\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

எனக்கு ஒரு மகன் பிறந்தான்

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
எனக்கு ஒரு மகன் பிறந்தான்

நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் கூடப் பிறக்கவில்லை. எனது மாமனாருக்கும், மாமியாருக்கும் […]

Continue Reading »

அமெரிக்கா சீனா வர்த்தக விவாதமும் வரக்கூடிய பக்க விளைவுகளும்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 26, 2017 0 Comments
அமெரிக்கா சீனா வர்த்தக விவாதமும் வரக்கூடிய பக்க விளைவுகளும்

2017 இல் வந்திருக்கும் அமெரிக்கத் தலைமைத்துவ மாற்றம் சனவரி 20 ஆம் திகதியிலிருந்து பல்வேறு வகை மாற்றங்களையும் செய்ய ஆரம்பித்துள்ளது. புதிய அமெரிக்க சனாதிபதி தமது வாக்காளர்களுக்குக் கூறியதை உடன் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார். இவற்றில் பல அமெரிக்க நுகர்வோர் மற்றும் அவர் அன்றாட வாழ்க்கை போன்றவற்றில் அசௌகரியங்களைத் தர வாய்ப்புக்கள் உண்டு. புதிய அமெரிக்கத் தலைமைத்துவம் பொதுவான வர்த்தக உலக மயமாக்குதல் அமெரிக்கரின் வயிற்றுப் பிழைப்பிற்குச் சாதகமானதல்ல என்றும் இதனால் பல குடிமக்கள் சென்ற பல தசாப்தங்களாகப் […]

Continue Reading »

இளவெயினிற் காலம்

Filed in இலக்கியம், கவிதை by on February 26, 2017 0 Comments
இளவெயினிற் காலம்

சூழ்ந்திருந்த வெண்பனியும் சுடரொளியால் உருகிடவே
வாழ்ந்திருந்த புள்ளினமும் வடக்குநோக்கித் திரும்பிடவே
ஆழ்ந்திருந்த இருளதுவும் நாட்பொழுதால் குறுகிடவே
தாழ்ந்திருந்த உள்ளங்களும் தளர்நடையாய்ப் புறப்படவே

காய்ந்திருந்த புல்வெளியும் கண்கள்மெல்லத் திறந்திடவே
சாய்ந்திருந்த செடிகொடியும் சிகைவளர்த்துச் சிலிர்த்திடவே
தேய்ந்திருந்த தவளையினம் தனித்தனியாய்த் தாவிடவே
மாய்ந்திருந்த சிறுகொசுக்கள் மறுபடியும் பறந்திடவே

Continue Reading »

அவள் ஆத்திச்சூடி

Filed in இலக்கியம், கவிதை by on February 26, 2017 0 Comments
அவள் ஆத்திச்சூடி

அவள் அழகை விரும்பு
ஆணவம் கொள்ளாதே
இன்னலிலும் மறவாதே
ஈடு இணையின்றிக் காதலி
உயிரினுள் கலந்தவளே
ஊடலிலும் கைவிடாதே
எண் உலகமும் அவளே

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 2

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 2

(பாகம் 1) அமலா கண் இமைப்பதைக் கூட மறந்து, நீலவேணி சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டாள். நீலவேணி சொல்லியதாவது: “முப்பது வருடங்களுக்கு முன் தனது தந்தை ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார். அதைக் கண்ட மக்கள் சிலர் அவரைத் துரத்தினர். அவரும் சிதம்பரநாதர் சந்நிதியில் ஒளிந்து கொண்டார். மக்கள் தேடிக் களைத்துச் சென்ற பின்னர், இருட்டில் எங்கு செல்கிறோம் என்று கூடத் தெரியாமல் சிதம்பர ரகசியம் என்று போற்றப்படும் குகைக்குள் நுழைந்தார். அங்கு மின்னிக் கொண்டிருந்த […]

Continue Reading »

காதலர் தினத் திண்டாட்டம்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 12, 2017 0 Comments
காதலர் தினத் திண்டாட்டம்

கல்லூரி தினங்களில் ஃபிப்ரவரி இரண்டாம் வாரம் வந்து விட்டாலே, ஒரு குறுகுறுப்பான பரபரப்பு மாணவர்களிடையே தொற்றிக் கொள்ளும். காதலிக்கிறோமோ, இல்லையோ, காதலிக்கும் ஐடியா இருக்கிறதோ, இல்லையோ, எந்தக் கலர் சட்டை அணிவது என்பதில் கவனம் குவிந்து விடும். அதில் நம்மைப் பற்றி அடுத்தவர் நினைக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். அப்படி ஏதும் நினைத்து விடக் கூடாது என்ற பதைபதைப்பும் இருக்கும். ஆனா, லவ்வச் சொல்ல நினைக்கிறவனுக்கும், லவ் பண்றவனுக்கும் எந்நாளும் வேலண்டைன்ஸ் டே தான். இப்படி […]

Continue Reading »

மேரி டைலர் மோர் (Mary Tyler Moore)

Filed in இலக்கியம், கட்டுரை by on February 12, 2017 0 Comments
மேரி டைலர் மோர் (Mary Tyler Moore)

அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் முன்னோடிப் புதுமைப் பெண்ணாக 1970 களில் இருந்து பிரபல்யமானவர்தான் அண்மையில் மறைந்த நடிகை மேரி டைலர் மோர் அம்மையார் அவர்கள். இவர் எமி (Emmy) டோனி (Tony) அமெரிக்கத் திரை விருதுகளைத் திரைப்பட நடிப்பு, தொலைக்காட்சி நடிப்பு மற்றும் படத் தயாரிப்புக்களுக்காகப் பெற்றவர்.  அமெரிக்கக் குடும்பங்களைக் கவர்ந்த சிறந்த நகைச்சுவை நடிகை. இவர் பிரபல்ய தொலைக்காட்சி முற்போக்கு மனைவியார் லாரா பெற்றி (Laura Petrie) எனும் கதாபாத்திரத்தை The Dick Van Dyke Show […]

Continue Reading »

யாரடியோ?

யாரடியோ?

கட்டழகுப் பெட்டகமே, கன்னியருள் தாரகையே
கடைவிழிப் பார்வையாலே காளையரை வீழ்த்தினளே!
கானல் நீராய்ப் போனவனைக் கண்ணாரக்காணக்
கதவோரம் நாணிநின்று கசங்கியஆடை முடிந்தவளே !

வெண் தாமரையாள் ஆதவனை எதிர்பார்த்து
மெலிந்த தேகத்தால் ஊர்ப்பழிக்கு ஆளாகி
பொலி விழந்த வெண்ணிலவே வெட்கமென்ன
மெல்ல வந்தே வெளியுலகுக்குச் சொல்லிடடி!

Continue Reading »

பக்குவக் காதல்

பக்குவக் காதல்

சூரியன் மெதுவாக மேற்கில் சாயும் மாலை நேரம். நாள் முழுவதும் சற்று மழை மேகமாகவே இருந்த தினமாதலால், அந்தச் சாயுங்கால நேரத்தில் சற்றே சில்லென்றிருந்தது. அந்தக் கிராமத்தில் ”சீமைக்காரர் வீடு” என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் மிகவும் அழகான வீடு. பல வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து, தனது ஓய்வுக் காலத்தில் அந்தக் கிராமத்தில் வந்து செட்டில் ஆகியிருந்ததால் அந்தப் பெயர். அவ்வளவு பெரிய பங்களா என்று சொல்ல முடியாதெனினும், நான்கு அறைகளுடன் நகரத்திலிருக்கும் அத்தனை வசதிகளும் பொருந்திய, ஆடம்பரம் […]

Continue Reading »

மார்கழியும் தையும்

Filed in இலக்கியம், கவிதை by on January 29, 2017 0 Comments
மார்கழியும் தையும்

எழுந்தீரோ எம்பாவாய் ! மார்கழியில் மாடத்திலே கண்ணயர்ந்த வெண்மதியே … ஆயர்குல மகளிர் விரைந்து உனை எழுப்பும் முன்னே விழித்துக் கொள்ளடி பெண்ணே… பட்டாடையுடுத்தி பட்டு மெத்தையில் பவளமல்லியாய் படர்ந்தவளே … பகலவன் வருமுன்னே எழுந்து தெருவினிலே பாடிவரும் பெண்டிரோடு கலந்து கொள்ளடி பெண்ணே …. தோழிகளே வியக்கும் வண்ணம் உறங்கியவளே … உந்தன் அழகில் மயங்கிய நிலையில் கண்சிமிட்டக் கூட மறந்த பெண்களைக் கண்டாயோடி பெண்ணே ! உறக்கத்தில் கூட பலரை மூர்ச்சை ஆக்கியவளே … […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad