\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

எசப்பாட்டு – இரண்டாம் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on August 31, 2015 0 Comments

esappaaddu-kaathal_520x385

 

உசுருக்கு உசுரா ஆச வச்சோம்

உறவா மாறிப்போக ஆச வச்சோம்

உடனே சேந்துவாழ ஆச வச்சோம்

உடலு வேற உயிரொண்ணுனு ஆச வச்சோம்

 

உலகம் சுத்திவர ஆச வச்சோம்

உலவும் தென்றலாக ஆச வச்சோம்

உணர்வாய் ஒன்றுசேர ஆச வச்சோம்

உயிரைப் பெத்தெடுக்க ஆச வச்சோம்

 

உருண்டு காலமோட ஊர்கள் மாறிப்போக

உலரும் ஈரம்போல உறவும் தூரப்போக

உயிரும் போகமலே உணர்வும் மாறிப்போக

உலகில் தொடர்ந்துவாழ உருவான இன்னொண்ணோட

 

உசிரும் உசிராக ஆச வச்சோம் !!!

 

–    வெ. மதுசூதனன்.

 

ஆணும் பொண்ணும் சேந்துவாழும் நீதி வெச்சான்

ஆஸ்திக்கொண்ணு ஆசக்கொண்ணுன்னு பேசி  வெச்சான்

ஆஸ்தி மெச்சும் அகிலமிது அசட்டு  மச்சான்

ஆசவெச்சு நீயும் கண்டதென்ன சொல்லு மச்சான்!

 

ஆயிஅப்பன் தெய்வமுன்னு எவனெவனோ  எளுதி வெச்சான்

ஆருஉன்ன பெக்கச்சொன்னான்னு மூத்தவனும்  கேட்டு வெச்சான்

ஆகாசக்கோட்டை கட்டி அரசாளும் அரும மச்சான்

ஆதர்ச வாக்கயது வெலகிப்போகும் கானல் மச்சான்!

 

ஆறாம்மாசம் சுமக்கையிலே அடிமடியைக் கனக்க வெச்சான்

ஆதரவா அணைக்கையிலே கழுத்தோரம் கடிச்சு வெச்சான்

ஆலவிழுதா தாங்குவான்னு காத்திருந்த நேச மச்சான்

ஆலையிலே பிழிஞ்செறிஞ்ச கரும்பெனவே ஆனோம் மச்சான்.

 

ஆசைவலை ஆளை அமுக்கும் ஆழியலை மச்சான்!!

 

ரவிக்குமார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad