admin
admin's Latest Posts
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2
(எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1) ஜாஸ் (Jazz) என்பது ஐம்பதுகளின் மத்தியில் பிரபலமடையத் தொடங்கிய ஒரு இசை வடிவம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வியல் இசையாகக் குறிக்கப்படும் இது பல உட்பிரிவுகளைக் கொண்டு விளக்குவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும் ப்ளூஸ் (Blues) எனும் பிரிவின் படி மனித வாழ்வியலில் இழையோடும் சோகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பிரபலமடையத் தொடங்கியது. அக்காலங்களில் இங்கு சவ ஊர்வலங்களில் இவ்வகை இசை […]
கலைவாணர்
”சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கை இருப்பு, வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு” என்ற பாடலைக் கேட்டிராத, ரசித்திராத சென்ற தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களே இருந்திருக்க இயலாது என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்குக் குரல் கொடுத்து, நடித்து அதற்கு முழு உயிரும் கொடுத்த நகைச்சுவை நடிப்பின் மாமேதை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தப் பாடலே அவரின் சிந்தனைக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். நகைச்சுவையில், சமூக […]
குருதேவ் தீப யாத்திரை
>> English Versionஹரி ஓம்! நம் வாழ்க்கையில் நம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளன. அதை உரிய முறையில் கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியம். பிறந்தவுடன் தாய் தந்தை நமக்கு முதல் குரு. பள்ளிப் பருவத்தில் பள்ளி வாத்தியார் நமக்கு இரண்டாம் குரு. அதே போல், முறையாக ஆன்மிகம் பயில நமக்கு ஒரு குரு அவசியம். வசிஷ்டர், சங்கராச்சாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜர், ராகவேந்திரர், ரமணமஹரிஷி, சின்மயானந்தா என பல குருமார்கள் தோன்றி மறைந்துள்ளனர். குரு சின்மயானந்தா […]
யார் அந்த இராவணன் – பகுதி 2
(யார் அந்த இராவணன் – பகுதி 1) இலங்கைத் தீவு உருவான கதை இலங்கையின் ஆதிக்குடிகளாகக் கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன என்றும், அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன என்றும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், […]
பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015
பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015 வட அமெரிக்க வாடிக்கையாளரே உங்கள் வாகனத்தை ஆரம்பியுங்கள். இந்த வாரம் (11/26/2015) அமெரிக்காவில் வியாழன் நன்றி நவிலல் நாள் உணவையுண்டு ஏப்பம் விட்ட அடுத்த நிமிடமே தள்ளுபடி பார்த்து பண்டங்கள் வாங்கி வர ஓடி வேண்டாமா? கனடாவிலும் ‘பாக்சிங்டே’ என்று தள்ளுப்படிக் காலம் ஆரம்பம். இந்த வருடம் சுமார் 135.8 மில்லியன் அமெரிக்க நுகர்வோருடன் நமது தமிழ் மக்களும் ஏட்டிக்குப்போட்டி போட்டு பண்டிகைகாலத் தள்ளுபடிகள் பெற்று செலவழிக்கவுள்ளனர். அமெரிக்கா […]
நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey
நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey வரலாற்றுக் குறிப்பு – நன்றி நவிலல் நாள் என்பது வடஅமெரிக்காவில் அறுவடைப் பண்டிகைக் காலம். ஐரோப்பிய குடியேறிகள் வடஅமெரிக்காவில் முதல்முறை வந்திறங்கியபோது போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வேட்டையாடுதல் போன்றவற்றில் பின்தங்கியிருந்தனர். இதை விட கடும்பனிகாலச் சூழலும் அவர்கட்கு ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் குடியேறிகள் பனியாலும், பட்டினியாலும் மரிக்கத் தொடங்கினர். இதைப் பார்த்து பரிதாபம் கொண்ட பூர்விகவாசிகள் இவர்கட்கு வேட்டை உணவு, போர்வைகள் என […]
சொற்சதுக்கம்
கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். ல உ க ப ம் ட ஓ டு த தொகுப்பு: ரவிக்குமார். (சொற் சதுக்கம் – விடைகள்)
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15) போரினால் விளைந்த அவலங்கள் – 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழயுத்தம் தீவிரமடைய தொடங்கியபோது, ஆரம்பத்தில் அது பல்லாயிரக்கணக்கானோரை வெளிநாடுகளுக்குப் புலம்பெயர வைத்தது. தேசங்கள் தோறும் சிதறிஓட வைத்தது. இந்தப் புலம்பெயர்வு ஆரம்பத்தில் பணவரவினூடான வாழ்வினைத் தந்தாலும் காலப்போக்கில் வலியைத் தரத்தொடங்கியது. ஈழத் தமிழரின் அன்றாட வாழ்வில் யுத்தம் பெருமளவிலான பாதிப்பினை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது அங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உடன் பிறப்புக்கள், உறவுகள் மீதும் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கி […]







