\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

அம்மா ஒரு தீர்க்கதரிசி

Filed in இலக்கியம், கதை by on May 7, 2016 1 Comment
அம்மா ஒரு தீர்க்கதரிசி

ஒரு வியாழக்கிழமை அதிகாலை… அமெரிக்காவில், கணேஷின் வீடு என்றும் போல் அன்றும் வேலை நாளுக்கான காலை நேரப் பரபரப்பில் தொடங்கியிருந்தது. அவனுக்கு அலுவலகம் செல்ல வேண்டும், முதல் மீட்டிங்க் காலை 7 மணிக்கு.    லக்‌ஷ்மிக்கும் அலுவலகம் செல்ல வேண்டும், சற்று லேட்டாக அலுவலகம் தொடங்குகிறதென்றாலும் குழந்தைகள் இரண்டையும் பள்ளிக்குத் தயார் செய்து, பெரியவளைப் பள்ளிப் பேருந்திலும், சிறியவளைப் பள்ளியிலும் சென்று சேர்த்து விட்டுத்தான் அவள் அலுவலகத்திற்குச் செல்ல இயலும். எல்லோருமே பரபரப்பாய் இயங்கும் நேரம். இந்த நேரங்களில்தான் […]

Continue Reading »

ஆழ்நித்திரை

Filed in இலக்கியம், கவிதை by on April 25, 2016 2 Comments
ஆழ்நித்திரை

ஆழ்நித்திரை பகைவனும் இருக்கமாட்டான் நண்பனும் இருக்கமாட்டான் நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! பசியும் இருக்கமாட்டாது படுத்துயரமும் இருக்கமாட்டாது நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!   செய்வினை மறந்திடும் அதன்பயனும் மறைந்திடும் நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! ஆழ்துயர் அகன்றிடும் அகந்தையும் விலகிடும் நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!   சொந்தமது நினைவில்லிலை நினைவதுவும் துளியுமில்லை நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே! கடந்தகாலம் கலைந்தநிலை எதிர்க்காலம் கவலையில்லை நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!   உடலோடு உரிமமில்லை உயிரதனின் […]

Continue Reading »

வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !

வேள்வித் தீ குளிர் காய்வதற்கு அல்ல !

    விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு,  தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.  “ ஐயா! வணக்கம்.  என் பெயர் தூங்கத் தேவர். எனத் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு, “என்னை ஐயா நேரில் பார்த்து பேசணுமுன்னு சொன்னீங்களாம்”  என்றபடி நின்றார். தூங்கத் தேவரின் பணிவான   குரல் கேட்டு மாவட்ட ஆட்சியர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்.         தும்பைப்பூ போன்று வெண்மையான வேஷ்டி, இடுப்பில் […]

Continue Reading »

மழைப்போல நான்

Filed in இலக்கியம், கவிதை by on April 25, 2016 0 Comments
மழைப்போல நான்

ஈரம் சுமந்த
மேகத்தாய் ஈன்றெடுக்கிறாள்
ஒரு நொடியில்
பல கோடி
நீர்த் திவலைகளை..
அதை
மழை என்றீர்கள்.

Continue Reading »

பாரிய இழப்பின் பின்னர் பிள்ளைகள் கதி (Survival)?

பாரிய இழப்பின் பின்னர் பிள்ளைகள் கதி (Survival)?

வடஅமெரிக்காவில் வாழும் வங்கக் கடலோரப் பிரதேசங்களில் பிறந்த விடமாகக் கொண்ட எங்களில் பலரும் கோடை விடுமுறை காலங்களில் இந்தியா,இலங்கை,மலேசியாவென்று சென்று வருகிறோம். அவ்வப்போது பொருளாதாரத் தாழ்மையுடன் அவ்விடம் வீதியோரம் பிச்சையெடுத்தும், தண்ணீர்ப் பாக்கெட், சிற்றுண்டி விற்றும், பசியினால் சிறுதிருட்டுக்களில் ஈடுபட்டும், குப்பை வாளிகளிலும் குப்பை மேடுகளிலும் தேடியெடுத்து உண்டும், உயிர்வாழும் பல வீதிப் பிள்ளைகளையும் கண்டிருப்போம். அபாயங்களில் கடுமையாக அவஸ்தைப்படுபவர் பிள்ளைகளே இந்த அருகதைச் சிறுவர், சிறுமிகளில் பலரும் விபச்சாரத்திற்கும், அடிமைக் கூலி வேலைகளுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் […]

Continue Reading »

நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி (NATYA MANJARI DANCE COMPETITION 2016)

நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி (NATYA MANJARI DANCE COMPETITION 2016)

சென்ற ஆண்டைப் போல்இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி  ஸ்ரீ நாட்டிய மஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று. இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டியம் (classical Dance) தனி நபர் மற்றும் குழுவினர்களுக்கான போட்டிகளாகத் தனித்தனியாய் நடத்தப்பட்டது. அதேபோல்  பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்களும் Non classical (Semi classical / Folk […]

Continue Reading »

தூங்கா நகரம்

Filed in இலக்கியம், கவிதை by on April 25, 2016 0 Comments
தூங்கா நகரம்

சிலருக்கு தூக்கம் பலருக்கு துக்கம் ! தூக்கத்தை சிலர் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள் பணத்திற்காக …. சிலர் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள் வாழ்வதற்காக ! தூக்கத்தை மறந்து பலருக்குப் புத்துணர்வூட்ட டீ போடும் டீக்கடைக்காரர் ! மொட்டு மலருவதற்குள் விற்றுவிடத் துடிக்கும் பூக்காரி ! பசியோடு வருவோரைப் பாங்குடன் பசியமர்த்தும் இட்லிக்கடைகள் ! நடுநிசியிலும் நிலவை வம்புக்கு இழுக்கும் காதல் கிறுக்கன் ! ஒலிப் பெருக்கிகளுக்கு இடையிலும் தூங்கும் தெருவோர வாசிகள் ! பேருந்தில் பயணிப்போரைப் பத்திரமாகக் கொண்டு […]

Continue Reading »

சின்ன சபலம்

Filed in இலக்கியம், கதை by on April 25, 2016 0 Comments
சின்ன சபலம்

மினியாபோலிஸ் நகர மையப் பகுதியில் இருந்தது அந்த லவ்ரி சந்து. மிகவும் குறுகலான ஒருவழிப் பாதை. தெருவின் ரெண்டு பக்கத்திலும் புராதனமான, பராமரிக்கப்படாத கட்டிடங்கள். காரை பெயர்ந்து சிதிலமடைந்து சிதைந்து போயிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்த்ததும் இந்தியாவின் ஹவுசிங் போர்ட் வீடுகள் நினைவுக்கு வந்தன விஸ்வாவுக்கு. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத் தான் தனது ஆடி காரை வீட்டில் வைத்துவிட்டு சாந்தியின் கரோலோவை எடுத்து வந்திருந்தான். ஜி.பி.எஸ். ‘யு ஹேவ் அரைவ்ட் அட் யுவர் டெஸ்டினேஷன்’ என்றாலும் அது […]

Continue Reading »

எதிர்பாராத முடிவு !   

Filed in இலக்கியம், கதை by on April 25, 2016 2 Comments
எதிர்பாராத முடிவு !   

               விநாயகர் படத்தின் அருகில்,  மாட்டியிருந்த அழைப்பு மணியின் சப்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்தேன்.   திறந்தவள் திகைத்தேன்.  முன் பின்  தெரியாத பெண் ஒருத்தி , என் எதிரே  நின்று கொண்டிருந்தாள்.  ‘என்ன ?’  என்பது போல் அவளைப்  பார்த்தேன்.  அவள் வெகு அலட்சியமாக “ உன்னால் ஒரு கொலை செய்ய முடியுமா ? “ என்று சம்மந்தமில்லாமல்  என்னைப் பார்த்துக்  கேட்டாள். நான் அவளைப் பார்த்து “ […]

Continue Reading »

இன்னும் எத்தனை அமுதாக்கள்!!!

Filed in இலக்கியம், கதை by on April 25, 2016 0 Comments
இன்னும் எத்தனை அமுதாக்கள்!!!

தினமும் பயணிக்கும் அதே சாலையாக இருந்தாலும் என்னுடைய ஒவ்வொரு நாளும் இந்தச் சாலையின் வழியாகப் பார்க்கப்படும் போது புதிதாக தான் காட்சியளிக்கிறது. எட்டு வருடங்களாக இதே சென்னை குடும்ப நல நீதிமன்ற வளாகம் தான் என் பணியிடம். ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று அல்லது நான்கு விவாகரத்து வழக்குகள். இவழக்குகளில் குடும்ப நல ஆலோசகராகப் பணியாற்றுவதில் இருக்கும் உண்மையான சிரமம் அவ்வழக்குக்காக வரும் பெண்களின் கண்ணீர் கதைகளைக் கேட்கும் போதும், அவர்களின் நியாயமான எந்த முடிவிற்கும் துணை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad