\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-3

(பகுதி 2) புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் உள்ளடக்கம் கவிதையின் உள்ளடக்கம் என்பது, அது எதைப்பற்றிச் சொல்ல முனைகிறது என்பதைப் பொறுத்ததாகும். கொளு, கரு, பாடுபொருள், உள்ளீடு, பொருள், விஷயம், தீம், பாவிகம் போன்ற பல பெயர்களினால் இதனை அழைப்பர். ‘’எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட பொருளின் செய்தி உள்ளடக்கம்’’ என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. இவ்வகையில், ஒரு கவிஞன் கூறவிழையும் பொருள் பொதுமையானது. அது சமூகத்துக்குரியது. வருணனை மட்டுமே கவிஞனுக்கு உடைமையானது. கவிதையின் பொருள் வேறு, கவிதை […]

Continue Reading »

அரசியலில் இதெல்லாம் சகசமப்பா…

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 0 Comments
அரசியலில் இதெல்லாம் சகசமப்பா…

முடிந்தால் கட்டு
கட்டினால் இடி
முடிந்தவரை மௌனமாயிரு
உரத்துக் குரல்கொடு
ஆளுறக்கம் போல் நடி
வீழும்வரை பொறுமை கொள்
வீழ்ந்தபின் உரக்கக் கத்து

Continue Reading »

கேளாய் மகளே

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 2 Comments
கேளாய் மகளே

மானாட மயிலாடச் சொல்வேனடி
மனம்போல விளையாடச் சொல்வேனடி
தேனாகத் தமிழாகச் சொல்வேனடி
தானாகத் துயிலாடச் சொல்வேனடி

Continue Reading »

ஐயோ ஐயோ..

ஐயோ ஐயோ..

Continue Reading »

கார் எங்க..

கார் எங்க..

Continue Reading »

எசப்பாட்டு – வேண்டுவதும் வேண்டாததும்

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 2 Comments
எசப்பாட்டு – வேண்டுவதும் வேண்டாததும்

மண் மீது மகிழ்வாய் வாழ்ந்திட
பொன் பொருள் அளவாய் அவசியம்

பெண் அவளின் காதல் கிடைத்திட
மென் இதயம் இருத்தல் அவசியம்

Continue Reading »

வாங்க ஃப்ரீயா பேசலாம்

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
வாங்க ஃப்ரீயா பேசலாம்

”டேய் .. சுரேசு! எப்ட்றா இருக்கே? பாத்து எம்புட்டு நாளாகுது.” “ஏ .. மாப்ளே .. என்கிட்டயே பிட்ட போட்றியா? நேத்து காலம தானே உன்னய பாத்தேன்?” “என்னது? நேத்து காலம பாத்தியா? ஆமடா.. ஆமடா.. உங்க வீட்டு முன்னால பாத்தேனில்ல? முந்தாநா நம்ம சீனிவாசனில்ல .. அதாம்டா நெட்டுக்குத்தலா ஆறடிக்கு வளந்து நிப்பானே .. அதே சீனிவாசந்தேன்.. அவுங்க வீட்டுல பட்டறைய போட்டோம்..” “அங்கன பட்டறைய போட்டுட்டு மட்ட மல்லாக்க படுத்து கெடந்துபுட்டு என்னிய பாத்தத […]

Continue Reading »

வரும் நாட்களில் ..

Filed in இலக்கியம், கவிதை by on January 15, 2014 0 Comments
வரும் நாட்களில் ..

நாட்காட்டி தீர்ந்ததால் கரைந்தே
நரைகூட்டிக் காட்ட முனைந்தே
நாடகத் திரையென விழுந்தே
நொடியில் முடிவதோ கடந்தாண்டு?

Continue Reading »

கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 15, 2014 0 Comments
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3

”ஆண்டவன் எங்கே இருக்கிறான்?” நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள் பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக விடையளிக்கிறார் நம் கவியரசர். ”ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் – இதில் மிருகம் என்பது கள்ள மனம் – உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த ஆறு கட்டளை […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 2

Filed in இலக்கியம், கதை by on January 15, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 2

முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சிகிச்சை பெறுகையில் காயமடைந்தவன் கணேஷிடம் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றைக் கொடுக்க, அதில் ஒரு கொலை நடப்பதை வீடியோவாகப் பதிவு செய்யப் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad