\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எசப்பாட்டு – அக்கரை பச்சை

Filed in இலக்கியம், கவிதை by on March 30, 2015 4 Comments

esapaaddu_ikaraikku_akkarai_620x496காசு பணம் அதிகமாக

கைகளிலே புரளுமுன்னு

காடு கழனி எல்லாம் விட்டு

காத்துப் போல பறந்து வந்தோம்

 

அசல் நாட்டு வாழ்க்கையிலே

அமைதிக் கொரு பஞ்சமில்ல

அன்பாகப் பழக வுந்தான்

ஆளுக்கொரு குறைவும் இல்ல

 

கொஞ்ச நாள்ல போயிரவே

நெஞ்சு முழுசும் ஆசையிருக்க

பிஞ்சுப் புள்ளைகள நினைக்கயிலே

அஞ்சும் நம்மனசு மறுக்கவில்ல

 

நம்மப் பெத்தவுக

நடுத்தெருவுல நிக்க விட்டு

நாம பெத்தவுக

நலம் நெனக்கும் செய்கையிதோ?

 

–    வெ. மதுசூதனன்.

 

 

அக்கரை பச்சையிலே

விழிக்குறை ஏதுமில்லை

இக்கரைக்கு வந்ததால

அக்கறைக்குப் பஞ்சமில்லை

 

அஞ்சு புள்ள பெத்தாலும்

பஞ்சுத் தலைக் கெழவனுக்கு

பிஞ்சு போன பாயிதான்

நெஞ்சு கனக்கும் நெசந்தான்.

 

பெத்ததைச்  சீராட்டினாலும்

சேத்தசொத்தைக் கொட்டினாலும்

குத்தமொண்ணு தொக்கிநிக்கும்

பெத்தவன்மேல எந்நாளும்!

 

ஊத்தெடுத்த உதிரம்

வத்திப்போகும் நேரம்

முத்திப்போன  ஏக்கம்

தத்திவருவது சகசம்!!

 

சிறகடித்து வானத்திலே

சிறுகுஞ்சு பறக்கையிலே

பொறப்பு பூரணமாச்சுன்னு

பொறுப்பறுக்குமாம் சிட்டுக்குருவி!

 

கூத்துக் கட்டிய உறவும்

நேத்து வந்த பிரிவும்

காத்தாகும் பொறவு

மாத்தமில்லா வாக்கு!

 

அக்கரை இக்கரையின்னு

நித்திரை இழப்பதாலே

இம்மறை மாறாது

நம்குறையும்  தீராது!

 

– ரவிக்குமார்

 

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. Rini jose says:

    நாம பெத்தவுக
    நலம் நெனக்கும் செய்கையிதோ? hurting truth

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      உண்மை ரினி அவர்களே.. வலியின் வெளிப்பாடே அந்த வரிகள்

  2. மதுசூதனன் வெங்கடராஜன் says:

    நம்குறை தீர ஒரு
    நல்வாக்கு கேட்டுட்டேன்
    நலமாகும் செய்கையதே
    நண்பரவர் சொன்ன சொல்லும்

    எங்குண இருந்தாலும்
    எந்நிலை திரிஞ்சாலும்
    எங்குணம் மாறாம
    என்சனம் துணையாக

    அசராமப் பல உதவி
    அன்பாகச் செய்திட்டா
    அவனவனப் பாத்த சனம்
    அழகாக உதவிடுமே

    ஊரார் பிள்ளையத
    ஊட்டியே வளத்திடவே
    ஊனுருகும் நம் சனமும்
    ஊறு வராது வாழ்ந்திடுமே !!!

  3. லெட்சுமணன் says:

    ஆயிரம் தான் இருந்தாலும்
    சொர்க்கம் தான் ஆனாலும்
    சித்தி தான் அம்மா ஆகுமா?
    யாதும் ஊரே யாவரும் கேளிருன்னும்
    சொன்ன பாட்டனத்தான் மறக்க முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad