இலக்கியம்
மோகத்தைக் கொன்றுவிடு !!
ஆயிரம் படித்தும் ஆவது அறிந்தும்
ஆலயம் புகுந்தும் ஆன்மிகம் உணர்ந்தும்
ஆசையை மனதில் ஆறாது செய்வது
ஆண்களின் வாழ்வில் ஆகாத செயலோ?
காணுமிடம் எங்கெங்கும் கன்னியரின் கோலம்
காட்சிப் பிழையோ இல்லை கருத்துப்பிழையோ?
காலங் கடப்பினும் கருவளையம் தோன்றிடினும்
காமக் களிப்பது கருத்துவிட்டு அகலாததேனோ?
அ முதல் ஃ வரை …!
அ- அதிசயிக்க மறந்துவிட்டேன் அதிசயமே நீ என்பதால் ஆ- ஆர்ப்பரிக்க மறந்துவிட்டேன் அலைகடல் நீ என்பதால் இ- இரவை ரசிக்க மறந்துவிட்டேன் என் நிலவே நீ என்பதால் ஈ – ஈகை செய்ய மறந்து விட்டேன் ஈகையின் இருப்பிடம் நீ என்பதால் உ- உலகைக் காண மறந்துவிட்டேன் என் உலகமே நீ என்பதால் ஊ- ஊஞ்சலில் ஆட மறந்துவிட்டேன் என் தென்றல் நீ என்பதால் எ- எழுதுகோலைப் பிடிக்க மறந்துவிட்டேன் என் இறகு நீ என்பதால் ஏ- […]
கவிதையாய் நீ ….!!
சேமித்த காதலின் சிதறல்களாய் நீ …. கண்ணீர்க் குவளைகளின் கதறல்களாய் நீ …. எண்ண ஓட்டத்தின் சிறகுகளாய் நீ …. நினைவு அலைகளின் சின்னமாய் நீ …. ஆசைக் கடலின் ஓடமாய் நீ … கனவு ஆலையின் உறைவிடமாய் நீ….. கற்பனை ஊற்றின் பிம்பமாய் நீ ….. என்றுமே எந்தன் காதலாய் நீ ….!! – உமையாள்
கவிதைக்காக கவிதை
பரவசத்தில் தோன்றுமதைப் பற்பல எண்ணங்களோடு பக்குவமாய் ஒப்பிட்டு இயல்பாகவெழுதுவதே கவிதை! கவிதையென நினைத்து கனவில் தோன்றுவதையெலாம் யாருக்கும் புரியாமல் பாருக்குமொழிவதல்ல கவிதை..! முழுதும் படித்தாலும் முடிந்தவரை முயன்றாலும்-‑_ புரியாத கருத்தைப்பலர் அறியாதசந்தமென எழுதுகின்றார்..! அடுக்கான வார்த்தைகளை மிடுக்காக ஒன்றருகிலொன்றாக அள்ளியடுக்கி வைத்ததினாலன்றி அருங் கவிதையாகிவிடுமா?.. உலகிலில் அனைத்துக்குமோர் உருவமுண்டு…அதுபோல அகரமுதல எழுத்தனைத்துக்கும் அழகான கவிதைவடிவமுண்டு எதுகைமோனை நயத்தோடிசைபோல எளிதாய்விளங்கும் பொருளோடு சிந்தனைஊற்றில் பெருக்கெடுத்து சிறப்பாயெழுவதே கவிதையாகும் இயல்பாகவெழும் சிந்தனையோடு இறையருள் கொண்ட எழுத்தின் எழுச்சியேயொரு செந்தமிழ்க்கவிதையின் சிறப்பாகும்! […]
தந்தையெனும் உறவு
செல்வமெனக் குழந்தை ஜனித்த பொழுதில் சொல்ல வார்த்தையின்றி உருகிய உள்ளம்! செல்லச்சேய் கரங்களில் தவழ்ந்த பொழுதில் மெல்லப் பூத்திட்ட விழிநீரில் பெருமிதம்! தந்தை எனும் பொறுப்புயர்வு அடைந்ததும் சிந்தை எலாம் குழந்தை நினைந்து நிந்தை எலாம் புறந்தள்ளி உழலும் விந்தை பலபுரிந்து நிற்கும் நற்சொந்தம்! தான் காணப் பெறாத உலகத்தை வான் ஏறித் தொடாத உச்சத்தை சான்றோனாய்த் தன் பிள்ளை அடைந்து மாண்புற வேண்டி ஏங்கும் நெஞ்சம். நடை பயின்ற தளிர் பருவத்தில் கடை விரல்பிடித்துப் […]
கிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong)
மினசோட்டா மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தாளிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கிழக்காசிய – முக்கியமாக தாய்லாந்து, வியட்னாம், கம்போடிய – மலையகவாசிகளாகிய மங் (Hmong) மக்களையும், சீனாவையும் இணைக்கும் மீ-கொங் ஆற்றோர உணவுகளைப் பரிமாற வரவேற்கிறது செயிண்ட் பால் நகர சிறிய மீ-கொங் பகுதி. இந்தப்பகுதி ஃப்ராக் டவுன் (Frogtown) என்றும் அபிமானிகளால் அழைக்கப்படுகிறது. எச்சில் ஊறும் பல்வகை கிழக்காசிய உணவகங்கள் பல்கலைக்கழக வீதி (University Avenue), குறுக்கு வீதிகள், வடக்கு டேல் (Dale North st.) […]
பாதுகாப்பான நீச்சல் முறைகள்
வட அமெரிக்காவில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. இனிக் குழந்தைகளும் பெரியவர்களும் குதூகலமாகப் பொழுது போக்கும் ஒரிடம் நீச்சல் குளங்கள். குறிப்பாக மினசோட்டா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும், ஒன்ராரியோ மாகாணத்திலும் ஏரிகள் ஆறுகள் பலவுண்டு. இங்கெல்லாம் விரைவில் கூட்டம் நிரம்பி வழியும். நீச்சல் சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்லாது உடல் நலம் பேணும் சிறந்த பயிற்சியாகவும் அறியப்படுகிறது. எனினும் மற்ற விளையாட்டு, உடற்பயிற்சியை விட நீச்சல் சற்று அபாயகரமானது. எனவே நீச்சலில் பாதுகாப்பாக ஈடுபடுதல் அவசியம். குழந்தைகளும், சிறுவர்களும் குளத்து நீரில் […]
வயலின் மேதை திரு. வி.வி.முராரி அவர்களின் இசை மழை
கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள், மினசோட்டா மாநிலம், மெடினா நகரிலுள்ள தேவுலப்பள்ளி இல்லத்தில் வயலின் மேதை திரு. வி.வி. முராரி அவர்களின் வயலின் இசை மழை பொழிந்தது. கர்நாடக இசை மும்மூர்த்திகளின் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீஷிதரின் “சித்தி விநாயகம்” கீர்த்தனையோடு களை கட்டியது கச்சேரி. தனது துரிதமான நடையினாலும் அபரிதமான மேல் கால ஸ்வரங்களுடன் கூடிய ஆலாபனையோடு “ஷண்முகப்ரியா” ராகத்தில் ரசிகர்களைக் குதூகலத்துடன் வரவேற்றார் வித்வான் முராரி, இதைத் தொடர்ந்து வந்தது நாத […]
நிச்சயமாய் வந்துசேரும் !!
வானில் பறக்கும் விஞ்ஞானிக்கும் வனத்தில் திரியும் மெய்ஞ்ஞானிக்கும் தானில் என்றலையும் தருக்கருக்கும் தனக்கென ஒன்றிலாத் தவமுனிக்கும் ஆலயம் வழிபடும் அன்பருக்கும் அங்கொன்றும் இலையெனும் அனைவருக்கும் பாலமாய்ச் செயல்படும் பண்பாளருக்கும் பலமாய் வெடிவைத்தே தகர்ப்போருக்கும் நாட்பல கடந்திடினும் நினைப்போருக்கும் நன்றியில் பழையதை மறப்போருக்கும் சீரிய வாழ்வினில் திளைப்போருக்கும் சிரிப்பது போதுமென்று இருப்போருக்கும் வாழிய எனப்பாடும் நல்லவருக்கும் வளமெண்ணிப் பொறையுறும் அல்லவருக்கும் மாளாமல் செல்வங்கள் சேர்த்தோருக்கும் மகவுக்குப் பாலில்லா வறியவருக்கும் காலங்கள் கடந்திட்ட முதியோருக்கும் கட்டுடல் மாறிடாக் காளையருக்கும் மாறாமல் […]
கிராமத்துக் காதல் ….!!
ஏருபுடிச்ச மச்சானே ! மனசுல காதலை வெதைச்சவரே ! இந்தப் பூங்குயிலை ஏரெடுத்துப் பார்த்திடுங்க … பொத்தி வெச்ச ஆசையிங்கே அருவியா கொட்டு்துங்க…. ஒங்க நெனப்பில் மச்சானே துவச்ச துணியைத் தான் துவச்சேனே… இதுதான் சாக்குன்னு …என்னாத்தா வாயார திட்டித்தீர்த்தாளே … புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு சொன்னாளே… பேதலிச்சது புத்தியா? மனசா ? எல்லாமறிஞ்ச மச்சானே சட்டுனுதான் சொல்லிடுங்க … வெரசா வாரேனு சொல்லிப் போனீக வருசம் மூணாச்சு ! எங்கழுத்தில் தாலி ஒன்னைக் கட்டிடுங்க குலசாமியா […]






