இலக்கியம்
முக்தி
கோவிந்த ராஜய்யரின் கவலையெல்லாம் ஒன்றே. சில நண்பர்களிடம் மட்டும் சொல்லி அங்கலாய்ப்பார். “பகவான் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துட்டான், ஒரு குறை இல்லாம குடும்ப ஷேமத்தைப் பாத்துண்டான்… இருந்தாலும் மனசைப் போட்டு வாட்டற ஒரே விஷயம் நேக்கு ஒரு புள்ளக் கொழந்த இல்லையேங்கறதுதான்.. நானும் லக்ஷ்மியும் என் பொண்ணு பிரபாவைப் புள்ள மாதிரிதான் வளத்தோம்.. ஆனாலும் கட்டையில போற காலத்துல அவளால எனக்குக் காரியம் செய்ய முடியாதே… புள்ள கையால காரியம் செஞ்சுக்காம பரலோகத்துல முக்தி கெடைக்கறது எப்டி?” […]
ட்ரிக் ஆர் ட்ரீட் (தந்திரமா? பரிகாரமா?)
அமெரிக்க நாடெங்கும் அனைத்துச் சிறுவர் சிறுமியரால் விரும்பிக் கொண்டாடப்படுவது ஆண்டுதோறும் அக்டோபர் 31ம் தேதி நடக்கும் ஹாலோவீன். இக்கொண்டாட்டத்தின் வரலாறு பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இந்நிகழ்வைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஹாலோவீன், அந்நாட்களில், அயர்லாந்தில், கிராமப்புறங்களில் ஒரு மதச்சடங்காக நடைபெற்று வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இன்னும் சில குறிப்புகள் இது மறைந்து போன புனித ஆத்மாக்களின் நினைவாகக் கொண்டாடப்பட்டது என்கிறது. மற்றுமொரு கருத்துப்படி இது நவம்பர் மாத முதல் இரண்டு […]
என் காவியம்
கையுயர்த்திப் பேசுகையில் மெய்வாய் மூடிக் கேட்டிருந்தேன் !! கண்விழித்துப் பார்க்கையிலோ கடைவிழிப்பார்வை விழக் காத்திருந்தேன் !! காலெடுத்து நடக்கையிலே என்வாசல் வந்திடத் துடித்திருந்தேன் !! களைமுகம் சிரிக்கையில் எனைப்பார்த்ததால் என மகிழ்ந்திருந்தேன் !! கவனமாய் அழகுதீட்ட காளையெனக்காக என்ற கனவிலிருந்தேன் !! கண்மூடித் தூங்குகையில் கனவினில் நானென எண்ணியிருந்தேன் !! கைகழுவிப் போனதனால் காவியம் பல தீட்டியவாறுள்ளேன் !!! வெ. மதுசூதனன்.
தோல்பாவைக் கூத்து
தமிழகத்தின் மிகத் தொன்மையான கலை வடிவங்களில் கூத்துக் கலையும் ஒன்று. சிறிய அளவில், குறைந்த அளவு பார்வையாளர்களைக் கொண்டு அரங்கேற்றப்பட்டு வந்த கூத்துக் கலையே பின்னர் நாடகம் , திரைப்படம் எனும் கிளைகள் தோன்றக் காரணமாக அமைந்தது. கிளைகளாகத் தோன்றிய நாடகக் கலையும், திரைக் கலையும் மிகப் பிரம்மாண்ட அளவில் வளர்ச்சியைக் கண்டாலும், அதன் ஆணி வேரான கூத்துக் கலை மட்டும் பெரிய அளவில் பாராட்டப்படாமல், கவனிக்கப் படாமல் எதோ கிராமத்து மக்களுக்காக, விழாக் காலங்களில் என்றேனும் […]
பெற்றோர்க்காக!!
அன்பில் எனை ஈன்றெடுத்து
ஆசையாய் வளர்த்தெடுத்து
இம்மையில் மறுமை சேர்த்து
ஈகையின் பெருமை வார்த்து
பயணக் கட்டுரை
சிறு வயதில் ‘கற்கண்டு’ பத்திரிகையில் லேனா தமிழ் வாணனின் பயணக் கட்டுரையைப் படித்து ரசித்ததுண்டு. பல சமயங்களில் அவரின் பயணக் குறிப்பைப் படிக்கையில் இதுபோன்ற அனுபவங்கள் நமக்கும் வருவது எந்நாள் என்று நினைத்ததுண்டு. அவரைப் போன்ற அனுபவமோ, பேரோ, புகழோ வந்திராவிடினும் ஒரு சில பயணங்கள் தந்த அனுபங்களைப் பகிரலாமென்ற எண்ண உந்துதலே இந்தக் கட்டுரையின் காரணம். நம் இந்திய நாட்டின் பலங்களில் ஒன்றான அதே சமயத்தில் பலவீனங்களிலும் ஒன்றானது உறவுகளுக்கு இடையேயான நெருக்கம். இந்த விதத்தில் […]
சுமக்கும் நினைவுகள்
தளிர்க் கரங்கள் பற்றி நின்ற
தண்மை இன்றும் நினைவை வருடுது
சற்றே ஒதுங்கிய வெண்ணிறப் பற்கள்
சடுதியில் வந்து சாகசம் புரியுது….
காலம்
இறந்த காலம் முடிந்த கதை, திருத்த முடியாது, எதிர் காலம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் நம் கையில் உள்ளது. அதனால் தான் அதை ஆங்கிலத்தில் “Present ” என்று சொல்கிறோம் – ஞானி காலம் அறிவியல் வாயிலாக பல கோணங்களில் பலமுறை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. காலத்தை துல்லியமாக கணிக்கக் கூடிய பல கருவிகள் இருக்கின்றன. நொடிப்பொழுதை கோடிப் பகுதியாகப் பிரித்து அளக்கக் கூடிய திறமையும் அறிவும் அறிவியல் மேதாவிகளுக்கு உண்டு. காலத்தைப் […]
எசப்பாட்டு – வாழ்க்கைச் சக்கரம்
இருவர் புரிந்திட்ட காமத்தின் விளைவோ?
இறைவன் அருளிய இணையிலா விதியோ?
இயற்கை ஊன்றிய இன்பமான விதையோ?
இயல்பாய் உயிரினம் ஆற்றிய வினையோ?
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8
(பகுதி-7) பிரிவுத்துயர் எண்ணற்ற சொந்தங்கள் இருந்தும் அவர்களைப் பிரிந்து யாருமற்ற அனாதைகள் போல தனிமையில் வாழ்வது தான் துயர்களில் கொடுந்துயர். புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாய், தந்தை, உடன் பிறப்புக்களைப் பிரிந்து உழைப்பு, உயிர்ப் பயம் போன்ற காரணங்களினால் புலம்பெயர்ந்தோர் சதா அதே நினைவுடன் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க மறுபுறம் மனைவி, பிள்ளைகளைப்பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாகத் தனிமையில் வாடும் கணவன்மார் மற்றும் தந்தைமார்களின் நிலையோ […]






