\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2

Filed in இலக்கியம், கட்டுரை by on November 29, 2015 1 Comment
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2

(எங்கேயும் எப்போதும் MSV  – பகுதி 1) ஜாஸ் (Jazz) என்பது ஐம்பதுகளின் மத்தியில் பிரபலமடையத் தொடங்கிய ஒரு இசை வடிவம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வியல் இசையாகக் குறிக்கப்படும் இது பல உட்பிரிவுகளைக் கொண்டு விளக்குவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும் ப்ளூஸ் (Blues) எனும் பிரிவின் படி மனித வாழ்வியலில் இழையோடும் சோகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பிரபலமடையத் தொடங்கியது. அக்காலங்களில் இங்கு சவ ஊர்வலங்களில் இவ்வகை இசை […]

Continue Reading »

கண்மாய்க் கரையும் களத்து மேடும்

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 4 Comments
கண்மாய்க் கரையும் களத்து மேடும்

இலையுதிர் காலம் வந்தால் மினசோட்டாவில் பெரிதும் கொண்டாடப் படுவதில் ஒன்று இயற்கை காட்டும் வண்ண விளையாட்டு. மற்றொன்று ஆங்காங்கே நடத்தப்படும் அறுவடைக் கொண்டாட்டங்கள். வைக்கோல் கட்டுகளைத் திறந்த வண்டியில் அடுக்கி அதன் மீது அமரச் செய்து ஊர்வலம் கொண்டு செல்லும் வைக்கோல் சவாரி (Hay Ride) மற்றொரு புறம். பரங்கிக்காய்களை அறுவடை செய்து ஆங்காங்கே கிடத்தி விளையாட வைக்கும் பரங்கித் திட்டுகள் (Pumpkin Patch) இன்னொரு புறம். இந்தக் கொண்டாட்டத்தை எனது பிள்ளைகளோடு சென்று கண்டு களித்த […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15) போரினால் விளைந்த அவலங்கள் – 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழயுத்தம் தீவிரமடைய தொடங்கியபோது, ஆரம்பத்தில் அது பல்லாயிரக்கணக்கானோரை வெளிநாடுகளுக்குப் புலம்பெயர வைத்தது. தேசங்கள் தோறும் சிதறிஓட வைத்தது. இந்தப் புலம்பெயர்வு ஆரம்பத்தில் பணவரவினூடான வாழ்வினைத் தந்தாலும் காலப்போக்கில் வலியைத் தரத்தொடங்கியது. ஈழத் தமிழரின் அன்றாட வாழ்வில் யுத்தம் பெருமளவிலான பாதிப்பினை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது அங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உடன் பிறப்புக்கள், உறவுகள் மீதும் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கி […]

Continue Reading »

சுய மரியாதை

Filed in இலக்கியம், கதை by on October 25, 2015 6 Comments
சுய மரியாதை

மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து ஏதோ பர பர வென்று இருந்தது உதயாவிற்கு. பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரம் ஆகி விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர்களைச் சென்று அழைத்து வர வேண்டும். அவளது கணவன் பரத் அன்று சீக்கிரம் வருவதாகச் சொல்லி இருந்தான். வீட்டின் வேலைகாரம்மா அன்பு அன்று நேரம் கழித்து வந்து அப்பொழுதுதான் வீட்டை சுத்தம் செய்து துடைத்துக் கொண்டு  இருந்தாள். தன்னுடைய அலமாரியில் புடவைகளை அடுக்கி […]

Continue Reading »

ஆப்பிள் – கொய்யவும், கொறிக்கவும்

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
ஆப்பிள் – கொய்யவும், கொறிக்கவும்

ஆப்பிள் என்று சொல்லிவிட்டு, சாப்பிடும் ஆப்பிள் என அழுத்திச் சொல்லும் காலத்தில் இருக்கிறோம். இது சாப்பிடும் ஆப்பிளைப் பற்றிய கட்டுரை. ஆதாம் ஏவாள் தான் உலகின் முதல் மனிதர்கள் என்றால், ஆப்பிள் தான் முதல் பழம். ஒரு பவுண்ட் ஆப்பிள் – வகையைப் பொறுத்து ஒரு டாலரில் இருந்து கிடைக்கிறது. ஒரு அவகடோ, கிட்டத்தட்ட ஒரு டாலர். ஒரு மாதுளை, கிட்டத்தட்ட இரண்டு டாலர். கொய்யா – வகையைப் பொறுத்து பவுண்ட் இரண்டில் இருந்து ஐந்து டாலருக்கு […]

Continue Reading »

மினசோட்டா மக்கள் அறிகுறி

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
மினசோட்டா மக்கள் அறிகுறி

உங்கள் பக்கத்து ஐஸ்கிரீம் கடை செப்டெம்பர் மாதத்திலிருந்து அடுத்த மேமாதம் வரை மூடியிருந்தால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் சில சமயம் ஷாட்ஸ் போட்டுக் கொண்டு ஜாக்கட்டு அணிந்து ஒரே தரம் வெளியே போய் வரப் பாவித்தீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்கள் பயணங்களை மணித்தியாலக் கணக்கில் மாத்திரமே ஒப்பிடுவீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்களுக்குத் தெரியாதவர் தவறாகத் தொலைபேசியில் அழைத்தும் பலமணி நேரம் முகம் முறிக்காது பேசியுள்ளீர்கள் ஆனால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக […]

Continue Reading »

காமத்தின் தொடக்கம்

Filed in இலக்கியம், கவிதை by on October 25, 2015 1 Comment
காமத்தின் தொடக்கம்

அமிழ்து ஊறித் ததும்பும் அதரங்கள்
அன்பு எனும் ஊற்றின் பிறப்பிடம்
அழகாய் விரிந்து ஓடிய ரேகைகள்
அற்புதம் தீட்டிய கோலங்கள் அறிவீரோ?

செயற்கைச் சாயப் பூச்சாய் இருப்பினும்
செழிப்பான இயற்கைக் கோலம் எனினும்
செக்கச் சிவந்ததோ செரிய கருமையோ
செல்வோரை வலியத் திருப்புமென அறிவீரோ?

Continue Reading »

நிலாவரை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
நிலாவரை

யாழ்ப்பாணத்தில் உள்ள  நவக்கிரி கிராமத்திற்கு அருகில் அமையப் பெற்று உள்ள நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு என மக்கள் நம்புகின்றனர். நிலாவரையில் ஒரு எலுமிச்சங் காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில் மிதக்கும் என்றனர். இது சதுரக் கேணி போன்று அமைந்து பயத்தை தரக் கூடிய வகையில் கருமை படர்ந்த நிறத்தோடு கூடிய தண்ணீரைக் கொண்டது. ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள் பலர். இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது. கி. பி. 1824 இல் சேர் […]

Continue Reading »

ஆட்டிஸம்

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 3 Comments
ஆட்டிஸம்

வாழ்க்கையில் இதற்கு முன் கேட்டிராத வார்த்தை… கேட்ட முதல் முறை எனக்குத் தோன்றிய உணர்வு, “இது கடைசி முறையாக இருக்காது என்பதே”…  புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே, ஆனாலும் கற்றுக் கொண்டு சாவதானமாய் அடுத்த விஷயத்திற்குப் போய்விடும் ஒரு வார்த்தையல்ல “ஆடிஸம்” என்பதை நானும் எனது மனைவியும் மிகவும் விரைவிலேயே உணர்ந்தோம். எங்களின் வாழ்வின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், இரண்டறக் கலக்கவிருக்கும் ஒரு வார்த்தை, ஒரு வாழ்க்கை என்பதை முதல் முறையாகக் கேட்கையில் […]

Continue Reading »

மினசோட்டாவின் கதை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
மினசோட்டாவின் கதை

ஏறத்தாழ ஒரு மில்லியன் வருடங்களிற்கு முன்னர் இருந்து மினசோட்டாவின் கதையை ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் பூகோளத்தின் கால் பகுதியைக் கவர்ந்து காணப்பட்டது. இதுவே ஆழ்ந்த உறைபனியின் வடதுருவம் மாத்திரமல்ல அதன் வட நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளும் மூடப்பட்டிருந்தது. இக்காலம் பனியுகம் எனப்படும். அக்காலத்தில் வடதுருவமானது பலதட்டுப் உறை பனிப்பாறைகளினால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன. அதன் பின்னர் பனியுருகி நீர்த்தேக்கங்களும்,காடுகளும், விலங்குகளும் செழித்தன. ஆயினும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளின் ஆழ்ந்த உறைபனி மீண்டும் திரும்பி உயிர்த்த யாவற்றையும் குளிரில் உறைத்து […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad