\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அந்தமும் ஆதியும்

Filed in இலக்கியம், கவிதை by on October 25, 2015 1 Comment

People 0569

 

 

இல்லாத பலதை இலக்காய்க் கொண்டு

கொண்டதை யெல்லாம் எளிதில் மறந்து

மறக்க வேண்டியதை மலையெனச் சுமந்து

சுமையாகிப் போனதை எண்ணி வருந்தி

 

வருத்தம் போக்க உறவைத் தேடி

தேடிய உறவோடு உள்ளம் திளைத்து

திளைப்பின் பயனாய் உறவும் வளர்த்து

வளர்ந்த பாதை திரும்பக் காண்கின்

 

காணாமற் போயிருந்தன காலடித் தடங்கள்

தடங்கள் நாடிப் பின்னோக்கிச் செல்வதா?

சென்றதைத் தொலைத்து முன்னே தொடர்வதா?

தொடரும் வினாக்கள் மிரளச் செய்தன

 

செய்வினைப் பயனும் நிழலாய்த் துரத்த

துரத்தும் துயருக்குத் துறவுதான் தீர்வா?

தீராத பற்றுகளுடன் மடிவது வாழ்வா?

வாழ்க்கைப் பயணம் விளக்கம் இல்லாதது.

 

  • ரவிக்குமார்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Vijay says:

    மிக அருமை இரவி 🙂

    வாழ்க்கை என்பதே ஒரு பயணம்தானே,
    விளக்கம்தேட அது கோனார் உரையா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad