\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

என் காதலே

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 0 Comments

En_kaathale_529x703காதல் காவியம் படைத்தேன் உனக்கு

கண்ணே அருகில் வாராய்

உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு

உயிரே நீயும் பாராய்

 

மின்னும் விழிகளின் அழகைப் பார்த்து

விண்மீன் மறைந்தது ஓடி

ஒளிரும் உன்முகம் இரவினில் பார்த்து

நிலவும் தோற்றது போடி

 

கன்னம் தோன்றிய சிவப்பினைப் பார்த்து

வண்டும் விரைந்தது நாடி

வண்ணம் பூசிய இதழ்களைப் பார்த்து

முகையும் விழுந்தது வாடி

 

சற்றென வளையும் புருவங்கள் சேர்த்து

பல நெத்திலி பிடித்திடலமோ

முத்தென மின்னும் பல்தனைக் கோர்த்து

பொன் சங்கிலி பின்னிடலாமோ

 

நெற்றியில் பொலிவுடன் வட்டமாய்க் குங்குமம்

வண்ணத்துக் கோலங்கள் தானே

உச்சியில் வகிடை நிரப்பிய குங்குமம்

வைத்தது யாரது நானே

 

மொத்தம் அழகினைக் குத்தகை எடுத்தவள்

உன் உள்ளத்தின் நிறமோ வெள்ளை

இத்தகை அழகைப் பெற்றவர் யாரோ

உன்னிகர் உலகினில் இல்லை

 

இத்தனை அழகை முற்றிலும் பார்த்து

பித்தெனத் திரிந்தேன் நானே

பட்டதும் உன்னைத் தழுவிய காற்று

இதயத்தைத் தொலைத்தேன் நானே

 

கோடையில் வாடிய சருகாய் இருந்தேன்

துளிர்க் காதலை புகுத்தியவள் நீயே

முடியாக் காவியம் போல நான் இருந்தேன்

என்னை முற்றிலும் முடித்தவள் நீயே

– ராகவன் பத்ராசலம்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad