கட்டுரை
மினசோட்டாவின் கதை
ஏறத்தாழ ஒரு மில்லியன் வருடங்களிற்கு முன்னர் இருந்து மினசோட்டாவின் கதையை ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் பூகோளத்தின் கால் பகுதியைக் கவர்ந்து காணப்பட்டது. இதுவே ஆழ்ந்த உறைபனியின் வடதுருவம் மாத்திரமல்ல அதன் வட நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளும் மூடப்பட்டிருந்தது. இக்காலம் பனியுகம் எனப்படும். அக்காலத்தில் வடதுருவமானது பலதட்டுப் உறை பனிப்பாறைகளினால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன. அதன் பின்னர் பனியுருகி நீர்த்தேக்கங்களும்,காடுகளும், விலங்குகளும் செழித்தன. ஆயினும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளின் ஆழ்ந்த உறைபனி மீண்டும் திரும்பி உயிர்த்த யாவற்றையும் குளிரில் உறைத்து […]
ஆப்பிள் – கொய்யவும், கொறிக்கவும்
ஆப்பிள் என்று சொல்லிவிட்டு, சாப்பிடும் ஆப்பிள் என அழுத்திச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். இது சாப்பிடும் ஆப்பிளைப் பற்றிய கட்டுரை. ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்றால், ஆப்பிள் தான் முதல் பழம். ஒரு பவுண்ட் ஆப்பிள் – வகையைப் பொறுத்து ஒரு டாலரில் இருந்து கிடைக்கிறது. ஒரு அவகடோ, கிட்டத்தட்ட ஒரு டாலர். ஒரு மாதுளை, கிட்டத்தட்ட இரண்டு டாலர். கொய்யா – வகையைப் பொறுத்து பவுண்ட் இரண்டில் இருந்து ஐந்து டாலருக்கு […]
மினசோட்டா மக்கள் அறிகுறி
உங்கள் பக்கத்து ஐஸ்கிரீம் கடை செப்டெம்பர் மாதத்திலிருந்து அடுத்த மேமாதம் வரை மூடியிருந்தால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் சில சமயம் ஷாட்ஸ் போட்டுக் கொண்டு ஜாக்கட்டு அணிந்து ஒரே தரம் வெளியே போய் வரப் பாவித்தீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்கள் பயணங்களை மணித்தியாலக் கணக்கில் மாத்திரமே ஒப்பிடுவீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்களுக்குத் தெரியாதவர் தவறாகத் தொலைபேசியில் அழைத்தும் பலமணி நேரம் முகம் முறிக்காது பேசியுள்ளீர்கள் ஆனால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக […]
நிலாவரை
யாழ்ப்பாணத்தில் உள்ள நவக்கிரி கிராமத்திற்கு அருகில் அமையப் பெற்று உள்ள நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு என மக்கள் நம்புகின்றனர். நிலாவரையில் ஒரு எலுமிச்சங் காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில் மிதக்கும் என்றனர். இது சதுரக் கேணி போன்று அமைந்து பயத்தை தரக் கூடிய வகையில் கருமை படர்ந்த நிறத்தோடு கூடிய தண்ணீரைக் கொண்டது. ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள் பலர். இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது. கி. பி. 1824 இல் சேர் […]
ஆட்டிஸம்
வாழ்க்கையில் இதற்கு முன் கேட்டிராத வார்த்தை… கேட்ட முதல் முறை எனக்குத் தோன்றிய உணர்வு, “இது கடைசி முறையாக இருக்காது என்பதே”… புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே, ஆனாலும் கற்றுக் கொண்டு சாவதானமாய் அடுத்த விஷயத்திற்குப் போய்விடும் ஒரு வார்த்தையல்ல “ஆடிஸம்” என்பதை நானும் எனது மனைவியும் மிகவும் விரைவிலேயே உணர்ந்தோம். எங்களின் வாழ்வின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், இரண்டறக் கலக்கவிருக்கும் ஒரு வார்த்தை, ஒரு வாழ்க்கை என்பதை முதல் முறையாகக் கேட்கையில் […]
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1
Fusion எனும் ஆங்கில வார்த்தைக்கு இணையத்தில் பொருள் தேடிய போது இணைவு, கலவை எனப் பல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. ஒரு இணையப் பக்கத்தில் இந்த ஆங்கிலச் சொல்லுக்கு உருகுதல் என்று பொருள் தந்திருந்தார்கள். மறைந்த இசை மேதை M.S.V. யின் பாடல்களைப் பற்றிய தொடரின் ஒரு பகுதியாக Fusion இசைப் பாடல்கள் பற்றிய இக்கட்டுரைக்கு இது மிகப் பொருத்தமான சொல்லாகப் பட்டது. Fusion என்பது இரண்டு வகையான இசைப் பகுப்புகளை ஒன்றாக உருகியோடச் செய்வதாகும். ஆப்பிரிக்க […]
தமிழர் கை வைத்தியக் குறிப்புக்கள்
அசீரணம் – ஓமம்(basil) அரைத்துப் பசும்பாலிலோ, அல்லது பச்சடியாகவோ உட்கொள்ளலாம். அத்துடன் 2 அவுன்ஸ் தேனையும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். கண்ணீர் வடிதல் – இதைத் தவிர்க்க வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை (Almonds) மெதுவாக மென்றுத் திண்ணலாம். காது வலி – மூன்று உள்ளிப்பூண்டு நகங்கள் வாதுமை (Almond) ஆகியவற்றை எண்ணெயில் அவை கருகும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். தேவையான நேரம் 3 சொட்டுக்களை வலிதரும் காதில் விட்டுக்கொள்ளவும். குமட்டல் (Feeling to vomit )– […]
விலையில்லா விளையாட்டு!
நடை பழக ஒரு பொம்மை, ஒலி அறியச் சில பொம்மைகள், அடுக்கிச் சேர்க்கப் பல வகைகள், சின்னதான சமையலறை, அழகு படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் கொண்ட அழகுப் பெட்டிக்கடை (boutique), வண்ணமய வடிவம் செய்து விளையாடும் மாவு (Play Dough), கட்டி அணைத்துக் கொண்டாட மென் பஞ்சு பொம்மைகள் (soft toys), சிறிய அளவு சிற்றுந்து பொம்மைகள் என இவையெல்லாம் என் பிள்ளையின் விளையாட்டு அறையை எட்டிப் பார்த்த கணம் என் கண்ணில் பட்டவை. இதைக் காணுகையில் […]
இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்
சென்ற ஜூலை மாதம், பதினான்காம் நாள்….. சென்னை சாந்தோம் பகுதியின் வாகன இரைச்சல்களுக்கு நடுவே உயர்ந்து நிற்கிறது அந்த வெள்ளை வீடு. சூரியனின் ஒளி விழுந்து அந்தச் சூட்டால் ஆர்ப்பரித்த கடலலைகளின் ஓலம் விட்டு விட்டுக் கேட்கிறது. மலர் மாலைகளின் வாசம் காற்றில் தவழ்ந்து அருகிலிருக்கும் கடற்புறத்தின் வாடையை நசுங்கச் செய்கிறது. ஆங்காங்கே மீனுக்காகப் பறந்து செல்லும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே செல்கின்றன. மிகவும் ரம்மியமான காலைப் பொழுது. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்கள், […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15
பிரயாண அவலம் (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14) புலம்பெயர்ந்து உலகின் திசையனைத்தும் சென்று வாழ்வதென்பது சுலபமான விடயமல்ல. உரிய ‘வீசா’, ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் திருட்டு வழியில் கடல் கடந்தும் காடு, மலை கடந்தும் நாடு விட்டு நாடு கடந்தும் கண்டம் விட்டுக் கண்டம் ஓடியும் தமது பயணங்களை மேற்கொண்டு, பல மாதங்கள் தொடக்கம் சில வருடங்கள் வரை நீண்ட பயணத்தைச் செய்து கடினமான வழிகளில் உலகின் திசையனைத்தும் பரவினர். பேற்றோல் பவுசர்கள், பாரவூர்திகள், கொள்கலன்களில் சென்று இடைநடுவில் […]






