\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மழைப்பாட்டு

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 1 Comment

mazhai2016_620x443பெருநிலத்தின் பரந்த வெளியில் நிறைந்திருந்த
பதமழையின் வாசம்
அவனை ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது

உழவு மாடுகள் இழுத்துச் செல்கிற
ஏர்முனை கலப்பை சலசலப்போடு நகர்ந்து
வழுக்கேறிய வண்டல் மண்ணை
பதப்படுத்தத் தொடங்குகிறது

தென்திசை வரப்பு முனை இறுதி வெளிச்சுற்றின் போது
வெறித்திருந்த மழை பொழியத் தொடங்கி
வியர்வை உமிழ்ந்திருந்த அவனுடலில் இறங்குகிறது

மழைக்குளிர்ச்சியில் மனம் கிளர்ச்சியுற்ற
அக்கணத்தில் மழைப்பாட்டைப் பெருங்குரலெடுத்து
அவன் இசைக்கத் தொடங்குகிறான்

அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை
இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு
மாடுகள் குளம்புகள் அதிர நகரத் தொடங்க

திசைகள் வெறித்துப் பறக்கின்ற நீர்க் காகங்கள்
அம்மழைப்பாட்டுக்கு எசப்பாட்டை இசைத்தவாறே
அவனைக் கடந்து செல்லத் தொடங்குகின்றன.

வே. முத்துக்குமார்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. P.Subramanian says:

    அன்புடையீர்,
    வணக்கம், மழைப் பாட்டுக் கவிதையில் “அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை
    இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு
    மாடுகள் குளம்புகள் அதிர நகரத் தொடங்க.” கவிதை வரிகள் அருமை கவிஞருக்குப் பாராட்டுக்கள்.

    பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad