admin
admin's Latest Posts
பகுத்தறிவு – பகுதி 4
(பகுதி – 3) கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்தக் கட்டுரையைத் தொடர இயலாததற்கு இதனை எதிர்பார்த்திருந்த வாசகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். எழுத இயலாததற்கான காரணம் என்று குறிப்பிட்டு எதனையும் சொல்ல இயலவில்லை. மனிதனொன்று நினைக்க இறை – எங்கும் நிறைந்திருக்கும் இயற்கை என்று வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – ஒன்று நினைக்குமென்பதையே காரணமாகச் சொல்லலாம் என்று விழைகிறேன். இயற்கையில் எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை என்பதை முழுமையாக நம்புவதன் வெளிப்பாடே இது. நாம் பிறந்த இடம், […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம் ! உலகிலேயே மிகவும் பெரியதும், முக்கியமானதுமான ஒரு குடியரசுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் நான்கு மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தலின் சமீபத்தில் நடந்து முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு, வென்ற கட்சிகள் பதவிப் பிரமாணமும் எடுத்துக் கொண்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகள் சரியானவையா, மக்கள் வேறுமாதிரியாகச் சிந்தித்திருக்க வேண்டுமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து எழுதுவதற்கு, பனிப்பூக்கள் ஒரு அரசியல் பத்திரிகையன்று. நடந்து முடிந்த இந்த ஜனநாயகத் திருவிழாவில் நம் கண்களுக்குப் பட்ட முக்கியமான சில விஷயங்களை ஒரு தலையங்கமாக […]
உச்சி தனை முகர்ந்தால்
வழக்கம் போல் அந்த அதிகாலை நேரம் விடிந்தது. ஒவ்வொரு நாளும் இதே தான் என்ற ஒரு அலுப்புடன் எழுந்தான் தேனப்பன். வாசலில் செல்வி கோலம் போட்டு கொண்டு இருந்தாள். உள்ளே கோபி ஒருக்களித்து திரும்பி படுத்தான். பழக்கமான உடல் வழக்கமான வேலைகள் செய்தது. ஆனால் மனம் அன்று ஒரு நிலையில் இல்லை. தேதியைக் கிழிக்கும் பொழுது இன்று காலையில் சீனுவை ரயில் நிலையம் சென்று கூட்டி வர வேண்டும். மூன்று நாட்கள் கும்பகோணம், சிதம்பரம், பட்டீஸ்வரம் செல்ல […]
பாலை தேசத்தில் கருநிற ஓவியம்!
பாலை தேசத்தில் பகலெல்லாம் காய்ந்து
நிசியில் தோன்றும் வெண்மதி வேளை
கண்டேன்!; கண்டேன்!
காதல் கன்மணியின் கருநிற விழியை
கண்டேன்! கண்டேன்!
ஆட்டிஸம் – பகுதி 6
(பகுதி 5) ஆட்டிஸத்தை மட்டுப்படுத்துவதில் முதன்மையான வழிமுறையாகக் கையாளப்படுவது பிரயோக நடத்தைப் பகுப்பாய்வு (Applied Behavioral Analysis) என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த முறை சாதரணத் தேவைகளான பார்த்தல், கவனித்தல், படித்தல், உரையாடுதல், மற்றவர்களைக் கவனித்துப் புரிந்து கொள்ளுதல் போன்ற செயல்களைக் கற்றுக் கொடுக்கும் விதமாக அமைகிறது. இந்த முறை வகுப்பறைக் கல்வியாகவும், தினசரிக் குடும்பச் சூழல்களிலும் பயிற்றுவிக்கப்படலாம். இவை குழந்தைகளுக்கு ஒருவரோடு ஒருவர் பயிற்றுவிக்கும் சூழலிலோ, குழுவாக வகுப்பறை போன்ற அமைப்பிலோ கற்றுத்தர இயலும். சமூகம் […]
ஆழ்நித்திரை
நாம் அனைவரும் தினந்தோறும் செய்யும் விடயம் உறங்குவது. ஆன்மிக ரீதியாக இதைப் பற்றி சற்று அலசிப் பார்ப்போம். இந்த விடயத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களைக் கீழே “கமெண்ட்” எழுதி பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். வேதங்கள் மனிதன் மூன்று நிலையில் உள்ளான் என சொல்கிறது. முழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்நித்திரை. ஆசை, சோகம், பொறாமை என பல உணர்வுகள் நமக்கு முழிப்பில் இருக்கும் தருணம் வருவதுண்டு. புத்த மதத்தை எடுத்துகொண்டால் மனிதன் கெடுவது ஆசையால். நாம் வாழும் […]
எது தவறு?
“ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு” என்றார் போஸ்ட்மேன் ராக்கி என்கிற ராக்கப்பனிடம் சாம்ராஜ் நகர் போஸ்ட்மாஸ்டர். “சார் அந்த அட்ரஸ்ல இருக்கறவரு இரண்டு மூணு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாராம், அதான் என்ன பண்றதுன்னு வச்சுருக்கேன்,” “தபால் எங்கிருந்து வந்திருக்கு? கோயமுத்தூர்ல் இருந்து சார்” “சரி அந்தக் கடிதாசிய நாளைக்கே திருப்பி அனுப்பிச்சுரு,” சரி என்று கடிதத்தை எடுத்தவன் கடிதம் பிரிந்திருப்பதைப் பார்த்து […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 5
(பகுதி 4) சென்ற இதழில், இதே கட்டுரையில் “மே மாத இறுதிக்குள் ஜனநாயகக் கட்சியின் இறுதி வேட்பாளர் தெரிந்துவிடக் கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் குடியரசுக் கட்சியின் இழுபறி நிலை ஜூலை மாத மாநாடு வரையில் விலகாத நிலையே காணப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சென்ற மாதத்துச் சம்பவங்கள் அரசியல் எதிர்பார்ப்புகள் அந்தரத்தில் தொங்கும் பெண்டுலம் போல எந்த வகையிலும் ஆடக் கூடியவை என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. மே மாதம் மூன்றாம் தேதி, தான் பெரிதும் எதிர்பார்த்த இண்டியானா மாநில ப்ரைமரி […]
இந்திரிய இன்பம்
இரவினில் கட்டிலினில் இன்பக் களிப்பினில்
இருக்கும் உணர்வுகள் இறுதிகண்ட பின்னரே
இல்லாமல் போனதேன்? இதுவே மகிழ்ச்சியெனில்
இணைந்து முடிக்கையில் இலகுவாய் விலகுவதேன்?







