\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1

தமிழில் இப்பொழுது வாரத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்கள் வெளி வருகின்றன. அதில் முக்காவாசி பார்ப்பதற்குச் சகிப்பதில்லை.. நல்ல தரமான படங்களும் வருகின்றன மறுப்பதற்கு இல்லை. சில தரமான திரைப்படங்களும் வணிக ரீதியாக தோற்றுப் போகின்றன. ஒரு பொதுப் பார்வையாளனாகப் பார்க்கும் போது, நல்ல படம் எடுக்கத் தெரியாமல் பணத்தைத் தண்டம் செய்கின்றார்கள் என்று தோன்றுகிறது. அதே சமயம் மிகத் தரமான படங்கள் எடுத்து பண விரையம் செய்பவர்களும் உண்டு. நம்முடைய படைப்பாளிகளின் தரமும் உயர்த்தப் பட வேண்டும், […]

Continue Reading »

முருங்கைக்காய்க் கறி

Filed in அன்றாடம், சமையல் by on March 23, 2014 0 Comments
முருங்கைக்காய்க் கறி

நாட்டுப் புறமாயிருந்தால் என்ன, நகரப் புறமாயிருந்தால் என்ன முருங்கையின் மகிமையைத் தமிழர் அகத்திய குணப் பாடம் தொட்டு தற்காலம் வரை போற்றி மகிழுவர். தற்காலத்தில் உணவகங்களில் சாம்பாரில் மிதக்கும் ஒரு துண்டு காய்கறியாகக் காணப்படினும் அது முருங்கையின் தனிப்பட்ட சுவையை, மகிமையை ஒருபோதும் தரமாட்டாது. “செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய் வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும் – மறமே நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே நல்ல முருங்கையிலையை மொழி” – என்கிறது அகத்தியர் குணபாடம் தமிழகத்திலும் ஈழத்திலும் சுண்ணாம்புக் கற்பாறை […]

Continue Reading »

மேய்ப்பனை இழந்த மந்தைகள்

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
மேய்ப்பனை இழந்த மந்தைகள்

காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்
அனைத்துமே மாறிப்போனது.
மக்கள் அனைவரும்
கொடிய விலங்குகளிடையே
சிறைப்பட்டுக் கொண்டனர்.

Continue Reading »

விதி

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
விதி

விவரம்பல அறிந்தவரும் விழுந்திடும் காரணம்
விதியென்ற ஒன்றின் விந்தையான செயலாம்
விபரீதம் பலபுரியும் விதியதன் செய்கை
விளங்கியது இல்லையென விரக்தியில் சொல்வர்
விலகித் தெளிந்து விளக்கம் உணர்ந்த
விடிவெள்ளி தர்மனும் விரும்பிச் சூதாடினனாம்!

Continue Reading »

உழைப்பு

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
உழைப்பு

ஏர்பூட்டிச் சோறிட்டு உழைப்பின் பெருமையை
உலகிற்கு உணர்த்தினான் மனிதன் அன்று…
நீரூற்றக் கூட நேரமின்றி இயந்திரத்தின்
உதவியை நாடுகிறான் மனிதன் இன்று…

Continue Reading »

தீங்கற்ற வீட்டு விலங்கு

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
தீங்கற்ற வீட்டு விலங்கு

நான் முதலில் மூச்சு விட ஆரம்பித்த போது
என் தந்தையிடம் கூறினீர்கள்…
“சேமிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது ஐந்து வயதில் கூறினீர்கள்…
“எழுதப் படிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது பத்து வயதில் கூறினீர்கள்…

Continue Reading »

கணவரை இழந்த பெண்ணே

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 2 Comments
கணவரை இழந்த பெண்ணே

வெள்ளைப் புடவையில் வீட்டுக்குள்
வதங்கிக் கிடக்கிறாயே!
வண்ணப் புடைவையில் வானத்தில் நீ
வட்டமிட வேண்டாமா?
அந்நியமாய் வந்தவன்
ஐயோ எனப் போய்விட்டான்

Continue Reading »

கண்ணதாசனின் கவிதைகள் – பகுதி 5

கண்ணதாசனின் கவிதைகள் – பகுதி 5

தென்றலான காதல் சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூறுகளில் சில. பழங்கால இலக்கியங்களில் இந்த தலைப்புகளில் பல பாடல்களைக் காண முடியும். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியால், பிரிவு, ஏக்கம், தூது என்ற கூறுகள் தொலைந்து போக, இயந்திர கதியாகிப் போன உலகில் பயம், நாணம், வெட்கம், துயர் என்பவையும் அமுங்கிப் போய்விட்டன. […]

Continue Reading »

வயற்காற்று (பாகம் – 01)

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments
வயற்காற்று (பாகம் – 01)

“திக்கற்றோருக்குத் தெய்வமே துணை… “ “முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் குளமாகிக் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்பக் குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் […]

Continue Reading »

யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 1)

யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 1)

ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad