\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஏ புள்ள……!!!

Filed in இலக்கியம், கவிதை by on December 25, 2016 0 Comments

கஞ்சிக் கலயம் கொண்டு
கடைக்கண்ணால் எனைக் கட்டி
இழுத்துக் கொண்டு
களத்து மேட்டில் நடந்து
வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….!

கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை
களவாடியவளே
வழியில் கள்ளர் பயமிருந்தால்
சொல்லு புள்ள

கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக
வழித் துணையாக நானும்
வாறேன் புள்ள …!

கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு
கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே
பூட்டி வைச்சு…..
கருமேகக் கூட்டம் வருமுன்னே
விரசா வீடு வந்து சேர்ந்த புள்ள …!

கண்டாங்கிச் சேலை கட்டி
கக்கத்தில் கூடை கொண்டு நடப்பவளே…
மாமனின் ஒரப்பார்வையாலே ஒய்யாரமாக நடை பயில்பவளே
ஒத்த வார்த்தை சொல்லு புள்ள …!

கண்ணுக்குள் இமையாகக் காத்திடுவேன்
கலக்கமின்றித் தைரியமாகச் சொல்லு புள்ள…
இந்த மாமனைப் பிடிச்சிருக்கா…!!

கருத்த மாமனைப் பிடிச்சிருக்கா…!!!

ஏ புள்ள ….!!

உமையாள்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad