\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாதத்தின் மாமனிதர்

அம்பேத்கர்

அம்பேத்கர்

வரலாற்றை உற்று நோக்கினால், நாட்டுக்காகத் தன்னலமற்று பணியாற்றிய எத்தனையோ தலைவர்கள், வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால் வெளிச்சத்துக்கு வராமல் போய்விட்டனர். பரந்த சமுதாயப் பார்வையும், மனிதநேயமும், ஆழமான அறிவாற்றலும் கொண்டிருந்த அம்பேத்கரின் நிலையும் அதுதான். இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சாசனத்தை உருவாக்கியவர் என்ற அளவில் மட்டுமே அறியப்படும் அம்பேத்கரின் பன்முகத் திறன் வியக்கத்தக்கது. மத்தியப்பிரதேச மாநிலம் அம்பாவாதே எனும் ஊரில் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ராம்ஜி சக்பால்-பீமாபாய் ஆகியோருக்கு பதினாலாவது பிள்ளையாகப் […]

Continue Reading »

ஒரு சகாப்தத்தின் முடிவு (கே.எஸ்.பாலச்சந்திரன் ஒரு பார்வை)

ஒரு சகாப்தத்தின் முடிவு (கே.எஸ்.பாலச்சந்திரன் ஒரு பார்வை)

ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் தேவை கருதி ஒருவன் உருவாகுகிறான். தனது உறவுகள், சூழல் என்பவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு இலட்சியத்தை நோக்கி ஒரு புதிய பாதையில் பயணிக்கின்றான்.அப்படி உருவான ஒரு அற்புதக் கலைஞன்தான் கே .எஸ் .பாலச்சந்திரன் என்ற சமூகப் போராளி .1950 க்கு பின் ஆங்கிலப் புலமை பெற்ற ஒரு தலைமுறை உரிமை வேண்டி தமிழர்களுக்கும் தமிழுக்குமாகப் போராடியது . தங்களின் அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இன்னொரு கூட்டம் மக்களைப் படாதபாடு படுத்தியது .மக்களோடு நேரடியாகத் […]

Continue Reading »

மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய்

பொதுவாக, நாட்டுக்காக உழைத்த, எளிமையாக வாழ்ந்த, தன்னலமற்ற பல தியாகிகளையும், தலைவர்களையும் வரலாறு கண்டு கொள்வதில்லை. அதிலும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சிறப்பு நாளான ஃபிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்து இந்திய நாட்டுக்கு அரும்பணியாற்றிய மொரார்ஜி தேசாயை அனைவரும் மறந்தே விட்டார்கள். மொரார்ஜி தேசாய் – 1896-ம் ஆண்டு ஃபிப்ரவரி 29-ஆம் நாள் இன்றைய குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் இருக்கும் பதேலி என்ற கிராமத்தில் பிறந்தவர் . இவரது தந்தை ரங்கோட்ஜி […]

Continue Reading »

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்.

தமிழ்த்திரை உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்தவர் எம்.ஜி.ஆர். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் எனும் பெயரே, தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்கள் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள பலர் மனதில் எம்.ஜி. ஆர். எனும் மூன்று எழுத்துக்களாக நிலை பெற்று விட்டது. இவரது பெற்றோர் கோபாலமேனன், சத்யபாமா. கோபாலமேனன் அரூர், திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றி வந்தார். அநீதிக்கு துணை போக மறுத்ததால் பல இடங்களுக்கு மாற்றல் செய்யப்பட்டு இறுதியில் அவர் தனது வேலையை துறந்து குடும்பத்துடன் இலங்கை சென்றார். […]

Continue Reading »

ஸ்ரீனிவாச ராமானுஜன்

ஸ்ரீனிவாச ராமானுஜன்

உலகளாவிய அளவில் இந்திய நாட்டின் அடையாளமாக இருப்பதும் , இந்தியர்கள் கணிதத்தில் மேம்பட்டவர்கள் என்னும் கருத்தை நிலை நிறுத்துவதும் ஸ்ரீனிவாச ராமானுஜன் என்ற ஒற்றை மனிதர். டிசம்பர் 22 1887 அன்று பிறந்த ராமானுஜனின் 125வது பிறந்த தினத்தை இந்தியா மட்டுமல்லாது மற்ற நாடுகளிலுள்ள கணிதத்துறையைச் சார்ந்த அனைவரும் போற்றி க் கொண்டாடினர். சென்ற ஆண்டை “நாட்டின் கணித வருடம்” என்றும் டிசம்பர் 22ம் தேதியை “நாட்டின் கணித நாள்” என்றும் அறிவித்தது இந்திய அரசாங்கம். ஈரோட்டில் […]

Continue Reading »

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு – காந்திஜியின் அடிப்படைக் கோட்பாடுகளான நீதி, நேர்மை, அகிம்சை இவற்றை அடியொற்றிச் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றவர். உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலைவராக இருந்தவர். 1947 முதல் 1964 வரை பதினேழு ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர். 1889ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் மோதிலால் நேருவுக்கும், ஸ்வரூபராணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் ஜவஹர்லால். உருது மொழியில் ஜவஹர்-இ-லால் என்றால் சிகப்பு நகை என்ற பொருள். ரோஜா நிறத்தில் பிறந்த குழந்தைக்குப் […]

Continue Reading »

இந்திரா காந்தி

இந்திரா காந்தி

ஆணாதிக்க மனப்பாங்கு கொண்டஇந்தியாவில் வலுவான அதிகார பலத்துடன் மிகவும் உயர்ந்த பதவியிலமர்ந்து நாட்டை ஆண்ட முதல் இந்தியப் பெண்மணி இந்திரா காந்தி. 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள், ஜவஹர்லால் நேருவுக்கும் , கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்சினி நேரு. அவர் பிறந்த கட்டத்தில் அவரது தாத்தாவும், தந்தையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தனது நோயுற்ற தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார் இந்திரா. காவலதிகாரிகள் நேரு சிறையிலிருந்த காலத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்து […]

Continue Reading »

மகாத்மா

மகாத்மா

உலகில், நோம்பு நோற்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் கூற்று. சாப்பாட்டைக் குறைத்து, ஏதோவொரு கடவுளின் பெயரை நாள் முழுதும் சொல்லிக் கொண்டிருப்பதல்ல வள்ளுவன் கூறும் நோம்பு. செயல் திருத்தம் என்பதே நோம்பு எனும் தமிழ் வார்த்தையின் சிறப்புப் பொருள் மற்றும் தத்துவார்த்தமான விளக்கம். தான் செய்யும் தவறுகளை உணர்ந்து, செய்யும் செயல்களைத் திருத்திக் கொண்டு நல்வழிப் படுவது என்பது நோம்பாகும். அதுபோல் நல்வழிப் படுபவரின் எண்ணிக்கை குறைவதே, பொருளில்லை, புகழில்லை, மகிழ்ச்சி இல்லை, அமைதி இல்லை எனப் பலவகையானவை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் விளக்கம்.

Continue Reading »

லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

பாரத நாட்டின் பெருந்தலைவர்கள் பலரை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. பலரது தியாகங்களும் உயர்ந்த கொள்கைகளும் அறியப்படாமலே போய்விட்டன. ஆங்கிலத்தில் ‘UNSUNG HERO’ என்பதைப் போன்று இவர்கள் அதிகம் புகழ் பெறாத, கண்டுக்கொள்ளப்படாத தலைவர்கள். அவர்களில் ஒருவர்தான் மறைந்த பாரதப் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி. காந்தியைக் கொலை செய்த கோட்சேவை அறிந்தவர்களை விட காந்தியக் கொள்கைகளை இறுதி மூச்சு வரை வேதமாக கடைப்பிடித்த சாஸ்திரியை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அவரின் படாடோபமற்ற எளிய தோற்றமும் […]

Continue Reading »

மாதத்தின் மாமனிதர் – பெரியார்

மாதத்தின் மாமனிதர் – பெரியார்

சமுதாயத் தொண்டு செய்பவருக்கு, கடவுள் பக்தி இருக்கக்கூடாது, மத பக்தி இருக்கக்கூடாது, தேசபக்தி இருக்கக்கூடாது, ஏன் மொழிபக்தி கூட இருக்கக்கூடாது, சமுதாய பக்தி ஒன்றுதான் இருக்க வேண்டும் அவனால் தான் ஏதாவது செய்ய முடியும். எவன் ஒருவன் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ, இலக்கியத்தையோ, மொழியையோ கைல வச்சுக்கிட்டு சமுதாயத் தொண்டுச் செய்யுரான்னா, அவன் சோறுண்பவன் அல்ல. இதைப்போன்று தெளிவாகவும் தைரியமாகவும் ஒருவரால் பேச முடியும் என்றால் அது பெரியார் என்றழைக்கப் படுகிற ஈ.வே.இராமசாமியால் மட்டுமே முடியும். மேற்கூறிய […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad