\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ட்ராஃபிக் டிக்கெட்

ட்ராஃபிக் டிக்கெட்

Continue Reading »

சச்சின் டெண்டுல்கர்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 6, 2013 0 Comments
சச்சின் டெண்டுல்கர்

நூற்றி இருபது கோடி மக்களைக் கொண்டு மதம், மொழி, இனம், பொருளாதாரம், தொழில் எனப் பல வகைகளில் பிளவுபட்டு, வலுவான மாற்று கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு நாடு – எதிரிகள் தங்கள் நாட்டைத் தாக்கினாலும், சொந்த நாட்டினர் விண்வெளிச் சாகசங்கள் நிகழ்த்தினாலும், தானுண்டு, தன் வேலையுண்டு என்ற மனப்பாங்குடன் நடந்து கொள்ளும் மக்களைக் கொண்ட நாடு – பல மணி நேரங்கள் ஒத்த கருத்தைக் கொண்டு, அதிக கவனத்துடன் ஒரே குறிக்கோளுடன் இருப்பது, சச்சின் டெண்டுல்கர் என்ற […]

Continue Reading »

களவினால் ஆகிய ஆக்கம்

களவினால் ஆகிய ஆக்கம்

வடிவேலு – பிறர் பொருளைக் கன்னமிட்டுப் பிழைப்பு நடத்துபவன். மாதத்தின் முதல் வாரத்தில் அளவுக்கு அதிகமாய் கையில் பணம்புரளும் – மற்றவர்களுக்கு சம்பள காலம் என்பதால். பேருந்தில் ஏறி ஒரு நிறுத்தத்தில் இருந்து இன்னொரு நிறுத்தம் வந்து சேரும் முன்னர் – கண் மூடி கண் திறக்கும் சிறு இடைவெளியில் – கால்சட்டைப் பையிலிருக்கும் பர்ஸோ, கட்கத்து மத்தியில் வைத்திருக்கும் மஞ்சள் பையோ, இவனின் கண்களிலிருந்து தப்புவது கடினம். மிகவும் சாமர்த்தியமாய் பணத்தை அடித்து விடும் “திறமைசாலி”. […]

Continue Reading »

கண்ணதாசனின் காதல் மற்றும் தத்துவம்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 5, 2013 0 Comments
கண்ணதாசனின் காதல் மற்றும் தத்துவம்

சென்ற கட்டுரையில் பருவத்தில் தோன்றி மரணத்தையும் தாண்டி நிலைக்கும் காதலைக் கவியரசர் எப்படி இயற்கையுடன் இறண்டறக் கலந்தது என உவமித்தார் என்று பார்த்தோம். இந்தக் கட்டுரையில் மனித உயிரனங்களை ஆட்டிப் படைக்கும் பணம், பதவி, புகழ் இவற்றையெல்லாம் விடக் காதல் மேன்மையான உணர்வு என்பதை எப்படித் தனது பாடல்களில் வடித்துள்ளார் என்று காணலாம். உலக மக்கள் அனைவரும் போற்றும் மிக உயர்ந்த உன்னத உறவு தாயுறவு. காதல் அந்தத் தாயுணர்வையும் கடந்தது என்பதை இப்படிச் சொல்கிறார் கவிஞர். […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம்

Filed in இலக்கியம், கதை by on December 5, 2013 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம்

முன்குறிப்பு: ஆங்கிலத் தொலைக் காட்சித் தொடர் “24” பார்த்திருப்பீர்கள். அதனை அடியொற்றித் தமிழில் ஒரு தொடர்கதை எழுதலாமென்ற யோசனை இன்று காலை படுக்கையை விட்டெழும் பொழுது தோன்றியது. உடனே செயல்படுத்தத் துவங்கினோம். அந்த ஆங்கிலத் தொடரில் வருவது போல், இந்தக் கதையில் நடக்கும் சம்பவங்கள் நிஜ மணித்துளிகளில் (Real-time) நடந்தேறுகிறது. அதைவிடுத்து வேறெந்த விடயமும் அந்தத் தொடரைப் பார்த்து எழுதப்பட்டதல்ல என்பதை இப்பொழுதே உறுதிமொழியாய் உரைக்கின்றோம். திங்கட் கிழமை காலை 8.00 மணி கணேஷ் – நம் […]

Continue Reading »

காதலும் காமமும்

Filed in இலக்கியம், கவிதை by on December 5, 2013 0 Comments
காதலும் காமமும்

காதல்
கட்டிய சேலை சற்றே விலகினால்
காதில் சொல்லித் திருத்தச் செய்யும்!

காமம்
கண்ணில் கண்ட பெண்களை எல்லாம்
காந்தர்வமாய் துகில் உரிந்து மெல்லும்!

Continue Reading »

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி 2

Filed in இலக்கியம், கட்டுரை by on December 5, 2013 0 Comments
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி 2

புலம்பெயர்ந்தோர் கவிதைகளின் வடிவம் (பகுதி 1) கற்பனையாலும் உணர்ச்சியாலும் உந்தப்பட்டுக் கவிதைகள் பிறக்கின்றன. உலக மொழிகள் எல்லாவற்றிலும் கவிதைகள் உண்டு. கவிதைக்கு மூல காரணமாகக் கற்பனை அமைகின்றது. கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதுகின்ற போது அதனை வடிவமாக வெளிக்காட்டி கவிதை என்ற பெயர் சூட்டி அழகு பார்க்க மொழி துணை செய்கின்றது. மனிதர்கள் எல்லோருமே கற்பனையில் சிறந்தவர்கள். ஆனால் எல்லோரும் கவிதை எழுதுவோரல்லர். அதேபோல் கற்பனையுடன் எழுதப்படுபவை எல்லாமே கவிதை ஆகிவிடுவதுமில்லை. கவிதைக்கு உடல், உள்ளம், […]

Continue Reading »

சமுதாயத்தில் பெண்களின் நிலை

சமுதாயத்தில்  பெண்களின்  நிலை

ஒரு நாட்டினுடைய வளர்ச்சியை, அந்த நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் கல்வி அறிவு இவைகளே நிர்ணயிக்கின்றன. இவற்றில் பெரும்பங்கு பெண்களையே சாரும்.  ஏனெனில் பெண்களின் கல்வியறிவு அவர்தம் குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். பெண்களுக்கு என்று பாதுகாப்பின்மை, மற்றும் கல்வியறிவு இல்லாத நிலை மட்டுமே அவர்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் காரணிகள்.  இந்தியாவில் மட்டும் பெண்களின் கல்வியறிவு என்பது கைக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது.  ஏனென்றால் நம் இந்திய தேசம் பெரும்பாலும் கிராமப்புறங்களால் […]

Continue Reading »

கிறிஸ்துமஸ் – அன்னை பூமியிலும், அந்நிய பூமியிலும்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 5, 2013 4 Comments
கிறிஸ்துமஸ் – அன்னை பூமியிலும், அந்நிய பூமியிலும்

வருடந்தோறும் திசம்பர் திங்கள், 25ம் தேதி உலகமெங்கும் கொண்டாடப் படும் பண்டிகை கிறிஸ்துமஸ். ஏசுக் கிறிஸ்துவின் பிறந்த நாள்தான் கிருஸ்துமஸாகக் கொண்டாடப் படுகிறது. கிறிஸ்து ஜெயந்தி என்று கூடச் சொல்லலாம். விவிலியத்தில் (Bible ) சொல்லப்பட்டுள்ள காலத்தை வைத்து, அன்றுதான் இயேசு கிறிஸ்து பிறந்திருக்கக் கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. அதேபோல் இன்றும், இந்த நாளில் ,ஒவ்வொரு இல்லத்திலும், உள்ளத்திலும் இறை இயேசு வந்து பாலனாகப் பிறக்கிறார் என்ற நம்பிக்கை அனைத்து கிறிஸ்தவரிடமும் புரையோடிக் கிடக்கிறது. உள்ளம் […]

Continue Reading »

மினியா போலிசு குளிர் – ஈரோடு தமிழன்பன்

Filed in இலக்கியம், கவிதை by on November 5, 2013 0 Comments
மினியா போலிசு குளிர் – ஈரோடு தமிழன்பன்

சூரியன் ஈரத்தில் சொதசொதத்து
ஊருக்குள் நுழைகிறான்
பறவைகளின் கனவுகளுக்குள்ளோ
பாடல்களுக்குள்ளோ
வெப்பமான ஓரிடம் கிடைக்குமோ?

Continue Reading »

ad banner
Bottom Sml Ad