கட்டுரை
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-18
இன உணர்வு (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17) இன உணர்வு என்பது எல்லா இனத்தினர்க்கும் உரித்தானதொன்று. தத்தம் இனம் சார்ந்து சிந்திக்கப் பழகிக் கொண்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்லர். காகங்கள் கூடத் தம்மினத்தில் ஒன்று இறப்பினும் கூடி அழும். சிறிதளவு உணவு கிடைப்பினும் கூடி உண்ணும். இத்தகைய இனமான உணர்வு தமிழரிடத்தில் சொற்ப அளவில் இருப்பதை எண்ணிப் பெருமை கொள்வோம். “பட்டினிப் பிசாசு தின்னும் ஓர் ஆப்பிரிக்கக் குழந்தைக்காய் வழியும் என் கண்ணீரை என் இனத்துக் குழந்தைக்காய் மட்டும் […]
வீழ்வேனென்று நினைத்தாயோ!
“சாவு பயத்தக் காட்டிடாங்க பரமா!”… அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கரை வாழும் அனைத்து சென்னை மக்களும் சொன்ன வார்த்தைகள் இவை. கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென ஒரேநேரத்தில் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. நீர் தேங்கி மாநகருக்குள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழைநீரில் வீடுகள் மூழ்கியதால், மின் […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16) சுதந்திர வேட்கை சுதந்திரம் என்பது மனிதர்களின் பிறப்புரிமை. அது மறுக்கப்பட்ட நிலையில் வாழும் ஈழத் தமிழர்கள் தமது விடுதலை உணர்வின் வேட்கையினை மனதுக்குள் போட்டுப் பூட்டி வைத்து மௌனியாகி வாழாவிருக்கின்றனர். சோகங்களில் மூழ்கி வாழ்வினைத் தொலைத்த போதிலும் நம்பிக்கை ஒன்றே வாழ்வின் மூலதனமாக நின்று செயற்படுவதாகத் ‘தமயந்தி’ எழுதிய “நம்பிக்கையான மௌனம்” என்ற கவிதை குறிப்பிடுகின்றது. “துளிர்ப்புக் காலத்தை எதிர்நோக்கி தவமிருக்கும் பனிப்புலத்து இலையுதிர் மரங்களைப் போல் மெளனமாய் எங்கள் இருத்தல் […]
முப்பரிமாணப் பிம்பப் படிமப் பிரதிபலிப்பு
முப்பரிமாணப் பிம்பத் தொழில்நுட்பம் ஒருவர் மறைந்த பின்னும் அவர் விட்டுச்சென்ற எண்ணங்களுடன் தொடர்பு கொண்டு உரையாட உதவலாம் இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு இறுதியில் இந்திய உபகண்ட இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட கடற்கோளில் மரித்த மக்கள் பலர். இதில் தமிழ்ப் பிரதேசங்களில் பலமக்கள் மடிந்தனர். வரலாற்றுப் படிமங்களிலிருந்து எமது சந்ததிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடற்கோள் பற்றி அறிந்திருந்தும், பெரிய அளவில் கடற்கோள் நிகழாததால், தற்கால சந்ததியினர் ஒருவருக்கும் ஞாபகத்தில் வரவில்லை. இதனால் ஒரு வகையில் பார்த்தால் எம்மக்களுக்கு […]
நானே ராசா நானே மந்திரி
நமது சிற்றூர்களில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொழுது, சாயும் வேளையில் கட்டை வண்டிகள் கடகட மடமட என ஓடி வருவதைக் கேட்டிருப்போம். சரக்கு ஏற்ற கட்டை வண்டி இருந்ததைப் போல, சொகுசுப் பயணம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வில் வண்டிகள் பல இருந்தன. ஆனால் இன்று காலவோட்டத்தில் புகையைக் கக்கி, காதைக் கிழிக்கும் எந்திர வண்டிகள் எங்கும் பரவி, கட்டை வண்டிகளை ஓரம் கட்டி விட்டன. நமது பயன்பாட்டில் இல்லை என்றாலும் நமது நினைவுச் சாலையில் […]
மினசோட்டாவின் கதை – பாகம் 2
(மினசோட்டாவின் கதை பாகம் 1) முதல் மனிதன் வட அமெரிக்காவிற்குக் குறிப்பாக மினசோட்டா மாநிலத்திற்கக்கு வாந்தான் அல்லது வந்தாள் என்று சரியாகத் தெரியாது. எனினும் மனித இனம் ஆசியாவிலும், ஆபிரிக்கக் கண்டங்களிலும் குடியேறியிருக்கும் அதே காலகட்டத்தில் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படவில்லை என்று இதுவரை வட மற்றும் தென்கண்டங்களில் நடந்துள்ள அகழ்வு ஆராய்ச்சித் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மினசோட்டாப்பகுதி மற்றும் வட அமெரிக்கவிற்கு வந்தவர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து ருஸ்ய-சைபீரியாவுடாக பெரிங் நீரிணையைக் கடந்து; பெரும் பனியுகம் பின்தாங்கத் தொடங்கியபின்னர் […]
ஆட்டிஸம் – 2
(ஆட்டிஸம் – 1) ஆட்டிஸம் என்பதை ஒரு நிலை என்று விளக்குவதே சரியாக இருக்குமென நினைக்கிறேன். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைவு, பொதுவாக, குழந்தையின் மூன்று வயதுக்குள் தோன்றுகிறது. குறைபாடுகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பல வகைகளில் வேறுபடுகின்றன. சில குழந்தைகள் மற்றவரிடம் தான் தெரியப்படுத்த விரும்புவதைக் காட்ட இயலாத நிலையில் இருக்கலாம். வேறு சில குழந்தைகளால் சிறிய இயக்கங்களைச் செய்ய இயலாத நிலை – அதாவது ஒரு சின்ன கரண்டியையோ, பொம்மையையோ எடுத்து நகர்த்தி வைக்க இயலாத […]
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2
(எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1) ஜாஸ் (Jazz) என்பது ஐம்பதுகளின் மத்தியில் பிரபலமடையத் தொடங்கிய ஒரு இசை வடிவம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வியல் இசையாகக் குறிக்கப்படும் இது பல உட்பிரிவுகளைக் கொண்டு விளக்குவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும் ப்ளூஸ் (Blues) எனும் பிரிவின் படி மனித வாழ்வியலில் இழையோடும் சோகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பிரபலமடையத் தொடங்கியது. அக்காலங்களில் இங்கு சவ ஊர்வலங்களில் இவ்வகை இசை […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15) போரினால் விளைந்த அவலங்கள் – 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழயுத்தம் தீவிரமடைய தொடங்கியபோது, ஆரம்பத்தில் அது பல்லாயிரக்கணக்கானோரை வெளிநாடுகளுக்குப் புலம்பெயர வைத்தது. தேசங்கள் தோறும் சிதறிஓட வைத்தது. இந்தப் புலம்பெயர்வு ஆரம்பத்தில் பணவரவினூடான வாழ்வினைத் தந்தாலும் காலப்போக்கில் வலியைத் தரத்தொடங்கியது. ஈழத் தமிழரின் அன்றாட வாழ்வில் யுத்தம் பெருமளவிலான பாதிப்பினை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது அங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உடன் பிறப்புக்கள், உறவுகள் மீதும் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கி […]
கண்மாய்க் கரையும் களத்து மேடும்
இலையுதிர் காலம் வந்தால் மினசோட்டாவில் பெரிதும் கொண்டாடப் படுவதில் ஒன்று இயற்கை காட்டும் வண்ண விளையாட்டு. மற்றொன்று ஆங்காங்கே நடத்தப்படும் அறுவடைக் கொண்டாட்டங்கள். வைக்கோல் கட்டுகளைத் திறந்த வண்டியில் அடுக்கி அதன் மீது அமரச் செய்து ஊர்வலம் கொண்டு செல்லும் வைக்கோல் சவாரி (Hay Ride) மற்றொரு புறம். பரங்கிக்காய்களை அறுவடை செய்து ஆங்காங்கே கிடத்தி விளையாட வைக்கும் பரங்கித் திட்டுகள் (Pumpkin Patch) இன்னொரு புறம். இந்தக் கொண்டாட்டத்தை எனது பிள்ளைகளோடு சென்று கண்டு களித்த […]






