admin
admin's Latest Posts
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12
முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் […]
பயிற்றைக் கறி முறை (பாசிப்பயறு – Moong Dhal)
1/2 lb பாசிப்பயறு 2 சிறு வெங்காயம் (நறுக்கியெடுத்துக் கொள்க) 2 தேக்கரண்டி கறித்தூள்/ யாழ்ப்பாணத்தார் கறிமிளகாய்த்தூள் 2 பச்சை மிளகாய் (நறுக்கியெடுத்துக் கொள்க) 4 உள்ளிப்பூண்டு நகங்கள் (தட்டியெடுத்துக் கொள்க) 5 கோப்பை தண்ணீர் 1 கோப்பை தடித்த தேங்காய்ப்பால் போதிய அளவு கடல் உப்பு ½ தேக்கரண்டி சீரகத்தூள் (fennel) 1 தேக்கரண்டி கடுகு வெட்பத்தில் பதப்படுத்த வேண்டியவை 1 செத்தல்/உலர் மிளகாய் 1 சிறுகிளை கறிவேப்பிலை ½ தேக்கரண்டி கடுகு 2 மேசைக்கரண்டி […]
மன்மத வருட மாத பலன் – ஐப்பசி மாதம்
(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக்கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் ஐப்பசி – ஆங்கிலத்தில் செப்டம்பர்-அக்டோபர் மேடம் (மேஷம்) – உயர்ந்த மனநிலை, சந்தோஷங்களும், சகலபாக்கியங்களும் வரும் மாதம், மகளிர் சுகம், பிள்ளைகள் சுகம், ஆயினும் உற்றார் இனசனத்தினால் கவலைகள், மனத்தாபங்கள் உண்டாகலாம். காலில் காயங்கள், வியாதிகள் வரலாம். உணவு விடயங்களில் அவதானம் தேவை, சமிப்பாடு சிரமங்கள் ஏற்படலாம். பொருட்சேதம் ஏற்படக்கூடும். இடபம் (ரிஷபம்) – பிறவூர் பயணம் வரலாம். நட்பினால் மகிழ்ச்சி ஏற்படும். வாக்குவாதங்களில் எதிராளிகளிடம் […]
திரைப்படக் குறுக்கெழுத்து
இடமிருந்து வலம் அபிநய சரஸ்வதி என்ற செல்லப் பெயர் கொண்டவர் இவர் (5) பிரமிளா தேவி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை – இவரது மகளும் கனகா என்ற பெயரில் நடித்தார். (3) 1931ம் ஆண்டு தமிழில் (தெலுங்கு, ஹிந்தி உரையாடல்களும் இதில் இடம்பெற்றிருந்தன) வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் (4) இந்நாளைய செலவாளி இயக்குனரான இவரது பெயரில் எண்பது படங்களைப் படைத்த புகழ் பெற்ற முன்னாள் இயக்குனர் ஒருவரும் இருந்தார். (4) கேரளாவில் பிறந்து, தமிழில் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 18
(அத்தியாயம் 17 செல்ல இங்கே சொடுக்கவும்) அரபிய தீபகற்பத்தின் வடபகுதியில் தான் நாகரிகத்தில் உச்சம் தொட்ட சுமேரிய நாகரீகம் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இது இன்றைய இராக் நாடாகும். இங்குதான் யூஃப்ரடீஸ் மற்றும் சின்னார் என்று அழைக்கப்படுகின்ற டைக்ரஸ் நதிகள் ஓடுகின்றன. இவ்விரு ஆறுகளும் இப்பகுதியை வளம் கொழிக்கச் செய்கின்றன. அக்காடிய மொழியில் யூஃப்ரடீஸ் ஆற்றை இப்-புரத்து ஆறுஎன அழைத்தனர். இந்தப்பக்க ஆறு அந்தப்பக்க ஆறு என்பதை இப்புரத்து ஆறு அப்புரத்து ஆறு என்று குறிப்பிடப்பட்டது. இதே ஆற்றைப் […]
தனித் தீவு
அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”. “தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.” ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு […]
விநாயகர்ச் சதுர்த்தி
கல்லிற் செய்த கருஞ் சிலையாம்
கணக்காய் அமைத்த கற் கோயிலாம்
கருணைக் கடவுளாய்க் காண்பவர் பலராம்
கண்மூடித் தனமாய்க் கடிந்துரைப்பர் சிலராம்
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15
பிரயாண அவலம் (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14) புலம்பெயர்ந்து உலகின் திசையனைத்தும் சென்று வாழ்வதென்பது சுலபமான விடயமல்ல. உரிய ‘வீசா’, ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் திருட்டு வழியில் கடல் கடந்தும் காடு, மலை கடந்தும் நாடு விட்டு நாடு கடந்தும் கண்டம் விட்டுக் கண்டம் ஓடியும் தமது பயணங்களை மேற்கொண்டு, பல மாதங்கள் தொடக்கம் சில வருடங்கள் வரை நீண்ட பயணத்தைச் செய்து கடினமான வழிகளில் உலகின் திசையனைத்தும் பரவினர். பேற்றோல் பவுசர்கள், பாரவூர்திகள், கொள்கலன்களில் சென்று இடைநடுவில் […]
இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்
சென்ற ஜூலை மாதம், பதினான்காம் நாள்….. சென்னை சாந்தோம் பகுதியின் வாகன இரைச்சல்களுக்கு நடுவே உயர்ந்து நிற்கிறது அந்த வெள்ளை வீடு. சூரியனின் ஒளி விழுந்து அந்தச் சூட்டால் ஆர்ப்பரித்த கடலலைகளின் ஓலம் விட்டு விட்டுக் கேட்கிறது. மலர் மாலைகளின் வாசம் காற்றில் தவழ்ந்து அருகிலிருக்கும் கடற்புறத்தின் வாடையை நசுங்கச் செய்கிறது. ஆங்காங்கே மீனுக்காகப் பறந்து செல்லும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே செல்கின்றன. மிகவும் ரம்மியமான காலைப் பொழுது. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்கள், […]
விலையில்லா விளையாட்டு!
நடை பழக ஒரு பொம்மை, ஒலி அறியச் சில பொம்மைகள், அடுக்கிச் சேர்க்கப் பல வகைகள், சின்னதான சமையலறை, அழகு படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் கொண்ட அழகுப் பெட்டிக்கடை (boutique), வண்ணமய வடிவம் செய்து விளையாடும் மாவு (Play Dough), கட்டி அணைத்துக் கொண்டாட மென் பஞ்சு பொம்மைகள் (soft toys), சிறிய அளவு சிற்றுந்து பொம்மைகள் என இவையெல்லாம் என் பிள்ளையின் விளையாட்டு அறையை எட்டிப் பார்த்த கணம் என் கண்ணில் பட்டவை. இதைக் காணுகையில் […]







