\n"; } ?>
Top Ad
banner ad

கட்டுரை

பேச்சே எங்கள் மூச்சு

பேச்சே எங்கள் மூச்சு

உலகத்தில் ஏறத்தாள 77 மில்லியன் மக்களால் பல வட்டார வடிவங்களில் தமிழ் பேசப்படுகின்றது. காலம், புவியியல், மதம், சாதி போன்ற பல்வேறு காரணிகளினால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமிழ் பல்வேறு முறைகளில் உச்சரிப்பு மாற்றத்துக்கு உள்ளாவதை வட்டார வழக்கு என்கிறோம். எங்கள் தமிழ் மொழிக்கென்று மிகச் சிறந்த இலக்கண நூல்கள் உள்ளன. தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தினை அவை எமக்குத் தருகின்றன. தமிழை எப்படிச் சரியாக எழுதுவது? எப்படிச் சரியாகப் பேசுவது? என்ற […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13) எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் புலத்தில் எந்தவிதமான சிக்கலுமின்றி உறவுகளுடன் வாழக்கூடிய சூழல் இருந்திருந்தால் புலம்பெயரும் தேவை இருந்திருக்காது. யுத்தம், உழைப்பு ஆகியன ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க, சமூகத்தில் தானும் உயர்வான நிலையினை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் பல இளைஞர்கள் கடல் கடந்து சென்று பணம் பெருக்கி வாழ்ந்தனர். ‘அகதி’ என்ற பதிவுரிமை பெற்றபின்னர் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம் எனக் கனவுகளுடன் அலைந்தனர். “அகதியென்று ஆன பின்னால் ……………………….. ‘ஐம்பதால் […]

Continue Reading »

பழமொழிகளும் மரபுத் தொடர்களும்

பழமொழிகளும் மரபுத் தொடர்களும்

மொழி என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் இயல்புடையது. தலைமுறை தலைமுறையாக இயற்கையுடன் பின்னிப் பிணைந்த நிலையில் அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பேசப்படும் அனுபவ மொழிகளின் தொகுப்பினை நாம் பழமொழிகள் என்று அழைக்கிறோம். அதுபோல தொன்று தொட்டு மரபு பிறழாமல் ஒரு பண்பாட்டினரின் நடைமுறை வாழ்வியலில் உள்ள சொற்களின் திரட்சியை மரபுத் தொடர்கள் என்கிறோம். சிலர் இவை இரண்டுக்குமான வேறுபாட்டை உணரத் தவறுகின்றனர். சிலரோ பழமொழிகள் மற்றும் மரபுத் தொடர்கள் என்பன வழக்கிழந்துவிட்ட மொழிகள், எனவே […]

Continue Reading »

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

இரு வாரங்களுக்கு முன்னர், ஏப்ரல் 8 ஆம் திகதி, தமிழ் எழுத்துலகச் சூரியன் ஒன்று அஸ்தமித்தது. தமிழ் எழுத்துலகில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் பற்பல சூரியன்கள் ஒளிர்ந்து பிரகாசமுறச் செய்தன என்பது நாமறிந்ததே. எனினும், ஒவ்வொரு சூரியனுக்கும் ஒவ்வொரு விதமான ஒளிக்கிரணங்கள்  உண்டென்று , அதன் ஒளிக்கிரணங்களினால் அனுதினமும் மலர்ச்சியுறும் தாமரை போன்ற தமிழ் நெஞ்சங்களுக்கு அத்துபடி.   தனது நிலவுலகப் பயணத்தைச் சமீபத்தில் முடித்துக் கொண்ட, ஒப்பாரும் மிக்காருமற்ற, இன்னொரு ஒளிக்கிரணம், ஜே.கே. என்று சமகாலத்தவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12) அந்நிய மனோநிலை உணர்வு புதிய உணர்வு நிலைகளும் அந்நிய மொழியின் ஆதிக்கமும் தமிழ்க் கவிதை மரபில் சில மாற்றங்களை விளைவிக்கத் தொடங்கி விட்டன. மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களில் அதிகமானவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப் பட்டனர். எம்மவர்களின் நாளாந்த வாழ்க்கை மேலைத்தேச நாட்டினர் போல் அமைந்ததல்ல. சமூகப் பொருளாதார ரீதியாகக் குடும்ப உறவுகளுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை எமக்குத் தனித்துவமானது. ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நாட்டில் முற்றிலும் புதிதான ஒரு வாழ்வியற் […]

Continue Reading »

மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்

மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்

‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று உலகோரைத் தன் கம்பீர வெண்கலக் குரலால் சுண்டியிழுத்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார்! தமிழகத்தில், 1925ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ம் நாள், ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் முஹம்மது இஸ்மாயில், மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நாகூர் ஹனிஃபா. இவரது இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனிஃபா. தனது இயற்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிஃபா என்று வைத்துக் கொண்டார். அவரது தந்தையின் பூர்விகமான நாகூர் சேர்ந்து கொள்ள நாகூர் ஹனிஃபா என்ற பெயர் பிரபலமடையத் […]

Continue Reading »

சர்வம் தண்ணீர் ம(மா)யம்

சர்வம் தண்ணீர் ம(மா)யம்

இந்தத் தலைப்பைப் பார்த்துட்டு நான் ஏதோ பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமான திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஜம்பு லிங்கம் என்கின்ற அப்புலிங்க சுவாமியைப் பற்றி எழுதப்போறேன்னு நெனச்சா அது என் தவறல்ல. நான் சொல்லப்போவது ஒன்றும் புதிதல்ல. இது எங்க பாட்டன் G.T நாயுடு காலத்திலேயே கண்டுப்பிடிக்கப் பட்டதுதான். ஆனா இப்ப சமீப காலமாப் பார்த்தீங்கன்னா, ஜப்பான்ல அடுப்பில்லாமல் போண்டா சுட்டதாகவும் ,பாக்கிஸ்தான்ல பருப்பில்லாமல் சாம்பார் வச்சதாகவும் பீத்திக்கிறாங்க. அதாங்க தண்ணீர்ல தேர் (CAR) […]

Continue Reading »

தமிழனென்று சொல்லடா – கவிமணி

தமிழனென்று சொல்லடா – கவிமணி

”தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாரதியின் வரிகளைப் பின்பற்றி, நம்மைத் தலை நிமிர்ந்து வாழவைத்த இன்னொரு தமிழ்ப் பெருந்தகை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையாகும். பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா! சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா ! கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங் கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா! […]

Continue Reading »

புனித வெள்ளி

புனித வெள்ளி

கிறிஸ்துவ மறை நெறியில் தவக்காலம் மற்றும் புனித வாரம் சேர்த்து 46 நாட்கள் மிகவும் முக்கியமான காலம். இயேசுநாதருடைய தியாகம்,  பிறருக்காக வாழ்தல் போன்ற  நற்பண்புகளை அனைவரும் கடைபிடிக்கவும், ஒவ்வொரு கிறிஸ்துவரும் தன்னுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தனிமனித சுயபரிசோதனை  செய்து கொள்ளவும்,  நிதானமான ஆன்மீகச் சிந்தனை  மற்றும் அதற்கான செயல்வடிவம் கொடுக்கவும் உகந்த நாட்களாக இந்தத் தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது. சாம்பல் புதன் அல்லது விபூதி புதன்  (Ash Wednesday) தவக்காலத்தை விபூதி புதன் அன்று கிறிஸ்தவர்கள் […]

Continue Reading »

அகத்தின் அழகு

அகத்தின் அழகு

உலகில் உள்ள ஜீவராசிகளில் மனிதன் தான் வெளித்தோற்றத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறான். இன்பத்தை அடைய எல்லாருமே ஒருவிதத்தில் அல்லது பலவிதத்தில் முயன்று கொண்டு இருக்கிறோம். அனால் வேதங்களோ, நாம் ஆனந்தத்தாலே உருவாக்க பட்டவர்கள். மாயை மறைப்பதால் அதை உணராமல் உடலோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம் என்று சொல்கிறது. அதை அப்படியே நம்பச் சொல்லவில்லை, அப்படிச் சொல்லும் நிலையிலும் நான் இல்லை. அனால், அதில் அறிவியலுடன் கலந்து ஆராய்ந்து பார்போம். “இது என் கை” என்று நான் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad