இலக்கியம்
ஸ்திதப் பிரக்ஞன்
இந்த சமஸ்கிருத வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டது, சமீபத்தில் மறைந்த திரு. சோ ராமசாமி அவர்கள் முன்னாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து 1990 களில் எழுதிய கட்டுரையில்தான். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று புரிந்திராத காலமது. சோ அவர்கள் மொரார்ஜி தேசாய் குறித்து எழுதுகையில், இந்த வார்த்தையில் பொதிந்துள்ள பல தத்துவார்த்தப் பொருட்களை விளக்கியிருப்பார். அவற்றில் ஒன்று, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்சி பாவத்தில் பார்த்திருந்து, நடுநிலைமையில் மட்டுமே […]
கிறிஸ்மஸ் கிஃப்ட்
வழக்கம்போல காலை ஐந்தரை மணிக்கு அலாரம் தலையில் சம்மட்டி போல் அடிக்க, போர்வையை விலக்கி விட்டு எழுந்தான் கணேஷ். திரை நீக்கித் திறந்திருந்த ஜன்னலின் வெளியே பார்க்க, இன்னும் கும்மிருட்டு நிரம்பியிருந்தது. ”யப்பா, இன்னிக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போனாப் போதும், கிறிஸ்மஸ் நியூ இயரோட சொந்த லீவையும் சேத்து பத்து நாள் எங்கயும் போக வேண்டாம்”.. சிறு குழந்தை போல விடுமுறையை நினைத்துக் கொண்டே குளியலறை நோக்கிச் சென்றான். பல் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்தால் […]
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் !!
வைகறைப் பொழுதினிலே வான்திறக்கும் முன்னமேயே
வைத்திருந்த நீரதிலே வாசலையும் தெளித்தெடுத்தே
வைப்பதற்குப் பூசணியும் வரைந்தெடுத்த மாக்கோலமே
வையமனைத்திற்கும் மார்கழி வந்ததனைச் சொல்லிடுதே !!
ஓசோன் துளை
புறஊதாக் கதிரால் ஆகுமாம்
ஓசோன் படலம்
அக்கதிரால் சிதைவும் அடையுமாம்
ஓசோன் படலம்
மின்சாதனப் பொருளால் வருமாம்
குலோரோ சேர்மம்
செல்வி . ஜெயலலிதா ஜெயராம்
‘புரட்சித் தலைவி’, ‘அம்மா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்த தமிழக முதல்வர், செல்வி ஜெயலலிதா ஜெயராம், உடல் நலக் குறைவா ல் இம்மாதம் (டிசம்பர்) ஐந்தாம் தேதி காலமானார். அன்னாரது மறைவுக்கு, பனிப்பூக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக, உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தாலும், அவரது போராடும் வைராக்கிய குணத்தினால் காலனை வென்று, மீண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் அவரது மரணம் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. […]
பிளாஸ்டிக் அரிசி
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டிருந்தாலும் மீண்டும் சில நாட்களாகச் செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் தலையெடுத்திருக்கும் ஒரு விஷயம் கலப்பட அரிசி. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒன்றும் புதிதல்ல என்று தோன்றும்; அரிசியில் கல்லும், மண்ணும், மற்ற தானியக் கழிவுகளும் இன்னும் பல அருவருக்கத்தக்க பொருட்களும் கலப்பது பல வருடங்களாக நடைபெறும் ஒரு விஷயம் என்றும் தோன்றும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் கலப்படம் செய்யும் பொருள் மாறியுள்ளது. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அரிசியில்லை. […]
ஏ புள்ள……!!!
கஞ்சிக் கலயம் கொண்டு கடைக்கண்ணால் எனைக் கட்டி இழுத்துக் கொண்டு களத்து மேட்டில் நடந்து வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….! கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை களவாடியவளே வழியில் கள்ளர் பயமிருந்தால் சொல்லு புள்ள கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக வழித் துணையாக நானும் வாறேன் புள்ள …! கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே பூட்டி வைச்சு….. கருமேகக் கூட்டம் வருமுன்னே விரசா வீடு வந்து […]
கதவடைப்பும் கழுமரங்களும்
1996. “வீணாப்போனவங்க. இப்பிடி பண்ணிட்டாங்களே…”அங்கலாய்த்தபடி தொழிற்சங்க அலுவலகத்துக்குள் பிரவேசித்த விஜயன் காலியா யிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமியின் முகத்திலும் கலவரச்சாயல் படிந்திருந்தது.கவலையால் ஏற்கனவே கருத்திருந்த முகம் மேலும் கறுப்பாகியிருந்தது. “எல்லாம் மொதலாளிங்க பாத்து செய்ய வேண்டியது.இப்ப பாரு எல்லாத்துக்கும் பிரச்சினை” என்றார். “ஆமாங்கண்ணே.வேலூர் சிட்டிசன் வெல்பேர் அசோசியேஷன் தான் கேஸ்ஸ ஃபைல் பண்ணியிருக்காங்க.அவங்க பார்வைல இது சரி தான்.ஆனா நம்ம வயித்து பொழப்பப்பத்தி நெனச்சி பாத்தாங்களா இல்லையான்னு தான் தெரியில”. ”எல்லாஞ் […]
என் பார்வையில் இசை மேதை பாலமுரளி
திரு BMK என்ற இசை இமயத்தைப் பற்றிப் பேசவோ எழுதவோ எனக்கு ஞானமும் தகுதியும் கிடையாது. ஆனாலும் அவர் மேல் கொண்ட பக்தியும் ரசிக உத்வேகமும் என்னை இவ்வரிகளை எழுத தூண்டுகின்றன. நான் BMK அவர்களின் பரம ரசிகர்களைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவள். லால்குடி பரம்பரை பாலக்காடு மணி பரம்பரை என்பது போல BMK யின் ரசிக பரம்பரை, பெருமையும் தனித் தன்மையும் வாய்ந்தது ஆகும். தேனில் மூழ்கி எழுந்த குரலின் கம்பீரம், கிருதிகளை வழங்கும் பாங்கு, […]
அறிந்தும் அறியாமலே….!!!
உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உன் நினைவைச் சுமந்த ஞாபகங்கள்
இரவிலும் விழித்திருக்கும் என்பதை
உணர்ந்தாயோ?
கட்டழகு மேனியில் கரைந்த பொழுதையும்
கள்ளச்சிரிப்பில் உறைந்த கனத்தையும்






