\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

விடைபெறும் 2017

விடைபெறும் 2017

‘காய்ந்த நிலங்கள் கருகும்; காலத்தே வெள்ளம் பெருகும்; லண்டன், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பெருவாரிநோய் பரவும்; வல்லரசு நாடொன்று போர்த் தாக்குதலால் நிலைகுலையும்; சில காலம் உலகில் நோய்கள் ஒழியும், அமைதி பரவும்; மீண்டும் போர் துவங்கும்; அரசியொருத்தியின் ரகசியங்கள் வெளிவரும்; இரண்டு முறைகள் தவறி மூன்றாவது முறை மேற்கத்திய நாடொன்று கிழக்கத்திய நாடுகளால் வீழ்ச்சியுறும்’ இந்த வரிகள், நாஸ்டிராடாமஸ் ஐநூறு ஆண்டுகளுக்கு முன், தனது ‘தீர்க்கதரிசனங்கள்’ என்ற புத்தகத்தில், 2017ஆம் ஆண்டுக்கான கணிப்புகளாக எழுதியவை. உலகில் […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 6)

Filed in கதை, வார வெளியீடு by on December 31, 2017 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 6)

( * பாகம் 5 * ) இன்று பிரேம்குமாருக்குப் படப்பிடிப்பு எதுவுமில்லை. நாளை காலையில் ஊட்டியில் இருக்க வேண்டும். ஃப்ளைட் பிடித்து கோவை சென்று, அங்கிருந்து காரில் உதகமண்டலம் சென்று விடலாம். அதுதான் அவன் பிளான். ஆனால் நந்தினியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாயிருந்தது முதலில். இப்போது அது மாறிவிட்டது. அவளாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டாள். இப்போதுதான் சூடு பிடிக்கிறது விஷயம். மனசு ஏன் இப்படிப் பறக்கிறது? . திருமணத்தை முடித்துக் கொண்டு செட்டிலாகக் […]

Continue Reading »

பூனை

Filed in கவிதை, வார வெளியீடு by on December 31, 2017 0 Comments
பூனை

காலத்தை வெல்ல வேண்டுமே ! கால்களில் காகமும் குருவியும் — காலையில் கிழக்கு நோக்கி பணிக்குப் பறக்கும் தந்தை – வேகுமோ அரிசியும் பருப்பும் வேகத்தில் நடக்கிறது சமையல் – அவகாசம் கொடுக்காத அவசரம் – வேலைக்கு நேரமாகிறதே – மேற்கே பறக்கும் தாய் – ஓ ! குட்டிப்பூனையே ! அந்தக் குழந்தையிடம் அன்பு காட்ட , பாசம் பொழிய , உன்னைத்தவிர யாரிருக்கார் இந்த பொருள்சார் உலகில் ? –         கவிஞர் டாக்டர் எஸ். […]

Continue Reading »

நியூ இயர் ரெஸொல்யூஷன்

Filed in கதை, வார வெளியீடு by on December 31, 2017 1 Comment
நியூ இயர் ரெஸொல்யூஷன்

”ஏன்னா… அடுத்த வாரம் வருஷப் பொறப்பு… என்ன ரெஸொல்யூஷன் எடுக்கறதா இருக்கேள்?..” ஏதோ பொடி வைத்துக் கேட்கிறாள் என்பதாக உணர்ந்த கணேஷ், உஷாரா இருக்கணும் என்ற உள் மனக் குரலுக்கு மதிப்பளித்து, “ஏன்.. ஏன் கேக்குற?” என்று பொதுப்படையாகக் கேட்டு வைத்தான். ”இல்லன்னா.. எல்லாரும் ஏதேதோ ரெஸொல்யூஷன் எடுத்துக்கறாளே.. அது போல நீங்களும் ஏதாவது கெட்ட பழக்கத்த விடப்போறேன்னு சொல்லுவேளோன்னு பாத்தேன்” என்றாள் லக்‌ஷ்மி. ”ஏண்டி, நோக்கு ஏன் இந்த வம்பு? நான் பாட்டுக்கு தேமேனு டி.வி. […]

Continue Reading »

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற  இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியாவின் சிறந்த வெற்றிப்பட நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்த இவர், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டவர். அவருக்கு நடிப்பும், அரசியலும் இரு கண்களாக அமைந்திருந்தன. இளமைக் காலத்திலேயே, பல நாடகக் குழுக்களில் பிரபலமாகத் திகழ்ந்தார். காந்தியடிகள்  மீதும் அவரது கொள்கைகள் மீதும் பெரிதும்  பற்றுக் கொண்டு, இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக ஈடுபட்டவர்  எம்.ஜி.ஆர். அநேக சிரமங்களுக்கிடையில் திரைப்படவுலகில் காலடி எடுத்து வைத்த எம்.ஜி.ஆர், முதல் சில படங்களுக்குப் […]

Continue Reading »

பிட் காயின் அலை

பிட் காயின் அலை

சென்ற வருடம், ஏறத்தாழ இதே சமயம், இந்தியாவில்  பலர், திருவோடு ஏந்தாத குறையாக ஏ.டி.எம்.களில் ஸ்தலவாசம் செய்திருந்தனர். ‘கேஷ்லெஸ் எகானமி’ என்ற பொருளாதாரத் தத்துவம் தலை தூக்கியது. ஒரு வேளை அப்படி நடந்துடுமோ என்று வயிற்றில் புளி கரைய, பணத்தைச் சேமிக்க, மாற்று வழி தேட ஆரம்பித்தனர் சிலர்.   சில மாதங்களுக்கு முன்பு ‘வான்ன க்ரை’ (wanna cry) எனும் ‘ரான்சம் அட்டாக்’ நடத்தியவர்கள் தாங்கள் கேட்ட மீட்புத் தொகையை கரன்சி எனும் நாணய வடிவில் […]

Continue Reading »

ஆழ்மன ஆசைகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on December 24, 2017 0 Comments
ஆழ்மன ஆசைகள்

காலையில் எழுகையில் கருத்தெலாம் கடவுள் காரிருள் குவிகையில் கனவெலாம் காதல்! வைகறை மலர்கையில் வாய்முழுக்க மந்திரம் வானிலொளி மறைகையில் வாய்த்திடும் மன்மதம்! விடிந்து எழுகையில் விதைத்திடும் ஆக்கம் விலக்கிய போர்வையில் விளைந்திடும் ஏக்கம்! பகற்பொழுது பார்க்கையில் பெண்மையொரு யாகம் படுக்கையில் இருக்கையில் பாழ்மனமெங்கும் மோகம்! மேடையில் முழங்குகையில் மேதாவியாய் வாதம் மேலாடை விலகுகையில் மேன்மையிலாக் காமம்! ஆண்களின் உள்ளமது ஆசைகளின் இருப்பிடம் ஆழ்மன அழுக்குகள் ஆராய்வது அவசியம்!! –    வெ. மதுசூதனன்

Continue Reading »

கார்ப்பரேட் கனவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on December 24, 2017 17 Comments
கார்ப்பரேட் கனவுகள்

“ரேணு. நேத்து ஒரு வரன் ப்ரோஃபைல் சொன்னேனே   அதைப் பார்த்தியா? பிடிச்சிருக்கா?” “ “ “என்னடி பதிலையே காணோம்?” “அம்மா. நீங்க முழுமையா பாருங்க எனக்கு எது ஒத்துவரும். வராது என்று நீங்க ஒரு ஐடியா வச்சிருப்பீங்க. இல்லையா? அதற்கெல்லாம் ஓகே என்றால் எனக்குச் சொல்லுங்க.. அப்புறம் நான் என் ஒபினியனைச் சொல்கிறேன்” “இப்படிப் பொத்தாம் பொதுவாப் பேசினா எப்படிடி? உனக்குப் பொருத்தமான வரன் என்று பார்த்து 100 சதவீதம் நாங்க திருப்தியானப்பறம் தான் உனக்குச் சொல்றோம். […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 5)

Filed in கதை, வார வெளியீடு by on December 24, 2017 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 5)

* பாகம் 4  * “என்னம்மா நீங்க… உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க போலிருக்கு…? அவசரப்பட்டுட்டீங்களே?” – டச்சப் பார்கவி ஆறுதலாய் முன் வந்தாள். “ஆமா…. அவன் அழகு நடிப்புங்கிறதைக் கூட மறக்கடிச்சிடுதுப்பா…. ஒரு சிரிப்புச் சிரிக்கிறான் பாரு…. கண்ணை மயக்கி, உதட்டைச் சுழிச்சி… அந்தச் சிரிப்பு வெறும் நடிப்பில்லைப்பா…. உண்மைலயே எம்மேலே அவனுக்கு ஆசை  இருக்குன்னு தோணிடிச்சு….. அவன் அணைக்கிறபோது நடிப்புங்கிறதையே மறந்திடுறேன் நான்…. எதுக்காக அவன் மேலே இப்டி ஆசை வந்திச்சின்னே தெரில….. ஆனாலும் நடிக்கிறபோது சில்மிஷம்ங்கிறது ஓவர்…. […]

Continue Reading »

சுதந்திரம் ஒரு முறை தான்

Filed in கதை, வார வெளியீடு by on December 17, 2017 0 Comments
சுதந்திரம் ஒரு முறை தான்

  “சார்ள்ஸ்டன் கரோலைனா” என்னும் ஊரில் “கெனத்” எனும் இளைஞன் புகையிலைகள் மத்தியில் கொட்டும் வெய்யிலில் களை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாதங்கள் மண்ணில் வெறுமையாகப் பரவியிருந்தன. கருங்கல் போன்ற தோல் உருவம், அடர்த்தியற்ற கருமைத் தலைமுடிகள்… அவன் வியர்வைத் துளிகள் வெய்யிலில் உலர்கின்றன. துணிமணி இல்லாத… ஆங்காங்கே கை, கால், முதுகு, தொடை என பல இடங்களில் காயத் தழும்புகள் கொண்ட பரிதாப இளம்  உடல். ஆமாம் பாவம் ‘கெனத்’, அவன் ஒரு வெள்ளை எசமானது […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad