\n"; } ?>
Top Ad
banner ad

கட்டுரை

பாமா ராஜன்

பாமா ராஜன்

சங்கமம் 2014 தெருக்கூத்தின் உடை வடிவமைப்பாளர் மினசோட்டாத் தமிழ் சங்கம் நடத்திய சங்கம் 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில மூவேந்தர் கலைக்குழாம் நடத்திய தெருக்கூத்து நிகழ்சியின் உடை வடிவமைப்பாளர் திருமதி பாமா ராஜன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டிக் கண்டோம். அவர்  வடிவமைத்திருந்த ஆடைகள் அந்த நிகழ்ச்சியின் தரத்தை ஒருபடி அதிகரித்துக் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. மினசோட்டாவில் கிடைக்கின்ற பொருட்களை வைத்துக்கொண்டு நம் பாரம்பரியம் மாறாமல் வடிவமைத்திருந்த விதம் மிக அருமை. கேள்வி […]

Continue Reading »

நீர்க்கசிவுப் பாதிப்பு செலவை நிவர்த்தி செய்தல்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
நீர்க்கசிவுப் பாதிப்பு செலவை நிவர்த்தி செய்தல்

(Household Water Damage Prevention) ஆயிரம் ஆயிரமான நீர்ச்சுனைகளும் ஆறுகளும்  காணப்பெறும் அழகிய மினசோட்டா மாநிலத்தில் வெப்பதட்ப காலவித்தியாசங்களும் வித்தியாசமாகவே காணப் பெறுகின்றன. இதன் காரணமாக இவ்விடம் மக்களும் வதிவிட கட்டிடப் பொருட்கள் நம்மில் பலர் பிறந்த பூமியில்  கிடைக்கும் விதத்திலிருந்து வித்தியாசமாகக் காணப்படுகிறது. மினசோட்டா மாநிலத்தில் வதிவிடம் வாடகைக்குப் பெறினும், வீட்டு உரிமையாளராக இருப்பினும் நீர்க்கசிவு, நீர்த்தேக்கத்தால் ஆகும் மிகுந்த செலவான பாதிப்புக்களை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று அறிந்திருப்பதும் சிக்கனம் தரும் சிந்தனையே. பிரதானமாக […]

Continue Reading »

அமெரிக்காவில் தெருக்கூத்தை மேடையேற்றிய நாயகன்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 3 Comments
அமெரிக்காவில் தெருக்கூத்தை மேடையேற்றிய நாயகன்

2014ஆம் ஆண்டு மின்னசோட்டா தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் இருந்த நிகழ்ச்சி தெருக்கூத்து. ஒரு மணிநேரம் நடந்த இந்தக் கூத்து நிகழ்ச்சி பெரியோர் முதல் சிறியோர் வரை எல்லோரையும் கவர்ந்ததாக அமைந்திருந்தது. மின்னசோட்டாவிலுள்ள வளங்களை மட்டும் வைத்துக் கொண்டு சாத்தியப்படாத ஒன்றை சாத்தியப்படுத்திய உயர்திரு சச்சிதானந்தன் அவர்களுடன் ஒரு நேர்முக பேட்டி நடத்தினோம். கேள்வி : வணக்கம் சச்சிதானந்தன் வெங்கடகிருஷ்ணன், உங்களைப் பற்றியும் நீங்க வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். […]

Continue Reading »

சத்யா நாதெல்லா

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
சத்யா நாதெல்லா

ஆந்திர மாநிலம் ஹைதராபாதை பூர்விகமாகக் கொண்ட, இந்திய அமெரிக்கரான, சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டு பிறந்த சத்யா, ஹைதராபாத்தில் பேகம்பேட் அரசினர் பொதுப்பள்ளியில் ( இதே பள்ளியில் படித்த சாந்தனு நாராயண் தற்போது அடோபி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ளார்) படித்தவர். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பி. டெக். (மின்பொறியியல்) முடித்த சத்யா, பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி அறிவியல் முதுகலைப் பட்டமும், சிகாகோ […]

Continue Reading »

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 3 Comments
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4

உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசித்து வருகின்றபோதிலும் அவர்கள் அங்கும் நிம்மதியுடன் வாழ்கின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. எண்ணற்ற கனவுகளுடன் ஊரில் திரிந்தவர்கள் ‘அகதி’ என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடுநாடாக அலையும் போது அவர்களுடைய கண்முன் அசைகின்ற எல்லாவற்றிறும், தான் ஓர் ‘அகதி’ என்ற உணர்வைப் பெறுகிறான். இவை அவலநிலையின் உச்ச வெளிப்பாடுகளாகி அவர்களை எழுதத் தூண்டுகின்றபோது, இந்த அவல வாழ்வின் உணர்வுகள் அப்படியே கவிதைகளாகப் புனையப்பட்டன.

Continue Reading »

பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்

எங்களால் மகேந்திரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட பாலு மகேந்திரா, யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர். அந்தக் கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். அக்காலத்தில், என்னுடன் பணி செய்த தேவு குலதுங்கவும் நானும் சேர்ந்து அறுபதுகளில் தயாரித்த ”நீயும் நானும்” என்ற நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பாலு மகேந்திரா நடித்திருந்தார். அவர் மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகர், தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் அவர். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைக்கருகே, புகைவண்டி […]

Continue Reading »

கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 4

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 4

கனிபோன்ற காதல் காதலைப் பாடுவதில் தனக்கு எவரும் நிகரில்லாத தனிப்பெருமை பெறுகிறார் கண்ணதாசன். உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கையுணர்வு காதல். கவிதைகளுக்கும், கலைகளுக்கும் வற்றாத ஊற்றாக இருந்து வளம்தருவது காதல். காதல் கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? இது போன்ற கற்பனைகள் தனது காதலையும், தான் காதலிப்பவரையும் எப்படியெல்லாம் வர்ணித்து அழகு செய்கின்றன? காதல் கொண்ட சாமானியனுக்கே கவித்துவம் பிறக்குமென்றால், கவியரசரின் புலமையையும், கற்பனையையும் […]

Continue Reading »

தானியங்கி ஊர்தி (Self Driving Car)

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
தானியங்கி ஊர்தி (Self Driving Car)

நாம் நாளை உலகம், விஞ்ஞான விந்தை என்று திரைப்படம் பார்த்துச் சொக்கிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில் 21வது நூற்றாண்டு எந்திரங்கள்  சிறிது சிறிதாக எம்மருகில் அண்மித்து, ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்று கூறுவது மிகையாகாது. கீழே இது பற்றிய விவரணை. இதமான காலை வெய்யில் கிழக்கில், முகில்கள் அதிகமற்ற பிரகாசமான நீலவானம் வழக்கம் போல சிவம் வேலைத்தளம் செல்ல ஆயுத்தமாகிறான்.  அழகான பச்சைப்பசேலெனவும், பூக்கள் பூத்துக்குலுங்கும் சிறிய முன்முற்றத்தைத் தாண்டி தரித்திருக்கும் தனது ஊர்தியினுள் வலதுப்பக்கத்தின் சாரதிப் பகுதியில் ஏறிக்கொள்கிறான். […]

Continue Reading »

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-3

(பகுதி 2) புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் உள்ளடக்கம் கவிதையின் உள்ளடக்கம் என்பது, அது எதைப்பற்றிச் சொல்ல முனைகிறது என்பதைப் பொறுத்ததாகும். கொளு, கரு, பாடுபொருள், உள்ளீடு, பொருள், விஷயம், தீம், பாவிகம் போன்ற பல பெயர்களினால் இதனை அழைப்பர். ‘’எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட பொருளின் செய்தி உள்ளடக்கம்’’ என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. இவ்வகையில், ஒரு கவிஞன் கூறவிழையும் பொருள் பொதுமையானது. அது சமூகத்துக்குரியது. வருணனை மட்டுமே கவிஞனுக்கு உடைமையானது. கவிதையின் பொருள் வேறு, கவிதை […]

Continue Reading »

கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3

”ஆண்டவன் எங்கே இருக்கிறான்?” நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள் பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக விடையளிக்கிறார் நம் கவியரசர். ”ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் – இதில் மிருகம் என்பது கள்ள மனம் – உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த ஆறு கட்டளை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad