல்வி விண்கலம், அடுத்த அரை மணி நேரத்திற்குள், ஏற்றிச் சென்ற 104 செயற்கைக்கோள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் […]

Continue Reading »

எனக்கு ஒரு மகன் பிறந்தான்

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
எனக்கு ஒரு மகன் பிறந்தான்

நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் கூடப் பிறக்கவில்லை. எனது மாமனாருக்கும், மாமியாருக்கும் […]

Continue Reading »

அமெரிக்கா சீனா வர்த்தக விவாதமும் வரக்கூடிய பக்க விளைவுகளும்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 26, 2017 0 Comments
அமெரிக்கா சீனா வர்த்தக விவாதமும் வரக்கூடிய பக்க விளைவுகளும்

2017 இல் வந்திருக்கும் அமெரிக்கத் தலைமைத்துவ மாற்றம் சனவரி 20 ஆம் திகதியிலிருந்து பல்வேறு வகை மாற்றங்களையும் செய்ய ஆரம்பித்துள்ளது. புதிய அமெரிக்க சனாதிபதி தமது வாக்காளர்களுக்குக் கூறியதை உடன் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார். இவற்றில் பல அமெரிக்க நுகர்வோர் மற்றும் அவர் அன்றாட வாழ்க்கை போன்றவற்றில் அசௌகரியங்களைத் தர வாய்ப்புக்கள் உண்டு. புதிய அமெரிக்கத் தலைமைத்துவம் பொதுவான வர்த்தக உலக மயமாக்குதல் அமெரிக்கரின் வயிற்றுப் பிழைப்பிற்குச் சாதகமானதல்ல என்றும் இதனால் பல குடிமக்கள் சென்ற பல தசாப்தங்களாகப் […]

Continue Reading »

இளவெயினிற் காலம்

Filed in இலக்கியம், கவிதை by on February 26, 2017 0 Comments
இளவெயினிற் காலம்

சூழ்ந்திருந்த வெண்பனியும் சுடரொளியால் உருகிடவே
வாழ்ந்திருந்த புள்ளினமும் வடக்குநோக்கித் திரும்பிடவே
ஆழ்ந்திருந்த இருளதுவும் நாட்பொழுதால் குறுகிடவே
தாழ்ந்திருந்த உள்ளங்களும் தளர்நடையாய்ப் புறப்படவே

காய்ந்திருந்த புல்வெளியும் கண்கள்மெல்லத் திறந்திடவே
சாய்ந்திருந்த செடிகொடியும் சிகைவளர்த்துச் சிலிர்த்திடவே
தேய்ந்திருந்த தவளையினம் தனித்தனியாய்த் தாவிடவே
மாய்ந்திருந்த சிறுகொசுக்கள் மறுபடியும் பறந்திடவே

Continue Reading »

ad banner
Bottom Sml Ad